அன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்

நீண்ட நாள்களுக்குப்பிறகு அண்மையில் ஒரு நண்பர்கள் வட்டத்தை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது,பாடசாலையில் துள்ளித்திரிந்த காலத்தில் பழகிய நண்பர்கள் அவர்கள்.பாடசாலைக்காலம் என்றால் சொல்லவா வேணும்,சின்ன சின்ன சண்டைகள்,அந்த கால ஆசிரியர்களினுடனான அனுபவங்கள்,அடிகள் சொல்லித்தந்த பாடங்கள்,விட்ட பகிடிகள் என்று நேரம் போனதே தெரியாமல் கலகலப்பாக மகிழ்ந்த மாலை நேரம் அது.

உடனடியாக கிடைத்த அழைப்பு அது, நண்பன் ஜோர்ஜ் அருணின் திருமணப்பதிவுக்கு செல்லகிடைத்த அருமையான சந்தர்ப்பத்தால் 15 வருடங்களுக்கு மேலாக காணாத நண்பர்களையெல்லாம் காணக்கிடைத்தது.
இந்த திருமணப்பதிவு என்ற விடயம் மூலம் நண்பன் ஜோர்ஜ் அருணைத் தெரிந்தவர்கள் அவருக்கு திருமணம் முடிந்தாயிற்று என்றும் தெரிந்து கொள்ளமுடியும் என்ன அப்படித்தானே? ஏனென்றால் அவனுக்கு யாரும் வேற யாரும் "சம்மந்தம் கிம்மந்தம்" பேசினாலும் எண்டு முற்கூட்டியே ஒரு முன்னாயத்தம் தான். நல்ல அக்கறை எண்டு நினைப்பீங்க, நாங்க எல்லா விசயத்திலையும் கவனம் பாருங்கோ.
நண்பர்கள் வட்டத்தில் அவன் நட்பு கிடைத்தது பாடசாலைக்காலத்தின் இடைக்காலத்தின் பிற்பகுதி என்று சொல்லலாம். அவரை நான் பாடசாலைக்குள் பழகிய காலத்தைவிட மைதானத்தில்தான் கூடிய நேரம் பழகியது என்று கூட சொல்லலாம்.ரியூசனில்(ஆங்கிலத்தில் தனியார் கல்வி நிறுவனம் எண்டு பெரிய பெயர் பாருங்கோ,அதாலை எங்கடை ஆக்கள் யாருமே பாவிக்கிறது இல்லை)வந்திருந்த கூடியளவு நண்பர்கள் பழகியிருந்ததார்கள்.எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க இல்லை,மைதானத்தில் பழகியதுடன் அவன் இப்படியே உயர்கல்வியென்று பாடசாலையைவிட்டு வந்துவிட அவனுடனான தொடர்பு குறைந்தே விட்டது,ஆனால அவனுடன் விளாயாடிப்பழகியதால் நட்பு குறுகியகாலத்தில் முற்றித்தான் இருந்தது. அதனால் இங்கிலாந்து வந்தவுடன் வந்த அன்பான நட்பின் அழைப்பு திடீரென்று எப்படியாவது செல்ல வேண்டும் என்று "வடிவாக வெளிக்கிடவும் ஏலாமல் போச்சு பாருங்கோ”
அவரின்ரை அழகுக்கு அவருக்கு வெளிக்கிடவும் வேண்டிக்கிடக்கு எண்டு நினைக்கிறிங்க என்ன?

