கொழும்பில வாத்தியார்

கொஞ்சம் உஷார்


சும்மா சொல்ல கூடாது எங்கட வாத்தியார் பிளேன்ல ஏறி வரும்போது கொஞ்சம் பயந்து போனார் எண்டது உண்மைதான்.ஏன்னெண்டால் அது முதல் பயணம் தானே.
முதன்முதல் பிளேன்ல ஏறும்போது யாருக்கு தான் பயம் வராது.அந்தரத்தில பறக்க போகுது எண்டால் யாருக்கும் தான் பயப்பீதி வராது.மற்றும்படி அவர் பயந்தது மாதிரி நினைக்கதேவையில்ல.
ஏனெண்டால் "அவர் ஊரில படிப்பிக்கேக்க எத்தினை பொடியள் பயந்தவங்கள்,அந்த ஆள் பிரம்பும் கொண்டு ஒரு நடையும் நடந்து வந்தார் எண்டால் தோளுக்கு மேல வளந்த பொடியளும் பயந்து சத்தம் போடாமல் ஒதுங்கி போய் இருப்பாங்கள்".
யாழ்ப்பாணத்தில இருந்து பிளேன் ஏறி வர எத்தனையோ பதிவுகள்,அனுமதிகள், அது இது எண்டு படுற கஷ்டத்தில பேசாமல் இருக்கலாம் எண்டு இருந்திருந்து வாத்தியார் மட்டுமில்ல எல்லாருக்கும் பிளேன் ஏறி வாறதில கொஞ்சம் தயக்கம்.

அது மட்டுமில்ல வாத்தியார் பள்ளிக்கூடத்தில படிப்பிக்கிறதும் மேலதிகமாக வீட்டிலையும் ஊர் பொடியளுக்கு படிப்பிக்கிறதும் எண்டு அவருடைய காலமும் போய்விட்டுது.அதனாலே அவர் கொழும்புக்கு வாற தேவையும் இருக்கவில்லை.அப்படி அவர் படிப்பித்ததால் ஊரில நல்ல பெயர் எடுத்தவர் வாத்தியார்.
அவர் கொழும்புக்கு போறார் எண்டு எல்லாரும் வீடுக்கு குசலம் விசாரிக்க போனவை .
ஏனெண்டால் அவர் கொழும்புக்கு போய் அப்பிடியே அவரிடைய மகள் லண்டனில இருக்கிறாள்,அங்க போகபோறார் எண்டு தான் ஊராவீட்டு ஆக்கள் எல்லாம் வந்தவை அங்கங்கு ஒவ்வொரு பிஸ்கட் பெட்டியும் வாங்கிக்கொண்டு,
இதை ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறார் வாத்தியார் கொழும்பில." எங்கட சனம் இந்த பிஸ்கட் பெட்டியும் இல்லாவிட்டால் மற்றவை வீட்டுக்கு விருந்தினராக போக மாட்டுதுகள் " எண்டு மனதுக்குள் சிரிச்சுக்கொண்டு வாத்தியார் இருக்கிறார். .

வாத்தியாருக்கு கொழும்புக்கு வாறது எண்டால் கொஞ்சமும் விருப்பமில்ல.
ஏன்னெண்டால் ஊரில அக்கம் பக்கம் சனத்தோட சந்தோசமாக உல்லாசமாக கதைச்சு கொண்டு இருந்தவருக்கு இங்க வந்து யாருமே தெரியாத ஊரில வந்திருக்கிறதெண்டால் அவருக்கு கொஞ்சமும் பிடிக்கேல்ல.
ஆனால் மகள் பதினைந்து வருஷத்துக்கு முதல் லண்டன் போன பிறகு அவளுக்கு இருக்கிற அந்தஸ்த்து அங்க கிடைச்சபிறகு "வாங்கோ வாங்கோ" என்று குடுத்த கரைச்சலால் தான் வெளிக்கிட்டு வந்தவர்.
மற்றும்படி அவருக்கு கொழும்பு வாழ்க்கை சிறை வாழ்க்கை எண்டு தெரியாதே? இரண்டு காலும் நீட்டி நிம்மதியாக படுக்க முடியாது எண்டு அடிக்கடி அந்த காலம் பகிடி விட்டு கதைக்கிறவருக்கு தெரியாதே கொழும்பு வாழ்க்கை அப்பிடித்தான் எண்டு.
உண்மையாக அவர் வந்த காரணம் வயதும் போய்க்கொண்டு இருக்கு அதுக்கு முதல் அந்த செல்ல மகளை பார்க்க வேண்டும் அதோட தன்னுடைய பேர்த்தி மாரையும் பார்க்க வேணும் ஏன்டா ஆர்வம் தான்.

வாத்தியார் கொஞ்சம் கூட பகிடி விடுற ஆள்.எங்கு போனாலும் தன்னுடைய பகிடியால கொஞ்ச பேரை நட்புவட்டத்துக்குள்ள கொண்டு வந்து விடுவார்.அதால வாத்தியாருக்கு போற இடத்தில போர்(பஞ்சி) அ(பி)டிக்காது.எப்பிடியும் ஒரே கலகலப்பாக தான் இருப்பார்.
அப்பிடியே கதைச்சாலும் அவர் கொழும்பில ஏமாத்தி போடுவாங்கள் எண்டு எப்பவும் கவனமாக தான் இருப்பார்.ஏனெண்டால் மகள் லண்டனில இருந்து ஒவ்வொருநாளும் தொலைபேசி அழைப்பு எடுத்து பேசினபடி.
"அப்பா அங்கினை இங்கினை வாய் பார்த்துக்கொண்டு நிண்டால் யாரும் வந்து காசுக்காக கொண்டு போடுவாங்கள்"
எண்டு மகள் எப்பவும் ஓதிக்கொண்டே இருக்கிறது....... அதைநினைச்சு நினைச்சு வாத்தியார் ரொம்ப உஷார் பாருங்கோ.


