சந்திப்புக்கு தயாராகும் இங்கிலாந்து பதிவர்கள்

தற்பொழுது கிடைத்த செய்தி


இங்கிலாந்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் சந்திக்கும் பிரமாண்டமான பதிவர் சந்திப்பு வெகுவிரைவில் இடம்பெற இருப்பதாக சொல்லப்பட்டது.அதற்கான நாளும் கைகூடிவிட்டதாம்,
எப்போ எப்போ என்ற எதிர்பார்ப்போடு இருந்த பதிவர்களுக்காக 15-12-2010ம் திகதி புதன்கிழமை சந்திப்பு இடம்பெற இருப்பதாக ஏற்பாட்டுகுழுத்தலைவர் தற்சமயம் அறிவித்திருக்கிறார்,
ஆனால் எங்கு இடம்பெறும் என்பது குறித்து பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகள் காரணமாக அறியத்தரப்படவில்லை,
பிரதம மந்திரியாக பிரித்தானிய ராணி அவர்களை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் எழுத்தாளர்களாக திகழும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் மத்தியில் நேரடியாக சந்திப்பதில் வெட்கம் என்று மறுத்துவிட்டார்,அந்த இடத்தை நிரப்ப மூத்த வலைப்பதிவர் மாண்புமிகு வந்தியார் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது,வந்தியார் பிந்தி வந்தால் சற்றும் சிந்திக்காமல் பங்குச்சந்தை கோப்பரேஷன் தலைவர் அவர்கட்கு பிரதம மந்திரியாகும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கபடுகிறது.

ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அன்றைய நாள் கலந்துகொள்ளும் பதிவர்களுக்கு அன்னதானம் வழங்குவார் என்பது இன்னமும் ரகசியமான செய்தியாகவே பேணப்பட்டு வருகிறது.ஏனென்றால் பதிவர்களின் வருகையை மட்டுப்படுத்தலாம் என்பது ஏற்பாட்டுகுழுத்தலைவரின் எதிர்பார்ப்பு,
இப்படியான ஒரு அன்னதானம் என்ற விடயம் இல்லையென்றே அறிவிக்கலாம் என்றுகூட அவர் தன் நண்பர்களுடன் கலந்துரையாடியாதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
அன்னதானம் இல்லை என்றால் நீண்ட நேரம் இடம்பெறும் சந்திப்பில் பசிக்கு என்ன செய்வது என்று தெரியாமலே அங்கு வருவோர் எண்ணிக்கை குறைவடையும் என்று அவர் நம்புகிறார்,
ஆனால் முதற்தடவையாக இங்கிலாந்து மண்ணில் இடம்பெறும் பதிவர் சந்திப்பு ஆகையால் மிகக்கூடுதலான பதிவர்கள் வருவார்கள் என்று பதிவு அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை விரைவுபடுத்தி இருக்கிறார்களாம்,சில பதிவர்கள் வந்த இடத்தில் பாதை தவறிவிட்டதால் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டதாக கவலை கொண்டுள்ளார்களாம்,
ஆனால் ”இனியும் வரலாம் என்ற எண்ணத்தில் லண்டன் Bridge இல் அவர்களுக்கான ஒரு விடுதி எப்போதும் தயாராக இருப்பதாக ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அறிவித்திருக்கிறார்,
உங்கள் வருகையையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார் ஏற்பாட்டு அண்ணை,இதை வாசித்தபின்னராவது இங்கு விரைவாக உறுதிப்படுத்துங்கள்.

