The Mystro இன் வாலிபம்

இசையின் இளைய சாரீரம்


 The Mystro இன் வாலிபம் இசை இறுவெட்டு (CD) வெளியாகியிருக்கிறது.
GJ ARTS கலைக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  இறுவெட்டு சிடி வெளியீட்டு நிகழ்வு Hays Beck Theatre கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
Dayan shan, Cismoda, மற்றும் Banu ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்புடன் தொகுத்தளிக்க அரங்கில் அரங்கேறிய ஒவ்வொரு நிகழ்வுகளும் சிறப்பு.
ஆரம்பத்தில் நக்‌ஷத்திரா நாட்டியாலய நடனம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. நிகழ்வில் பங்குபற்றிய நடனப்பெண்கள் மேடையை சரியாகப்பயன்படுத்தி தங்கள் நிகழ்வை வழங்கியிருந்தனர்,அதனைத்தொடர்ந்து ஓவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வோர் சிறப்புடனும் வேவ்வேறு வகையுடனும் நிகழ்வை காண வந்த ரசிகர்களை வேறு பக்கம் திருப்பாது மேடை நோக்கியே வைத்திருந்தது.ஒவ்வொரு நிகழ்வின் இடையில் வந்த கரகோஷங்கள் அதற்கு சான்று.
தாண்டவம் நடனப்பெண்கள் தங்கள் நடனத்தோடு கொடுத்த செய்தி பாராட்டவேண்டியதொன்று.வாகனம் செலுத்தும்போது வரும் கவனக்கலைப்பான்களால் வரும் பேராபத்தையும் அதை தவிர்க்கவேண்டும் என்பதும் அவர்கள் கொடுத்த செய்தி.

இளம் நடனக்குழுவினராகிய தாண்டவம்  அதற்கு பெரு முயற்சியெடுத்து வழங்கியிருந்தமை அரங்க நிகழ்ச்சியை பார்க்கும் போது புரிந்தது.

Crawly pakkam,அடையாளம்,phoenix போன்ற பல்வேறு நடனக்குழுக்கள்
அரங்க நிகழ்ச்சியை ஓயவிடாது தந்த நடனங்கள் அரங்கையே ஆடவைத்தது. தனி நடனம் கொடுத்த Krisshna (Trin3gy) பாடல்களுக்கு தன்னையே வளைத்துப்போட்டு ஆட்டியது எங்களுக்கு கிடைத்த மைக்கல் ஜாக்‌ஷன் போல இருந்தது.அதேபோல பல இளம் (Rap) சொல்லிசை பாடகர்கள் மற்றும் மெல்லிசை  பாடகர்கள் மேடையை சோரவிடவில்லை. அத்தனை நடுவிலும் நிகழ்ச்சியை தொத்தளித்த  விட்ட நகைச்சுவைகளும் கலைச்சு கலைச்சு கடித்தவைகளும் அவ்வப்போது சிரிக்கவைத்துக்கொண்டேயிருந்தது.




புல்லாங்குழல் இசைத்த குருஜி (Kuruji) ஆற்றல் அவரை இன்னோர் காலத்தில் சிறப்புக்கலைஞனான புலம்பெயர் நாட்டில் காணாலாம் என்ற படி அவரின் புல்லாங்குழல் இசைத்த தன்மை. அவரோடு இணைந்து பாடியவர்களும் வயலில் இசைத்தவர்களும்,கீபோர்ட் இசைத்த கலைஞர்கள், கெளதம் (Gowtham) அனைவரும்பாராட்டுக்குரியவர்களே.
எல்லாவற்றையும் தாண்டி The Mystro இன் இறுவெட்டை வெளியீடு செய்தபோது வந்த உணர்வு, உறவு கண்ணீர் மறக்கமுடியாதவையாக ஒட்டிக்கொண்டன. The Mystro இன் அம்மா அப்பா எல்லோரும் உணர்ச்சிமேலீட்டால் பேசிய ஆனந்த கண்ணீருடனான வார்த்தைகள் கலைஞனை பெற்ற பெற்றோரின் மகிழ்ச்சியை உணர்த்தியது.
அதில் The Mystro இன் தழுதழுத்த குரல், ஆனந்த கண்ணீர் வார்த்தைகள் எல்லாம் கலைஞனின் சவால் மிகுந்த பயணத்தையும் அதில் கண்ட உற்சாக இன்பத்தையும் பதிவு செய்தது.