வாத்தியார் வருவார்............

பெறுமதி இழக்கும் ஆயிரம் ரூபா




ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாவினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கும் காலம் இருந்தது. இப்போது அதற்கு பெறுமதி இல்லாமல் போகும் தன்மை காணப்படுவதாக எல்லோரும் கதைப்பது கேட்க முடிகிறது.அதன் பின்பு தான் எனக்கு இதையும் மேலோட்டமாக அலச எண்ணம் தோன்றியது.
முந்திய காலங்களில் எல்லாம் ஐந்நூறு ரூபாவை குயில் என்றும் ஆயிரம் ரூபாவை மயில் என்றும் கூறி அதற்கு ஒரு சிறப்பிடம் கொடுத்துவந்ததை யாரு மறக்க முடியாது.
அதாவது ஒரு வேலை செய்யச்சொன்னால் "ஒரு மயில் இருந்தால் அல்லது தந்தால் இலகுவாக முடித்துவிடலாம் " என்று மற்றவரை கிண்டலாக சொல்லுவதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் இன்று ஆயிரம் ரூபாவை எடுத்தால் ஏதாவது ஒரு அத்தியாவசிய பொருள் வாங்கிவிட்டாலே அது மாற்றிய காசாக மாறி அதன் வலுவிழந்துவிடுகிறது. "சும்மா நூறு ,இருநூறு கிராம் சாமான் வாங்கினவுடனேயே ஆயிரம் ரூபா மாயமாக மறைஞ்சு போச்சே " இது சந்தையில் கதைக்கும் அம்மாமாரின் கருத்து.
""அந்த காலம் பத்து ரூபவுக்குள்ள மதிப்பே இல்லாமல் போச்சே,பத்தாயிரம் ரூபா கூட ஒரு மாத செலவுக்கு காணாமல் இருக்கிறதே" எண்டு தலையில் கை வைக்கும் ஆடவர் கூட்டம்.
இப்படியே எங்கு கேட்டாலும் எவ்விடத்தில் கேட்டாலும் ஆயிரம் ரூபாவின் தன்மை இழந்துவிட்டதை சொல்லி எல்லோரும் புறுபுறுப்பதை கேட்கலாம்.
இவையெல்லாம் ஆயிரம் ரூபா பெறுமதி இழந்துகொண்டு செல்வதையே எடுத்துக்காட்டுகின்றது என்று கூறலாம்

காலிமுகத்திடலில் பனைகள்









யாழ்ப்பாணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று பனை ஆகும். இந்த பனை ஒரு கற்பகதருவாக இருப்பது உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்று தான் .அதன் பனங் கிழங்கு என்பதிலிருந்து அதன் பனையோலை வரை மனிதனுக்கு பலவழிகளில் உதவுவனவாகத்தான் அமைந்திருக்கிறது.

தென்னிலங்கையிலிருந்து யாழ் வரும் விருந்தினர்கள் அல்லது பயணிகள் எல்லோரும் பனையின் பயனை அனுபவிக்காமல் வீடு திரும்பமாட்டார்கள். பனங்கள்ளை சுவைக்க அவர்கள் எந்த மூலைக்கு சென்று வரவும் தயங்கமாட்டார்கள். ஏனென்றால் "அவர்களுக்கு இங்கு கித்துள் கள் தான் கிடைக்குமாம். அத்துடன் பனங்கள்ளின் சுவையே தனியாம்" இது தென்னிலங்கை மக்களின் கருத்து. இந்த பனங்கள்ளின் சுவையறிந்தது மட்டுமல்லாமல் பனையின் பல்வேறு பயன்களையும் அறிந்து அதை தென்னிலங்கையே கொண்டுவந்தால் தமக்குச்சரி என்று எண்ணியோ அல்லது இதற்காக யாழ்ப்பாணத்தை நம்பியிருக்கக்கூடாது என்று சிந்தித்தோ என்னவோ அதை கொண்டுவர வேண்டும் என்று விரும்பியிருந்திருக்கலாம் தென்னிலங்கை. பெரிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது போல காட்சிப்படுத்தி அதை காலிமுகத்திடலில் நாட்ட தீர்மானித்தார்கள். உல்லாச பிரயாணிகளை கவரும் என்ற அடிப்படையில் காலிமுகத்திடலில் நாட்ட பெரிய திட்டம் . யாழ்ப்பாணத்திலிருந்து பனையோடு அதற்குரிய மண்ணையும் கொண்டுவந்து நாட்டினார்கள். அது மிகக்கஷ்டப்பட்டு தான் மெல்ல மெல்ல வளர்ந்து சில சந்தர்ப்பங்களில் பட்டுப் போகும் நிலையில் காணப்படுகிறது என்பது தான் உண்மை. அந்த பனையே யாழில் இருந்திருந்தால் அது விறு விறு என்று வளர்ந்து இப்போது கள் இல்லை சகல பயனும் அனுபவித்திருக்கலாம்

அதுதான் எங்கெங்கு என்னென்ன வளர முடியும் என்று விதிமுறை இருக்கிறதல்லவா? அதெனடிப்படையில் என்ன தான் குறிப்பிட்ட பிரதேச வளங்களை வேறு எங்கும் எடுத்துச்சென்று அதனை பயன் தருமாறு திணித்தாலும் அதன் பயன் அனுபவிப்பது கடினம். மாறாக அதனை பராமரிக்க வேறு விதமாக செலவழிக்க வேண்டிவரும் என்பது புரிந்திருக்கும்

கலகலக்கிய கப்பல் பயணம்

இதை கேட்டவுடன் கலகலப்பாக , சந்தோசமாக அமைந்த பயணம் பற்றி சொல்லப்போறன் எண்டு மட்டும் நினைக்க வேண்டாம், எல்லா வயிறும் கலங்கி, நெஞ்சு பதறி, உயிரையே கலக்கி வந்த பிரயாணக்கதைதான் அது.
அன்று நான் நினைகின்றேன் ஒன்பது மணி இருக்கும் என்று . சூரியன் வானொலியில் ஒரு அறிவிப்பு. யாழ் மக்கள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு தான் அது. ஏனென்றால் 2006 ஆவணி மாதம் திடீரென்று ஏ9 பாதை பூட்டு போட்டவுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து வெளியிலே செல்ல முடியாமல் முடங்கி போயிருந்தனர் மக்கள். தொழில்களில் விடுமுறை பெற்றும் பல்கலைகழகங்களில் விடுமுறை பெற்றும் மற்றும் உறவினர்களை பார்க்கவும் வந்திருந்த அந்த மக்கள் எதிர்பாத்த அறிவிப்பை சூரியன் எப். ம். வாமலோசனின் குரலால் வானலைகளில் தருகின்றது.

"இன்று காங்கேசன்துறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று பயணமாக உள்ளது. யாழிலிருந்து வரவிருக்கும் பயணிகள் உங்கள் பயணங்களுக்கான ஆயத்தங்களுடன் சிங்கள மகாவித்தியாலயம் வருமாறு வேண்டப்படுகின்றீர்கள்"

இது யோதியின் காதுக்கும் எட்டியது.
யோதி அப்ப நெல்லியடியில நிண்டவன். போன வேகத்தில கிளவிதோட்டத்துக்கு சைக்கிளை திருப்பிக்கொண்டு ஓடிக்கொண்டு போறான். வழியில அவன்ட நண்பர்கள் "என்னவாம் கப்பல் ஓடுதாம்........ என்ன போறதுக்கு ஆயத்தமோ?" , "இதெங்க ஓடுறது.... இப்பிடித்தான் எத்தனை நாள் சொல்லி போட்டாங்கள்..... " என்று எத்தனையோ எத்தனையோ உரையாடல்கள், இதெல்லாம் சைக்கிளை உதைத்து உதைத்து ஓடி ஓடி கதைத்த வரிகள். இதில யோதியின் நண்பர்களில் செல்லம் சீலன் நெல்லியடி தபால் அலுவலகத்திக்கு முன்னால கண்டவை. இவையோட கொழும்பில இருந்து போயிருந்த ரஜீவனும் வந்து கொண்டு இருந்தவர். அவருக்கு கப்பல் ஓடுற விஷயம் அப்ப யோதி சொல்லுறபோதுதான் தெரியும். "அட அட அப்பிடியாமே........., இஞ்சை விடுங்கடா..." என்று சந்தைக்கு வெளிக்கிட்ட ரஜீவன் யோதியுடன் இணைந்து கிளவிதொட்டம் போக ஆயத்தம்.
" "இனி வெளிக்கிட்டு...., யாழ்ப்பாணம் போய்...., அங்க பெருவாரியாக சனம் நிக்கும்..., அதுக்குள்ளே நீங்க போறது சந்தேகம் தான்..., எண்டாலும் போயிட்டு வாங்கோ " " இது செல்லத்தின் நக்கலான வரிகள். சரி என்று கூறிவிட்டு ரஜீவனோடு யோதி வீடு போனது தான் ஏதோ கைக்கு எட்டிய உடுப்புக்களையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு யோதியின் நண்பர்கள் எல்லாம் ஒரு வாகனம் ஒழுங்குபடுத்திக்கொண்டு கிளவிதோட்டத்தில தாசனையும் ஏத்திக்கொண்டு புலோலி ,மந்திகை, பருத்தித்துறை கடைசியாக நெல்லியடியில் நிசுவையும் ஏத்திக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வாகனம் ஓடுது. அப்ப சரியாக 11 மணி , பிந்திப்போச்சு எண்டு எலோருடைய வாயும் ஆளுக்கு ஆள் புறுபுறுத்துக்கொண்டிருக்க வாகனமும் வேகமாக ஓடுது.