பிரதம மந்திரி வந்தியார் அவர்கள் சந்திப்புக்கு முதல் அவருக்கு அருகாமையில் இருக்கும் சிவன் கோவில் வாசலில் 1111 தேங்காய்கள் அடிக்க உத்தரவிட்டிருக்கிறாராம்,அதுமட்டுமல்லாமல் அண்மையில் அவர் கொண்டாடிய பிறந்த நாளுக்கான பரிசாக இதை ஏற்றுக்கொள்வதாகவும் சந்திப்பின் முடிவில் சகலவிதமான உணவுகள் மற்றும் குடிபானங்கள் அடங்கிய நிரல் அட்டவணை மட்டை(Menu card) ஒன்று வழங்குவதாகவும் அதில் பிடித்தவற்றை உண்ண முடியும் என்று சொல்லி இருக்கிறாராம்,
எப்படி உங்களுக்கு கஷ்டம் இல்லையா?? என்று நண்பர்கள் மந்திரியாரை கேட்டபோது ”காசென்ன காசு மனசெல்லோ முக்கியம் என்று புன்னகையோடு சொன்னாராம்”
ஆனால் அது அவரின் பிறந்த நாள் விருந்து என்றும் ஒரு தகவல்,ஆனால் செய்தி வழங்கும் வரை அது உறுதிசெய்ய முடியவில்லை
இன்னும் செய்திகள் கிடைக்கும் போது அவ்வப்போது இங்கு உண்மைச்செய்திகள் வெளிவரும்,


இந்த செய்திகள் எல்லாம் பதிவர்களின் வருகையை அதிகரிக்கபோகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது, நாளை இங்கிலாந்து மண்ணில் சந்திப்பு நடப்பதும் உறுதியாகிவிட்டது,
பதிவர்கள் எல்லோரும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள்,

எது எப்படியோ 15-12-2010ம் திகதி புதன்கிழமை இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது, பதிவர்களாக நீங்களுமிருந்தால் உங்கள் வருகையை தெரிவித்துக்கொள்ளுங்கள்,

15 comments:

கணணி-மஞ்சு said...

joke

SShathiesh-சதீஷ். said...

அண்ணே அந்த தலைவர் யாருங்கோ? நானும் வரலாமா?

அன்பு நண்பன் said...

அண்ணா குறிப்பிட்ட விடயங்கள் உண்மையா//////////??? வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

நானும் கலந்து கொள்ளலாம் தானே.. அன்னதானம்னா லண்டன் என்னா அந்தாட்டிக்காவுக்கே போவமுல்ல

கன்கொன் || Kangon said...

சந்திக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

அருமை...

உங்க பதிவை காண்பதற்காகவே வந்தி அண்ணாவிடம் வாரம் ஒரு பதிவர் சந்திப்பை வைக்கச் சொல்லலாம் என நினைக்கிறேன்...

மதி.சுதா.

நனைவோமா ?

கரவைக்குரல் said...

//கணணி-மஞ்சு//
சிரிப்பு வந்ததா? அவ்வளவே போதும்

நன்றி வருகைக்கு

கரவைக்குரல் said...

//SShathiesh-சதீஷ்//
தலைவர் யாரென்று கேட்டுவிட்டு வராமல் இருக்க மாட்டீர்களே ???????

நீங்கள் தான் முதல் வர வேண்டும்

கரவைக்குரல் said...

//உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan//

சந்திப்பு நடக்கபோவது உறுதி
வருகைக்கு நன்றி

கரவைக்குரல் said...

//யோ வொய்ஸ் (யோகா)//
கட்டாயம் கலந்துகொள்ளுங்கள்

இதற்காகத்தான் ஏற்பாட்டுத்தலைவர் அன்னதானத்தைப் பற்றி அங்கு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார் போலும்

கரவைக்குரல் said...

//ம.தி.சுதா//
நன்றி

பதிவுக்காக பதிவர் சந்திப்பா??
நன்றாகத்தான் இருக்கிறதே

கரவைக்குரல் said...

//கன்கொன் || Kangon//
வாழ்த்துக்களுக்கு நன்றி

வருகைக்கும் நன்றி

Kiruthigan said...

வாழ்த்துக்கள்...

நிரூஜா said...

வாழ்த்துக்கள், சந்திப்பு சிறப்பாக நடக்கட்டும்.

Jana said...

வாழ்த்துக்கள்