பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்

ஈழத்து கலைஞர்களில் தனக்கென்று தனியான தனித்துவத்தை பெற்றவர் திரு.கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள்.
அதுவும் அண்ணை ரைட் என்று யாழ்ப்பாணத்து பேருந்து நடத்துனர்கள் அடிக்கடி வாயிலே உச்சரிக்கும் வட்டார மொழி நடையை உலகமெங்கும் கொண்டு சென்ற பெருமை திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்களையே சாரும்.அதன் மூலம் என்றும் அண்ணை ரைட் பாலச்சந்திரன் என்று உலகளவும் பிரபல்யம் பெற்ற ஈழத்தின் கலைஞரானார் என்பது யாவரும் அறிந்த விடயம்.அது மட்டுமல்லாமல் வட்டார வழக்கிலுள்ள பல சொற்பிரயோகங்களை தனது நாடக நடிப்பு மற்றும் வசன நடைகளை வாயிலே உச்சரிக்கும் முறைமையினூடு உலகமெங்கும் நிலை நிறுத்தியவர்களில் கே எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கும் தனிஇடம் இருக்கிறது.அது அவரால் அவர் பிறந்த மண்ணுக்கும்  ஒரு புகழை அவரால் ஏற்படுத்திக் கொடுத்து.இவரின் ஓரங்க நாடங்கள் ஒருபுறம் எல்லோர் வீடுகளிலும் வானொலியில்  ஒலிக்க  மறுபுறம் இவரின் நாடகங்களின் ஒலிப்பதிவுகளை வாங்கி எப்போதும் மீண்டும் மீண்டும் கேட்டு சிரித்த காலங்கள் அன்றைய காலங்கள். இன்றைய காலங்களிலும் அதை மீண்டும் மீண்டும் கேட்டாலும் என்றும் மாறுபடாத நகைச்சுவை உணர்வையும் கலை ரசனையையும் கொடுக்கும்.அவை இன்றைய இளைஞர்களால் ரசிக்கபடக்கூடியதான ஒரு கலைப்படைப்பை அன்றைய நாள்களில் கொடுத்த பெருமை அண்ணை ரைட் பாலச்சந்திரன் அவர்களையே சாரும்.

அது மட்டுமல்லாமல் நாடகங்கள் வரிசையில் ஓடலி ராசையா,மு மு மு மூத்ததம்பி,வாத்தியார் வீட்டில்,செய்திகளில் நகைச்சுவை ,தூரத்து சொந்தம் என்று ஏராளம்.அவையனைத்தும்   எம்மவர் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டி நாசூக்காக பல கருத்துகளை முன்வைத்திருக்கின்றன என்றால் மிகையாகாது.

கே எஸ் பாலச்சந்திரன் அவர்களிற்கு திரைப்பட வரலாற்றிலும் முக்கிய இடமிருக்கிறது,“வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள்,இவற்றை விட ஒரு ஆங்கிலத்திரைப்படத்தில் கூட அவரின் பங்கு இருந்திருக்கிறது.

இப்படியாகபல பெருமைகளை தன்னகத்தே  கொண்ட கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள் தொலைக்காட்சி மூலம் அசத்திய நிகழ்ழ்சிதான் Wonderful Y.T.Lingham
 ஐரோப்பிய தேசமெங்கும் நீண்ட காலத்திற்குப்பின் கே எஸ் பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை எப்படியிருக்கிறார் என்ற தமிழ் கலை ரசனையாளர்களின் எண்ணங்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி அசத்தினார்.தொடர்ச்சியாக வெற்றியோடு தொலைக்காட்சிகளில் செல்லும் நிகழ்ச்சிகளில் அவரின் நிகழ்ச்சியான Wonderful Y.T.lingham  ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்றும் பல தொலைக்காட்சிகள் அவரின் சிறப்பான இந்த நிகழ்ச்சியை மீள் ஒளிபரப்புகின்றார்கள்.காலம் கடந்து அவரின் நிகழ்ச்சிகள் வெற்றி நடை போடுகின்றமைக்கு அது எடுத்துக்காட்டு.

கலையுலகில் கால் பதித்த கலைஞர் அவர்கள் எழுத்தாளராகவும் தனித்துவ இடத்தை பெறுகின்றார்.கடந்த சில வருடங்களுக்கு முன் அவர்வெளியிட்ட கடலோடிகளின் உள்ளார்ந்த உணர்வைப் படைப்புலகத்திற்கு தனது எழுத்தாற்றல் மூலம் கொண்டு வந்தார்.கடலோடிகளின் கதை சொலும் கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்று  அந்த நாவலை எழுதி அதற்கு அமுதன் அடிகளாரின் விருதையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தனது அனுபவங்களையும் ஈழத்தின் வட்டாரவழக்கு சொற்களின் பயன்பாடுகளையும் அவர் தனது நாவலில் இணைத்திருப்பது நாவலை வாசிக்கும் தருணங்களில் அதனோடு இணைந்து பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கும்.முற்றிலும் கிராமத்து மன்வாசனைப்படைப்பு அது.