மூத்தவிநாயகர் கோவிலுக்கு கிட்ட முதல் ஆரம்பம்;
வாகனப்பயணம் தானே எல்லாரும் பாட்டு பாட ஆயத்தம் எண்டு மட்டும் நினைக்க வேண்டாம். முதலாவது சோதனை ஆரம்பம். சோதனை எண்டால் பயணிகள் கொண்டு போற பயணப்பொதி பரிசோதனை. சோதனைக்கு வாகனம் மறிக்க அதை டிரைவர் கவனிக்க இல்லை. கடைசி நேரத்தில தான் கவனிச்சுபோட்டு மறிக்க ஆமிக்காரனுக்கு கோவம் வந்திட்டுது, "வாகனத்தை தொடர்ந்து பயணிக்க விடமாட்டன்" எண்டு ஆமிக்காரன் சொல்ல, யோதியும் நிசுவும் சும்மா கொஞ்சம் சிங்களம் தெரியும் எண்டதால வாயை குடுத்து கதைக்கினம். "இல்லை சேர் நாங்க கொழும்புக்கு போறதுக்கு போறம், கப்பல் இண்டைக்கு ஓடுதாம் அதால கொஞ்சம் வேளைக்கு போகவேணும் " எண்டு தங்களுக்கு தெரிஞ்ச சிங்களத்தால ஒருமாதிரி சொல்லி முடிச்சினம். அது மட்டும் இல்லாமல் " டிரைவர் விட்டது பிழை தான்" எண்டும் கொஞ்சம் சொல்லி சமாளிக்க, ஆமிக்கு கொஞ்சம் புளுகம். ஒருமாதிரி எங்களை விட சம்மதிச்சாலும் கப்பல் உண்மையாக தான் ஒடுதோ எண்டு அவனுக்கும் சந்தேகம், இருந்தாலும் இந்த யோதி, நிசுவின் சிங்களத்தில் ஒரு நம்பிகையில "சரி எல்லாரும் போய்விட்டு வாங்கோ, ஆனால் டிரைவர் இந்த பாதையால திரும்பி வரேக்குள்ள நான் பார்க்கிறன் " எண்டு சொல்லி அனுப்பி வைச்சான். "அப்பாடி ஒருமாதிரி விட்டுபோட்டான் , ஆனால் அவனுக்கே கப்பல் ஓடுறது சந்தேகம் மாதிரி இருக்கு இக்கணம் வாகனமும் பிடிச்சுக்கொண்டு போறம், என்ன நடக்குதோ தெரிய இல்லை" எண்டு தேவமலர் அன்டி பின்னுக்கு இருந்து சொல்ல "அது சூரியன் சொன்னது தானே அவங்க சும்மா சொல்ல மாட்டான்கள்" இது அங்கிருந்த இளவட்டங்களின் நிச்சயப்படுத்தும் கருத்து இது , இத்தனைக்கும் வாகனம் ஓடிக்கொண்டே இருக்கு. தொடர்ந்து வல்லை வெளி, வல்லை பாலம் , கோப்பாய் எண்டு பல சோதனைகளை தாண்டி வாகனம் பறக்குது எண்டு தான் சொல்ல வேணும். ஏனெண்டால் பிந்திப்போச்ச்சு. பிந்திக்கொண்டு போனாலும் வாகனத்துக்குள்ள நக்கலுக்கும் குறைவில்லை. யோதி, நிசு கதைச்ச சிங்களத்துக்கு தான் அங்க நக்கல் கூட, "என்னத்த இவங்கள் கதைசான்களோ தெரியாது சிம்பிளாக அவங்களும் விடுறாங்கள்" என்று ஒருவர் நக்கல் பண்ண , மற்றவர் "இவங்கள் கதைகிறான்களோ இல்லையோ கொஞ்சம் கூடச் சிரிகிறானகள்" என்று எல்லாம் ஒரே நக்கல் அடிச்சு ஒரே சிரிப்பொலிகள், "தம்பிமாரே சிரிப்பை நிப்பாட்டுங்கோ இப்ப என்ன கஷ்டப்பட போறீங்களோ தெரியாது " இப்படி தேவமலர் அன்ட்டியும் ராஜேஷ் அன்டியும். இப்படியே கதைச்ச்சு கதைச்சு கொண்டிருக்க சிங்கள மக வித்தியாலயம் வந்த உணர்வு. ஏனெண்டால் சனத்தை கண்டாச்சு. சரி வந்திட்டுது எண்டு எல்லாரும் சொல்ல டிரைவர் "கொஞ்சம் பொறுங்க இன்னம் எவ்வளவு சுத்தி போக வேணும்....... இந்த பக்க தடை போட்டு மறிச்சு இருப்பானகள் " எண்டு சொன்னார், "சரி எண்டு டிரைவரும் சுத்திவளைச்சு ஓடி வரிசை தொடங்கும் இடத்தில விட எல்லாருக்கும் அரோகரா சொல்லிப்போட்டு வீட்ட போகலாம் எண்டு தான்
எண்ணம். ஏன்னென்றால் அவ்வளவு சனம் .வல்லிபுரகோவில் தீத்தக்கரை பரவாயில்ல, சனம் கொஞ்சம் பரவி இருக்கும், எம்பெருமானை எங்கிருந்தும் பார்க்கலாம். இது டிக்கெட் கொடுக்கும் இடம் ஒரு இடம் சனத்தின்ட வரிசையோ எங்கெங்கு ஒழுங்கை எல்லாம் போகுதோ அங்கெலாம் வளைந்து வளைந்து போகிறது. என்ன செய்யலாம் எண்டு எல்லோருக்கும் ஏக்கம், அப்ப யோதியின் இன்னொரு நண்பன் ஏழாலை மதி அங்கு வந்திருதவன். அவன் யோதி நிசு எல்லாம் ஒன்டாக படிக்கிறதால அது சம்பந்தமான ஒரு கடிதம் ஒண்டு எல்லாருடைய பெயரும் போட்டு பணிப்பாளரிடம் கையெழுத்து வாங்கி கொழும்பில தயா மூலமாக தொலைநகல் எடுத்து வைச்சிருந்தவை, இதை முதலே திட்டம் போட்டு மதி யோதி எடுத்து வைத்ததை தூக்கிக்கொண்டு யோதியும் மதியும் முன்னுக்கு போகினம். முன்னுக்கு போறது கஷ்டம் எண்டாலும் போறதுக்கு 2 பேரும் திடசங்கற்பம். போகப்போக ஆமிக்காரன் "பின்னுக்கு போங்க பின்னுக்கு போங்க " எண்டு கொடடன் கொண்டு வர்றதும், "இல்லை மாத்தையா இல்லை மாத்தையா" எண்டு மன்றாடி முன்னுக்கு போறதுமாக இருக்கும்போது யோதியின் நல்ல காலம் ஆமி பிரிகேடியர் அந்த இடம் வந்தது, வந்ததும் அத்தாட்சிபடுத்திய கடிதம் கொண்டு வந்த சனமெல்லாம் தங்களை உறுதிப்படுத்தி பிரயாணத்தை விரைவு படுத்த ஒரே அல்லோலகல்லோலம். அதுக்குள் யோதியும் ஒருவன் அவனோட மதியும். யோதிக்கு ஒரு கட்டத்தில 'பேசாமல் போகலாமோ'
என்று அலுப்புத்தட்டினாலும் விட்டு விலத்த முடியாத நிலை.ஏனென்றால் பின்னுக்கு மதியின்ட அப்பா பின்னுக்கு இருந்து தள்ளி தள்ளி விட்டு ஒரே உத்வேகம். இப்படியே இருக்க ஒரு மாதிரி யோதியின் கடிதம் பிரிகேடியர் கையில். என்ன இது எண்டு கேட்க யோதி சிங்களத்தால விளக்கம்."சி சி இது சரி வராது 36 பெரும் போறது எண்டால்............. "எண்டு மறுத்து விட்டது பிரிகேடியரின் வாய். திரும்பவும் யோதி மதி தொடர்ந்தும் மன்றாட்டம் "உண்மையாக இந்த கடிதம் அரசாங்க அதிபருக்கும் அனுப்பினது" எண்டு அரசாங்க அதிபருக்கு முகவரியிடப்பட்டத்தை யோதி பிரிகேடியருக்கு காட்ட "அப்பிடி எண்டால் அவரோட தான் கதைக்க வேணும்...... " பிரிகேடியர் நழுவி விட்டார், அப்ப சரி எண்டு சொல்லி போட்டு அரசாங்க அதிபர் திரு.கணேஷ் கிட்ட போக முயற்சி. அதுக்கு ஆமித்தடை விட்டால் தானே. "இல்லை இல்லை பிரிகேடியர் தான் கதைக்கச் சொன்னவர் " எண்டு தடை போடும் ஆமிக்காரர்களுக்கு ஒவ்வொன்றாக சொல்லிச்சொல்லி ஒரு மாதிரி கிட்ட போனால் அந்தாளும் "36 பேரு ஒன்றாக போனால் மற்றவை எல்லாரும் என்ன செய்யுறது " எண்டு மறுப்பே பதில். எண்டாலும் யோதி மன்றாட கொஞ்ச நேரம் இந்த இடத்தில நில்லுங்க பார்ப்பம் எண்டு சொல்லிபோட்டு அந்த ஆள் கொஞ்ச நேரம் போக காண இல்ல.'அது சரி அந்த ஆளும் என்ன செய்யுறது......இவ்வளவு சனம் நிண்டால் ஒரேயடியாக 36 பேருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க முடியாது தானே "எண்டு யோதி மனதில் நினைத்துவிட்டு,, அந்த இடத்தில யோதிக்கு ஒரு திட்டம் வந்து அதை நிறைவேற்றகூடியது மாதிரி எல்லா வேலையையும் முடிச்சு போட்டு வெளியில போறான்.அந்த திட்டத்தின் வழியில் எல்லாரையும் வரச்சொன்னான் யோதி. அதுக்கு மதியும் ரஜீவனும்தான் சம்மதம். நிசுவும் முயற்சி எடுத்து அது பலனளிக்கவில்லை. சரி யோதியோடு மதி,ரஜீவன் மூன்று பேரும் உள்ளுக்குள் போய்விட்டினம். மற்றவர்கள் "முதல் போற கப்பல் தானே எப்பிடி போகுது எண்டு பார்த்துப்போட்டு பிறகு ஏறுவம் " என்றும் "என்ன நடக்குதோ தெரியாது.... பயம் தானே"என்றும் சொல்லி பயணம் தேவை இல்லை எண்டு வீட்டுக்கு திரும்பிவிட்டினம்
ஆனால் உள்ளுக்குள் போக போட்ட திட்டம் மட்டும் என்ன எண்டு மட்டும் கேட்டு போடதீங்கோ. ஏனென்றால் இப்பவும் அப்பிடி யார் யாரோ வாறதகக்கேள்வி. இப்படியே உள்ளுக்குள் போனாலும் இண்டைக்கு ஏத்துவாங்களோ.... இல்லையோ.... எண்டு அப்பவும் நம்பிக்கை இல்லை.அப்பவும் செல்லம் தபால் அலுவலகத்துக்கு முன்னாலை நக்கல் அடித்த வரிகளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தான் ரஜீவன். கொஞ்ச நேரம் போக திரும்பவும் பயணப்பொதி பரிசோதனை, அடையாள அட்டை பரிசோதனை, அடையாளப் பதிவு எல்லாம் முடிச்சு எல்லாரையும் பஸ்ஸில ஏத்தியாச்சு. அப்ப சரியாக 4 மணி. ஒரு மணித்தியாலம் பஸ்ஸுக்குள்ள நிக்க வைச்சு பிறகு அதுவும் ஓட ஆரம்பிக்கிறது. அது பருத்தித்துறை போகுதோ காங்கேசன் துறை போகுதோ எண்டு எல்லாரும் யோசிக்க அது கே.கே.ஸ் வீதியில போக எல்லாருக்கும் எங்க போகுது எண்டு நிச்சயமாகி விட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த பஸ்ஸில போற எல்லாருக்கும் ஆமிப்பாதுகாப்பும் கொடுத்துத்தான் அனுப்பி வைச்சது. ஒரே ஓட்டமாக ஓடி அது ஒரு பாடசாலையில மறிக்கப்பட்டது. என்ன பாடசாலை எண்டு யோதிக்கோ அல்லது அவனோட போன ரஜீவனுக்கோ தெரியாது.
அங்கயிருந்த ஆக்கள் அது தெல்லிப்பளை யூனியன் கல்லூரி எண்டு கதைச்சதை மெல்லவாக கேட்டு தெரிஞ்சு கொண்டான் யோதி. 6 30 மணிக்கு அங்கு இறக்கிவிட்டு 'எப்ப எத்தினை மணிக்கு பிரயாணம்' எண்டு யாரையும் கேட்டால் யாருக்கும் தெரியாது. "இரவிரவாக இங்க தான் படுக்கையாம் " "கப்பல் ஏதோ இறக்கி கொண்டு இருக்குதாம் அதுக்கு பிறகுதானாம் பயணம் " எப்ப போறது எண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக சொல்ல மாட்டாங்களாம்........., திடீரென்று எத்துவாங்கலாம்..... " என்றெல்லாம் அங்கும் இங்குமாக கதைகப்படுவது யோதியின் காதுக்கும் கேட்கிறது. "என்னவோ ஏதோ கொண்டு வந்தவங்கள் எப்பிடியோ கூட்டிக்கொண்டு போவாங்கள் தானே " எண்டு யோதி மனசுக்குள் எண்ணிக்கொண்டே இருக்கிறான். இரவு ஏதோ கொஞ்ச சாப்பாடு ஆமிக்காரன் கொடுக்க அதையும் கொஞ்சமாக சாப்பிட்டுபோட்டு எல்லோரும் அங்கும் இங்குமாக கூடி கூடி கதைச்சு கொஞ்ச நேரம் படுக்க இரவு 2 மணி இருக்கும் எல்லாரையும் நித்திரையால எழுப்பி ஆயத்தப்படுத்த சொல்லியாச்சு. திரும்பவும் பயணப்பொதி பரிசோதனை,அடையாள அட்டை பரிசோதனை, பதிவுகள், அதுமட்டும் இல்லாமல் ஒரு உறுதி மொழி கையெழுத்தும் வாங்கப்படுகிறது அதாவது "பயணத்தின்போது வரும் எந்தவிதமான இழப்புக்களுக்கும் சம்மந்தப்பட்டவர்களே பொறுப்பாளிகள், உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதை சம்மந்தபட்ட பிரயாணியே ஏற்க வேண்டும் "என்று. இதை வாசித்தவுடன் யோதிக்கு கலக்கம் இதில கையெழுத்து வைக்காமல் விட்டால் கொழும்பும் இல்லை திருகோணமலையும் இல்லை எண்டு யோதி நினைச்சு ஒருவாறாக பதறிப்பதறி கையெழுத்தை வைச்சிட்டு பஸ்ஸில் ஏறுவதுக்கு பிறகு ஒரு வரிசை. அதுக்கு பின்னால ரஜீவன் , மதி. சனம் எல்லாம் முண்டி அடிச்சு பஸ்ஸில் ஏறுதுகள். அதோட யோதி குழுவும் ஏறியது. பஸ் திரும்ப ஓடுது. துறைமுகத்தை நோக்கி பஸ் ஓடிக்கொண்டே இருக்கு;

துறைமுகத்துக்கு ஓடும்போது சனம் எல்லாம் விடுப்பு பார்க்குதுகள். "அது தான் அந்த பழைய தொழிற்சாலை இதெல்லாம் இருந்திருந்தால் எங்கட நாடு எப்பிடியெல்லாம் முன்னேறி இருக்கும் " எண்டு வயதானவர்கள் தங்களுக்குள் கதை. "என்ன செய்றது இது தான் தமிழனின் தலை எழுத்து " "இல்லாட்டில் இவ்வளவு கஷ்டப்படுங்களோ" எண்டு பயண கஷ்டத்தை நினைவுபடுத்திக்கொண்டும் சனங்கள். இப்படியே கதைக்க கப்பலுக்கு கிட்ட பஸ் வந்திட்டுது. ஒருத்தர் பிடிச்சு பிடிச்சு ஆக்களை கப்பலுக்குள் ஏத்துகின்றார்.
கப்பலுக்குள் ஏறும்போது எல்லாருக்கும் செவ்விளநிக்கலரில ஏதோ
கொடுத்தாங்கள், அது ஆபத்தில நீந்திறதுக்காக எண்டு என்று யோதி கேட்டு தெரிஞ்சு கொண்டான் . பொடியள் எல்லாம் அங்க போறதும் இங்க போறதும் ஓடித்திரியுறாங்கள். இத்தனைக்கும் அது பலசரக்கு கப்பல். "வழமையாக திருகோணமலையிலயிருந்து சாமான் கொண்டு வந்து...., எல்லாம் இறக்கிபோட்டு..., யாழ்ப்பாணத்தில இருந்து ஏதும் பாரத்துக்கு போட்டுக்கொண்டு போறவங்கள் இந்தமுறை சனத்தை போட்டுக்கொண்டு போறாங்களோ?......... " என்று தாத்தா குழு ஒண்டு கதைச்சுக்கொண்டு இருக்கு. இதெல்லாத்தையும் யோதியும் காது குடுத்து கேட்டுக்கொண்டு எங்க இருக்கலாம் எண்டு யோசிக்கின்றான். இருக்க எல்லாம் சொகுசுக் கதிரை ஒண்டும் இல்ல. முன்னுக்கு இருந்தால் எல்லாம் பார்க்கலாம் எண்டு நினைச்ச யோதி குழு கொண்டு போன பயணப்போதியை தலையணை போலவும் சின்ன புட்டி மாதிரி ஒன்று இருந்துது, அதையும் பிடிச்சுக்கொண்டு இருந்தாச்சு. சரியாக கப்பல் 6 30 மணிக்கு வெளிக்கிடுது மாதிரி உணர்வு. என்னெண்டால் கப்பல் அசையுது.
கொஞ்ச நேரம் போக கப்பலுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது. எல்லாரும் நங்கூரம் எடுக்கிற சத்தம் தான் எண்டு சொல்லுறது யோதிக்கும் கேட்கிறது. அப்படியே கப்பலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் திசை திருப்பும் போது கப்பல் வெளிக்கிடுகிறது எண்டு எல்லாரும் தம் தம் கடவுளை வேண்டுகின்றனர். கப்பலும் ஓட ஆரம்பிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்தை நோக்கி கப்பலிலிருந்து சக்திமிக்க ஒளியை அனுப்பியபடி சிறிதுசிறிதாக வேகத்தைக்கூட்டி கப்பல் ஓடுகிறது. சனம் எல்லாம் புதினம் பார்க்குதுகள். சிறிது தூரம் உள்ளே போனவுடன் யோதி யாழ்ப்பாண கரையோர அழகாய் கண்டு வியந்தபடி மதி,ரஜீவனுடன் பம்பல் அடிச்சுக்கொண்டு கப்பலின் கரையிலே நிக்கிறான். கடலில் ஓடும் மீன்களும் மேலே வந்து போவதும் கப்பல் கடலை கிழித்துக்கொண்டு போகும்போது அதன் நுரைச்செறிவிலே மீன்கள் துள்ளி விளையாடுவதுமாக இருப்பதும் யோதி ரசித்த காட்சிகள். இப்படியாக கப்பலும் நடுக்கடலுக்கு போய் விட்டது. கப்பலின் ஆட்டம் சிலருக்கு ஒத்துக்கொள்ளவில்லை போல. சத்தி எடுப்பதுக்கு முதலின் வயதான பெண்கள் ஆரம்பம். ஒருவரை ஒருவர் பார்த்த படியாக சிலர் சத்தி எடுத்ததை காணக்கூடியதாக இருந்தது. அதற்குள் சில ஆண்கள் வீரப்பேச்சு. இப்படியே கொஞ்ச நேரம் போக கப்பலின் ஆட்டம் ஒரு பக்கம். திறந்தவெளியில் மக்கள் இருப்பது அந்த வேகமான காற்று ஒரு பக்கம் அந்த காற்றோடு கடல் தண்ணீர் உள்ளுக்குள் அடிப்பது ஒரு பக்கம். கரையிலே நின்ற எல்லோரும் தலை முழுக்க முழுக்கு.யோதியும் தப்ப இல்லை. தண்ணி அடிச்சு காற்றும் கூடக்கூட அடிக்க எல்லோருக்கும் சத்தி பரவத்தொடங்கியது. கப்பலோட்டிகள் சத்தியை தவிர்க்க மருந்து கொடுப்பதும் சத்திக்கான போலித்தின் பைகள் கொடுப்பதுமாக ஒரே வேகமாக செயற்பட்டு
கொண்டிருந்தார்கள். யோதியும் அதுக்குள் விதிவிலக்கானவன் ஆகவில்லை.மற்றவர்களை பார்த்து ஒருபக்கம்,கப்பலின் ஆட்டத்தில் ஒருபக்கம் என்று சத்தி எடுத்து ஏலாதவனாகினான் யோதி. பல்லும் பல்லும் மேலும் கீழுமாக டக்டக் என்று அடிச்சது வேகமாக. கை கால் எல்லாம் பதறுகிறது. எழுந்து நிக்க முடியாமல் பதறும் யோதி மற்றவர்களும் கஷ்டப்படுவது பார்த்து " என்ன செய்வது " என்று மெதுவாக தண்ணீர் வீசி அடிக்காத இடம் தேடி மெல்ல மெல்ல நடந்து போகின்றான். அப்போது ரஜீவன் ,மதி எல்லோரும் கஷ்டப்படுவதை அவதானிக்கிறான். இத்தனை கஷ்டத்துக்கும் காரணம் இது பயணிகள் கப்பலாக இருந்திருந்தால் இப்படியாக இருக்காது என்று சனம் கதைப்பது காதில் விழுகிறது யோதிக்கு. மெல்ல மெல்ல நடந்து போன யோதி பயணிகளின் பயணப்பொதி அடுக்கியிருந்த இடத்தில் ஓரிரண்டு பொதியை எடுத்து கொஞ்சம் விலத்தி வைத்துவிட்டு அதனிடையில் சென்று தண்ணீர் படாமல் ஒதுங்கி படுத்திருந்து தூங்கிவிட்டான். சரியாக 2 மணி இருக்கும் தூக்கம் கலைந்த யோதி மதியை,ராஜீவை தேடுகின்றான் . அவர்களை காண இல்லை, "எங்கிருந்து கஷ்டப்படுகின்றார்களோ? "என்று அங்குமிங்கும் பார்த்தால் காண இல்லை. எழுந்து பார்த்தான் எங்கும் கடற்கரை தெரிகிறதா என்று. அதுவும் தெரியவில்லை. என்ன கஷ்டத்துக்கு வந்தமோ என்று மனதில் எண்ணியவனாய் மீண்டும் தூங்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. அப்படியே களைத்தவனாய் இருக்கின்றான். இவ்வளவு நேரமும் சாப்பிடாதுவிட்டாலும் பசி அவனுக்கோ யாருக்கும் வரவில்லை. ஏனென்றால் யாருக்கும் மனம் இல்லை. சரியாக 4 மணி இருக்கும் செல்போனுக்கு கவரேஜ் வந்திட்டுது எண்டு சிலர் கதைப்பது யோதிக்கு கேட்கிறது. சரியாக ஒரு மாத காலம் செல்போனை ஒரு விளையாட்டுபொருளாக பாவித்து வந்த எல்லோரும் அதை இயக்க ஆரம்ம்பிக்கின்றார்கள். எல்லோரும் எடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு தாங்கள் திருகோணமலையை நெருங்கிவிட்டதாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். யோதியும் ரஜீவனும் ஊருக்கு வந்ததை சொல்லி சந்தோசமடைகின்றார்கள். " இன்னும் ஒன்றரை மணித்தியாலம் பிடிக்குமாம் அப்பிடித்தான் கடற்படை சொன்னதாம்" சனம் எல்லாம் கதைக்குதுகள். இப்படியே கதைச்சு கொண்டு இருக்க "எல்லாரும் செல்போனை நிப்பாட்டுங்கோ" என்று தகவல் வருகிறது. கடற்படை "எல்லாரும் கீழுக்கு படுங்கோ" எடும் சொல்லுறாங்கள். எல்லாருக்கும் பயம் பரவத்தொடங்குது. கடற்படை முன்னுக்கு கொஞ்ச ஆயுதம் கொண்டு வந்து பூட்டுறாங்கள். ஒருத்தர் முன்னுக்கு நிண்டு ஏதோ எல்லாம் தொலைவு பார்க்கும் கண்ணாடி பிடிச்சுப்பார்க்கிறார். துப்பாக்கியால் குறி பர்ர்க்கிறார் .
" இதென்ன கஷ்டம் கடவுளே எல்லாரையும் படுக்கவைச்சு சண்டை பிடிக்கப்போறான்களோ" எண்டு சனம் எல்லாம் முழுசிக்கொண்டே இருக்குதுகள். "அம்மாவுக்கும் சொல்லிப்போட்டன் வந்து சேந்திட்டம் எண்டு அவங்கள் துவக்கு பிடிக்கிறத பார்த்தால் இப்போதைக்கு போய் சேர மாட்டம் போல " என்று யோதி மனதில் பயந்து கொண்டான். ரஜீவனுடனும் பகிர்ந்துகொண்டான். ரஜீவனும் " ஒ ஒ இவங்களுக்கு ஏதும் தகவல் வந்து தான் எங்களையும் படுக்க வைச்சு எதோ செய்யுறாங்கள், ஆனால் எங்களை பயப்படவேண்டாம் எண்டு மட்டும் அடிக்கொருமுறை சொல்லுறாங்கள் பார்ப்பம்" எண்டு மெல்லவாக கதைக்கின்றான். இப்படியே போக திருகோணமலை கடற்கரையையும் கப்பல் மெல்ல மெல்ல சென்றடைகிறது. கரையில் எக்கச்சக்கமான செய்தியாளர்கள். கப்பலை படம் பிடிக்கிறாங்கள்.
மெல்லவாக எல்லோரும் இறக்கப்படுகின்றார்கள். எல்லோரும் ஏதோ எல்லாம் பெற்றவர்கள் போல இறங்கி எங்கெங்கு போகவேண்டுமோ அங்கங்கு போய்ச்சேர அந்தந்த பஸில் ஏறிக்கொள்ளுகின்றார்கள். தங்கள் உறவுகளுக்கு தாங்கள் வந்து சேர்ந்த கதைகளை சொல்லிக் கொண்டிருந்தவாறே யோதியின் கொழும்பு பயணம் தொடர்கிறது.