மேடை அமைப்பும் மேடை ஒளி ஒலி அமைப்பும் நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகூட்டியது. தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் யுவனோடு இணைந்து பணியாற்றிய கெளசிகன் சிவலிங்கம் நிகழ்ச்சிக்கு வந்து அதில் தனது முக்கிய பங்கை கொடுத்திருந்தார்.
மொத்தத்தில் The Mystro இன் இசை வெளியீடு நிகழ்வானது மேடையையும் 
அரங்கையும் சோரவிடாது அமைந்திருந்தமையை பாராட்டியே ஆகவேண்டும். 
இருப்பினும் நிகழ்ச்சிக்கு இளைய வட்டமே அதிகம் வந்திருந்தமை கவலை தரக்கூடிய விடயமே. பங்குபற்றிய கலைஞர்களின் உறவுகளைத்தவிர முதலாந்தலைமுறையினரின் வருகை மிகக்குறைவாக இருக்கின்றமை இளங்கலைஞர்களின் வளர்ச்சிக்கு ஆரோகியமான பாதையாக முடியாது என்பது எம் எண்ணம்.இது இளைய தலைமுறையினருக்கும் முதலாந்தலைமுறையினருக்குமான இடைவெளி சமூகத்தில் அதிரிக்கும் போக்கை காட்டுகிறது.இது நல்லதல்ல.
இதை இளந்தலைமுறையினரும் உணர்ந்து நிகழ்வு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற அதேவேளை முதலாந்தலைமுறையினரும் வெறுமனே தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு முண்டியடிக்காமல் இப்படியான நிகழ்வுகளிலும் பங்குபற்ற தயாராகவேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
அத்தோடு நிகழ்வின் இறுதியில் தாயக மக்களை நோக்கிய  சிந்தனையில் கலைக்குழு வழங்கிய நடனம் பாராட்டத்தக்கது.என்றாலும் அந்த நிகழ்ச்சினின் நிறைவில் சொல்லப்பட்ட செய்தியை திரையில் எழுதிக்காட்டிய போது வந்த எழுத்துபிழைகளை நிச்சயம் கவனத்தில் எடுத்திருக்கவேண்டும் என்பது தாழ்மையான கருத்து.இதிலும் முதலாந்தலைமுறையினர் , அல்லது அறிந்தவர்கள் இளந்தலைமுறையினரை வழிப்படுத்தினால் அப்படியான சிறு தவறுகள் கூட இடம்பெறமாட்டாது என்பதை பதிவு செய்யலாம்.

இருப்பினும் தாயகம் நோக்கிய சிந்தனையிலும் நிகழ்ச்சியில் ஏதோவொரு நிகழ்வை இணைக்க வேண்டுமென்ற சிந்தனைக்கு நிச்சயம் பாராட்டியே வேண்டும்.

 
மொத்ததில் The Mystro இன் வாலிபம் நிகழ்வும் இறுவெட்டும் புலம்பெயர் கலைஞனின் ஓர் அடையாளமாக பதிவாகியிருக்கிறது. The Mystro என்ற கலைஞனின் புதிய முதல் படைப்பை அனைவரும் வாங்கி அந்த கலைஞனை தொடர்ச்சினான கலைப்படைப்புகளுக்கு உந்து சக்தியாக புலம்பெயர் உலக மக்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.அது கலைஞனையும் வாழவைக்கும், அவன் படைப்புகளும் வாழ்ந்துகொள்ளும்.இனியும் அவன் படைப்புகள் வரும்.

The Mystro இன் வாலிபத்திற்கு எம் அன்பான வாழ்த்துக்கள்..



வாழும்போதே வாழ்த்துவோம்

                                                                                              நிகழ்வு நோக்கு- யோகா தினேஷ்


No comments: