ஒரு சிறந்த ஆசிரியர் பற்றி

வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதியில் வடமராட்சியின் புகழ் பூத்த ஆசிரியர் திரு.சின்னையா வல்லிபுரம் அவர்களை வாழ்த்துகின்றது.ஆசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் சிறந்த சிந்தனைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.அதை பார்வையிட எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்ற பகுதியை அழுத்தி அதை பார்வையிடுங்கள்.
தொடர்ந்து ஐந்தாந்தர பரீட்சையில் அகிலஇலங்கைரீதியாக முதலாம் இடம் பெற்ற எம் ஈழத்து மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் அவர் தனது வெற்றிக்குப்பின் கூறிய அவரது எண்ணங்களும் வானம்பாடியில் பகிரப்படுகிறது.
அதனை அழுத்தி பார்வையிடுங்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வாழும்போதே வாழ்த்துவோம்

ஈழத்திருநாட்டில் பல்வேறு திறமைகளோடு பங்கெடுத்து தங்களை ஈடுபடுத்திவரும் அறிஞர்கள்,கலைஞர்கள்,சான்றோர்கள் இன்னும் இன்னோரன்ன துறைகளில் பிரபல்யம் பெற்றோரை வாழ்கின்ற காலங்களிலேயே வாழ்த்த வேண்டும் என்பது கரவைக்குரலின் எண்ணம். அவை அவர்களின் வளச்சிக்கு உத்வேகமாக இருக்கும் அல்லவா? இன்னும் பல விடயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர அது வழிகாட்டும் என்ற எண்ணத்தோடு வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதி ஆரம்பிக்கிறது.
வாழும்போதே வாத்துவோம் என்ற அந்த பகுதி வானம்பாடி என்ற புதிய தளத்தினூடாக வருகிறது.
எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்பதை அழுத்தி அதை நீங்களும் பார்வையிடுங்கள்

ஆம்
நீங்களும் உங்களுக்கு தெரிந்தோரின் தகவல்களோடு உங்கள் பெயர்களையும் குறிப்பிட்டு கீழே வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

karavaikaviyothi@gmail.com

மிஸ் கோல்(Miss call) விளையாட்டு

அவசரமான உலகத்திலே
அவசியமாய் போச்சுதப்பா
அடிக்கடி அலறும் இந்த
கையில் தவழும் தொலைபேசி

பாதையில் போனாலும்
எங்கெங்கு நின்றாலும்
அவசரமாய் தொடர்பெடுக்க
மொபைல் எல்லாம் முக்கியம்
பாதையே தடுமாறி
பாதை மாறிப்போய் யாரையும்
பாதையை கேட்டுவிட்டால்
சந்தேகம் கொள்வர்
ஊருக்கு புதுசு எண்டு
விசாரணைக்கு அழைப்பு வேற
சொன்னாலும் பிழையப்பா
சொல்லவந்த கதை இதுவில்லை

தொலைபேசி கண்டுபிடித்தான் எதற்காக
தொடர்புகொள்ள
தொடர்பெடுத்து உரையாட
தேவைகளை தெரிந்து கொள்ள
அன்பினை பகிர்ந்து கொள்ள
சோகத்திலும் இணைந்துகொள்ள
தூரத்திலிருந்து சொந்தம் கொண்டாட

சொந்தபந்தம் கூடியோருக்கு - இந்த
மொபைல் ஆக்கினையாம்
எப்போதும் அலறியடிக்குதேயென்று
சினம் கொள்வர்
சீறிச்சினந்தாலும்
எந்த மூலையிலும் இப்போ
மொபைல் காதோடு வைத்தபடி
பல கூட்டம்
காதில வைத்து
கதைக்கிறது மட்டுமில்ல
மிஸ் கோல் அடிக்கிறதும் தான்
அதனாலேயும் ஒரு உரையாடல்
"நான் உனக்கு மிஸ் கோல் அடிக்கும்போது
அங்க வா இங்க வா" எண்டு முதலே சொல்லி வைத்து
வந்த பின் ஒருகணமும் தப்பாமல்
ஒன்றுக்கு இரண்டுதரம் மிஸ் கோல் அடிச்சு
வா என்று கூப்பிடுவதுபோல் ஒரு உரையாடல்

சிலருக்கு மிஸ்கோல் மட்டும் தான் அடிக்க தெரியுமாம்
அவை அடிக்க மற்றவர் எடுக்க வேணுமாம்

"மிஸ் கோல் அடிக்காத போன்"(Phone) உம்
எஸ்.எம்.எஸ்.அடிக்காத போன்(Phone) உம்
குப்பைக்குள்ளே போடு" என்று
கோவம் வேற
எத்தனை விளையாட்டு நடக்குது இங்கு

தொலைபேசிக்கொம்பனியெல்லாம் தலையிலை கைவைக்குது
நல்லவேளை
தொலைபேசியை கண்டுபிடிச்சவன்
இப்ப உயிரோடு இல்லை
இருந்திருந்தால் கண்டுபிடித்த குற்றத்துக்கு
கழுத்தில் கயிறை மாட்டியிருப்பான்
சரி என்னவோ ஏதோ
எதையும் விளையாடுங்கோ
மிஸ்கோல் அடிச்சு
மிஸ்ஸிஸ் ஆக மாறிவிடாதீங்கோ?