”வானொலி,தொலைக்காட்சி,மேடை,திரைபடக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர்,திரைப்படஇயக்குனர்,தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எழுத்தாளர் எனப் பன்முகப் பக்கங்களைக்  கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கு அண்மையில் கனடாவில் அவரின் வரலாற்று நூல் வெளியீடு செய்யபட்டது.
பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை என்று பெயரிடப்பட்ட அந்த அற்புதமான நூல் வெளியீட்டோடு  அவருக்கான பாராட்டு விழாவும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.கனடாவின் ஸ்காபுரோ பகுதியில் இந்த பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு நிகழ்விற்கு எழுத்தாளர் திரு குரு அரவிந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.அங்கு கலைஞர், எழுத்தாளர் திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு உயரிய விருதாக  தலைக்கோல் விருது. வழங்கி கௌரவிக்கப் பட்டிருக்கிறது.
அங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் கூட தமிழர்களின்  தனித்துவக்கலைகளுக்கு கிடைத்த கௌரவங்கள் தான்.சோக்கல்லோ சண்முகம் அவர்கள் குழுவினரின் வில்லடிப்பாட்டு நிகழ்ச்சிக்கான தனித்துவம்.
அதுமட்டுமல்லாமல் பாலாவின் நனைவோடை என்ற விவரணச் சித்திரமும் காண்பிக்கபட்டிருக்கிறது.

உண்மையில் கலைஞர்கள் வாழுங்காலத்தில் வாழ்த்தும்  நடைமுறைகள் சிறப்பு.பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை எமக்கு கிடைத்த பொக்கிஷம்.தான் மட்டுமல்ல தனது கலை ஈடுபாட்டினை பல இளைஞர்களுக்கு விதைத்திருக்கிறார் கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள்.கனடாவின் பல வளரும் கலைஞர்களோடு இணைந்து பல கலைப்படைப்புகளை தந்திருக்கிறார்.தான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களோடும் பகிர்ந்து அதன் மூலம் இளைஞர்களையும் அதில் ஈடுபடுத்தி தனது கலைப்பணியை செவ்வனே ஆற்றியிருக்கிறார்.
உண்மையில் அவருக்கான இந்த விழா எடுத்தவர்களும் நன்றிக்குரியவர்கள்.கலைஞர்கள் வாழுங் காலத்திலே வாழ்த்தும் விடயம் பாராட்டுக்குரியதும் கூட.எமது தனித்துவங்களை உண்மையான உணர்வோடு உலகிற்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பை உணர்ந்து எமது ஈழ கலை அடையாளமாகிய கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு விழா எடுத்தமை படைப்புக்களம் சார்பில் அனைவருக்கும் நன்றிக்குரியவர்களே.

பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமையை எம்மவர்காலத்தில் பெற்ற பெருமை எமக்கும் உரியதே.என்றும் பல விருதுகளை தனதாக்கி இன்னும் பல படைப்புகளூடாக சந்திக்கவேண்டும். நீண்ட ஆயுட்பலத்துடன் நிறைந்த வாழ்வுகாண கரவையூரான்  கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு கரவைக்குரல் ஆழமான அன்பிலிருந்து நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.அதில் பெருமையும் கொள்கிறது.

கேஎஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு தலைக்கோல் விருது வழங்கும் விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு இது......


புகைப்படங்கள் --ஈகுருவி 


5 comments:

Rajaji Rajagopalan said...

கொழும்பில் கோழி சிலத்திக் கொண்டிருந்த காலத்தில் பாலாவும் (கே.எஸ்.பாவை நாங்கள் இப்படித்தான் அழைப்பது வழக்கம்) நானும் எங்கள் நண்பர் குழாத்துடன் சேர்ந்து செய்த லீலைகள் எழுத்திலடங்கா.

பின்னைய கட்டத்தில் நாமெல்லாரும் திக்கொன்றாகப் பிரிந்துவிட்டோம். ஆயினும் நண்பன் பாலாவை இன்றும் மறக்காதிருக்கிறோம்.

பாலா கலையுலக வெற்றியும் நல்ல உடல் நலமும் பெற வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

ராஜாஜி ராஜகோபாலன்

Muruganandan M.K. said...

நண்பருக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

enathu anpu thampikku en manam kanintha vaazhthukkal. emathu nadpai vaarthaikalaal solla mudiyaathu. naam ériya maedaikal,thiraipadam ena mika athikam. enkirunthaalum en thampy noi nodi inri needooli vaazha vaazhthum..
kunapathy kandasamy

Anonymous said...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

வாழ்த்துக்கள்...