நவரங்கன் பாருங்கோ நல்லாக் கார்(ஆங்கிலத்தில் மகிழூந்து எண்டு சொல்லுவினம்) ஓடுவன்,ம்ம் அவன் வீ்டு தேடி வந்து ஏத்திக்கொண்டு போனதால சொல்லுறன் எண்டு நினைக்காதீங்கோ, நான் வீட்டு விலாசம் சொல்ல ஒரு அரை மணித்தியாலத்திலை " டக் " எண்டு அவன் வந்து நிண்டான் பாருங்கோ,இதைவிட அவன்ரை கெட்டித்தனத்துக்கு வேற என்ன வேணும்.இதற்கு முதலே நவரங்கனை சந்தித்ததாலை அவனுடன் கூட வந்த இனனுமொரு நண்பன் பிரதீ்ப்,சின்ன வயசிலையிருந்து கொஞ்சம் மீசை முளைக்கிற காலம் எண்டு சொல்லுவாங்களே,அந்த காலத்திலிருந்து பதினொரு வருடங்களுக்குப்பிறகு சந்திச்சதாலை அவனைக்கண்டவுடன் ”வாங்கோ போங்கோ” எண்டு தான் கதைக்க சொல்லிச்சுது,அவனும் "எப்படி இருக்கிறீங்க ”எண்டுதான் கேட்டான்.சரி சுகத்தை சொல்லி “டக்” எண்டு வெளிக்கிட்டது எண்டு முதலே சொன்ன மாதிரி வெளிக்கிட்டு கூடவே வந்த கௌதமனுடனும் அளவளாவிக்கொண்டு நண்பனின் திருமணப்பதிவு கொண்டாடத்துக்கு
போகத்தொடங்கியாச்சு,
பள்ளிக்கூடத்திலை ”நவத்தார்" என்று மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒரு ஆசிரியர் நவரட்ணம் அவர்களின் கதையுடன் தான் கதைகள் ஆரம்பமானது, த்தாருக்கு எங்கடை நவரங்கன் விட்ட பகிடிகளும் அதற்கு அவர் விட்ட பகிட்களும் எண்டு கௌதமன் சொல்ல அதுக்கு நவரங்கன் அவர் கதைப்பது போல கதைச்சு நடிச்சுக்காட்டினான், நவத்தார் சமய பாடத்திலை கேட்ட கேள்விகளும் திரு நீறும்சந்தனமும் வைக்ததற்கு தந்து விட்ட அடிகளும் அந்த அடியின் போது எல்லாம் செப்படி வித்தை” என்று சொல்லி அடிப்பதும் எண்டு கதை ஒரு பக்கமாக சென்று கொண்டே இருந்தது, நவரங்கனின் காரும் ஓடுது.

அதற்கிடையிலை இன்னுமொரு வாத்தியார் இருந்தவர் கந்தசாமி வாத்தியார்,இரண்டு கந்தசாமி ஆசிரியர்கள் இருந்தாலும் தமிழ் படிப்பிக்கிற கந்தசாமி வாத்தியார் அடிச்சுவிட்ட அடிகளைப்பற்றித்தான் முக்கிய கதை. அந்த மனுசன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை எண்டால் அடிக்கும் ஒரு அடி,அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பள்ளிகூடம் வந்திடுவம்,போதாக்குறைக்கு நவரங்கன் அந்தக்காலம் வகுப்பு மாணவத்தலைவன் எண்டதாலை கட்டாயம் வந்திடுவன் எண்டு கொஞ்சம் நக்கலாக கதை போய்க்கொண்டே இருந்தது,
வகுப்பிலை பாருங்கோ அந்தக்காலம் ஆசிரியர்கள் இல்லாத சந்தர்பங்களில் யாரும் யாருடனும் கதைக்ககூடாது,கதைச்சால் மொனிட்டர்(அதைத்தான் முதலில் வகுப்பு மாணவத்தலைவர் என்று ஆங்கிலத்தில்) எழுப்பிவிட்டுவிடுவார்.அல்லது கரும்பலகையிலை எங்கடை பேர் இருக்கும்,பெயர் கரும்பலகையிலை இருக்கிற நேரத்திலை வாத்தி யாரும் வந்தால் அதோகதிதான்.அதுவும் இந்த கந்தசாமி ஆசிரியர் வந்தால் ஏன் வீணாக்கதைச்சன் எண்டு இருக்கும்,இப்போது கந்தசாமி ஆசிரியர் மாலிசந்தி பிள்ளையார் ஆலயத்தின் தர்மகத்தா சபைத்தலைவராக இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்,கோயில் பிரார்த்தனை நேரங்களில் யாரும் கதைச்சால் என்ன நிலைமை என்று கேட்க மறந்துவிட்டேன்.

அப்படியே ரியூசனில் விட்ட சேட்டைகள்,அடிகள்,ஓட்டங்கள்,விளையாட்டுக்கள் என்று கதைத்தபடியே இருக்க கொண்டாட்ட நேரமும் வர மண்டபத்துக்குள் போய் சந்திப்பில் ஒரு கைகுலுக்கல் எல்லோரும்.
பொதுவா ஒரு வகுப்பு எண்டால் ஒரே பெயருடை பலர் இருக்கலாம் தானே,அப்ப சில வேளைகளில் அவர்களை கூப்பிடுவதற்கு பட்டங்கள் வைத்தோ அல்லது அவர்களின் முதலெழுத்தை சொல்லியோ கூப்பிடுறது தானே,சுதாகரன் எண்டு சொல்லுற ரி.எஸ். தான் வாசலிலை நிக்கிறார்.சாப்பாடு தானே ,பின்னை வேளைக்கே வந்திட்டான் எங்களைப்போல.காலமையிலை இருந்து சாப்பிட இல்லை எண்டு கவலைப்பட்டான்.சரி அப்படியே இங்கிலாந்துக்கு வந்ததைப்பற்றி கதைச்சு ஒரு மூலையாக எல்லாரையும் பார்க்கவேணும் எல்லே,அப்படி ஒரு லொக்கேஷன்(அமைவிடம் எண்டும் ஒரு ஆங்கிலம்) எடுத்துிருந்தாச்சு.


கடிகள் குதறல்கள் ஆரம்பம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் குறவாக இருந்தகடிகள் யோகேந்திரா,சுதர்ஷன் மற்றும் திருக்குமரன் வருகையோடு கொஞ்சம் களைகட்டியது.யோகேந்திரா சுதர்ஷன் அவங்கள் வரணி தான் சொந்த இடம், பக்கத்து வீடுமோ தெரியாது.இரண்டு பேரும் மாறி மாறி கடிச்சுக்குதறிக்கொண்டே இருந்தாங்கள்,அவங்கள் படிக்கேக்குள்ளேயும் சி வகுப்பிலைதான் படிச்சவங்கள்,அந்தக்காலம் சும்மா சும்மா அறுக்கிற மாதிரியே அண்டைக்கும் அறுத்துக்கொண்டே இருந்தாங்கள்,ஹாட்லியிலை கன்ரீனிலை(சிற்றுண்டி சாலை எண்டு ஆங்கிலம்- இவ்வளவும் சொல்ல கஷ்டம் தானே அதாலை டக் எண்டு தமிழிலிலை சொல்லுறது கன்ரீன் எண்டு) வினாசி அண்ணையின்ரை தேத்தண்ணிக்கதையும் அந்த ஒரு ரூபாக்கு தாற அந்த போண்டாவைபற்றியும் நினைவு படுத்தினாங்கள். அதுக்கு ஒரு தகடு வெட்டித்தருவினம் வினாசி அண்ணையிட்டை குடுத்தால் தான் தேத்தண்ணி கிடைக்கும்.
அதுக்காக வீட்டிலையிருந்தே வெட்டிக்கொண்டு வந்த குமணன்,குபேரன் எண்ட இரட்டை உறவுகள்,அதை போதாக்குறைக்கு கனகாலம் பாவிச்சமாதிரி அந்த தகட்டை பழுதாக்கிகொண்டு வாறதாம்.அந்த தகட்டையே குடுக்காமல் தேத்தண்ணி குடிச்சவங்களும் இருக்கிறாங்களாம்.
அப்படி அந்தக்கதை போக


ஜோர்ஜ்க்கு வாழ்த்து அட்டை கொடுக்க சுதர்ஷன் எழுத வெளிக்கிடுறான்,என்ன எழுதிறது எண்டு சிக்கல்,அப்ப சுதர்சனுக்கு எல்லாரும் சொல்லுகினம்,”””தங்கச்சங்கிலி அறுந்தாலும் எம் அன்புச்சங்கிலி அறாது”முத்திரை வீட்டில் நித்திரை, முத்திரை சித்திரையில் வரும்,” எண்டு எழுதச்சொல்லி அட்வைஸ்(புத்திமதி),சுதர்சனும் எழுத தொடங்கிவிட்டான்,அப்ப யோகேந்திராக்கு மனமில்லை,அதை ஆங்கிலத்திலை எழுதவேணும் எண்டு சொல்ல அப்ப அதை ஆங்கிலத்திலை சொல்லு பார்ப்பம் எண்டு சுதர்சன் யோகேந்திராவுக்கு சவால் விடுறான், ”எங்கை சொல்லு பார்ப்பம்” யோகேந்திராவைக்கேட்க நம்ம நவரங்கன் மொழிபெயர்க்கிறார் பாருங்கள்,"GOLD CHAIN BREAK OUR LOVE CHAIN NO BREAK"."STAMP HOME SLEEPPING" எண்டு நவரங்கன் தொடர்ந்துகொண்டே போக ”இங்கிலிஷ் தெரியும் எண்டா சொல்லு அதை எழுதுவம்” எண்டு யோகேந்திராவை விட்ட பாடில்லை சுதர்சன்.இப்படித்தான் கடித்துக்கொண்டே இருப்பாங்கள் அந்தக்காலதிலையும்,
அது அப்படியெ போக
அந்த கால அங்கிரி விளையாட்டுக்களையும் சொல்லிச்சிரிச்சாங்கள்,ரிஎஸ் உடன் எஸ்.எஸ் கோவம்,எஸ்.எஸ் உடன் சுந்தரேஸ்(சக்களாவத்தை) கோவம்,சுந்தரேஷ் உடன் ரிஎஸ் கோவம்,என்ன ஒரு முக்கோண நட்புகோவம்,அதிலை என்ன பகிடி எண்டால் அவங்களுக்குள்ளை யாரிலையும் யாரும் தொட மாட்டாங்க,யாரிலையும் தொட்டு மற்றவையிலை முட்டினால் ஒரு ஊது ஊதுவாங்க அதிலை நெருப்பு பத்தினாலும் நூர்ந்துபோய்விடும் எண்டு அதையும் சொல்லிசிரித்தபடியே கலக்குது கொண்டாட்டம்.

வீடியோகாரன் எடுக்க வந்து ஒரு பக்கமாக வீடியோ எடுத்துக்கொண்டு எங்களையும் அது எடுக்க வருமெண்டு யோகேந்திராவிட்ட பெருங்கடி,ஆனால் வீடியோக்காரன் அவனை வீடியோ பிடிக்கேக்குள்ளை அந்த முகத்தையும் ஷேட்டையும் போட்டு படுத்தின பாடு.

இப்படியாக நீண்ட நாள்களுக்குப்பிறகு அருமையான துள்ளித்திரிந்த காலத்து பள்ளினினைவுகளுடன் கலகலப்பாக இருந்து ஒரு சில மணிகளில் பிரிந்துவிட்டோம்.கலப்புக்களும் வயிறு நிறைய சாப்பாடும் முடித்துக்கொண்டு அந்த இனிய நினைவுகளோடு நவங்கனின் காரேறி வீட்டுக்கு வந்தாச்சு.அன்றைய பள்ளியின் நினைவுகளை திரும்பவும் மீட்கவும் அன்பு பாடசாலை நண்பனை வாழ்த்தவும் முடிந்தது மிகவும் மகிழ்ச்சி.பள்ளிப்பயின்றதொரு காலத்தின் தொடரில் இதுவும் அமையபோகிறது.
என்றும் நலமுடன் வாழ எம் அன்பான வாழ்த்துக்கள் நண்பா.ஜோர்ஜ் அருணைத்தெரிந்தவர்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.தெரியாதவர்கள் பள்ளிப்பயின்ற காலத்தின் அருமை நினைவுகள் பற்றி கருத்துப்பகிர்ந்துகொள்ளுங்கோவன்,

5 comments:

Anonymous said...

Hi George
Wish you a happy marriage life. Wish you all the best for your future.
Regards
Janakan

Anonymous said...

Hi Arun
Many More happy for you
wish you all grate future

Unknown said...

ஆளைப் பழக்கமில்லை ஆனா ஞாபகம் இருக்கு. வாழ்த்துகிறேன். சுதன், யோகேந்திரா. ரீ.எஸ் எண்டு களைகட்டியிருக்கு. ரி.எஸ்.சைக் கேட்டதாய்ச் சொல்லவும். சுதனின்ர தந்தவீடு நவிண்டில் பாருங்கோ.... பொடித்தம்பியற்ற பேரன் எண்டு புகழ் பெற்ற குடும்பத்து ஆளெல்லே அவர்... அவரையும் கேட்டதாய்ச் சொல்லவும்

பால்குடி said...

ஜோர்ஜ் அண்ணாவுக்கு நல்வாழ்த்துக்கள்.
உங்கட சந்திப்பு நல்லாத்தான் போச்சுதெண்டு சொல்லுங்கோ... என்னெண்டு சொல்லிச் சொன்னா அதிலை ஒரு சந்தோசம் இருக்கு பாருங்கோ... அருமையான நினைவு மீட்டல்

Anonymous said...

முதலில தம்பி அருணுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறகு உங்களுடைய இந்த தரமான ஆக்கத்துக்கு ஒரு பாராட்டு.