கள்ளர் பயம் கவனம் புன்னகை ஒன்று போதும்

பட்டினமாம் கொழும்பில
வீட்டுவாசலிலே
"நாய் கடிக்கும் கவனம் " என்றது போல்
றோட்டின் தொடக்கத்தில
"கள்ளர் பயம் கவனம் "என்றும்
போட்(board) போட வேணும்!

கலகலப்பாய் உடுப்புடுத்து
பளபளக்க நகையணிந்து
சுறுசுறுப்பாய் சென்று விட்டால்
கள்ளர் தம் கை பதம் பார்க்குது

ஆட்டோகாரன் கடத்தி போடுவானோ என்று
கல்யாண பந்தல் வாசலிலே
ஆபரணம் அணியும் பெண்கள் இன்று
மணமேடையில் மங்களமாய்
மகிழ்வோடு கட்டிய தாலிகூட
லொக்கருக்குள் (Locker) முடக்கி விடும்

ஏன் ஆண்கள் மட்டும் குறைவோ என்று
பெண்கள் நினைப்பது புரிகிறது இங்கு

ஊர் கோவில் திருவிழாவில்
தங்க கட்டியை புலிப்பல்லாக்கி
செப்புக்கட்டிக்கு தங்க முலாமோ புரியவில்லை
தொந்தியில் துள்ளி அஆட
முன்வரிசையில் சுவாமி காவினால்
பென்னம்பெரிய பெருமை என்று
சிந்திக்கும் ஆண்கள் கூட
விதம் விதமாய் கைச்சங்கிலியாய்
மோதிரத்தோடு சங்கிலியாய்
பதமாக காற்சட்டை பொக்கட்டுக்குள் மறைச்சு வைச்சு
கல்யாண மண்டப வாசல் வந்து
பயம் தெளிந்து மனம் மகிழ
அணிந்ததனை அழகு பார்க்கினம்

இப்பிடியெல்லாம் இருக்கு
எல்லாம் கள்ளர் பயம் தான் காரணம்
வங்கி மனேச்சரோ தலையிலே கைவைக்கிறார்
லொக்கருக்கு ஓடர்(order) கூடி போச்சு
எப்ப வருதோ அப்ப எங்களுக்கு தான் என்று
உள்ளதை சொன்னால் மேனிக்கு போடும் நகை எல்லாம்
இப்ப லொச்கேருக்கு(ள்) தான் போடுகினம்
என்ன என்ன டிசைன்(Design) அதை எல்லாம்
வாங்கி வாங்கி லொக்கருக்கு(ள்) போட்டு
அளவில்லா ஆனந்தம் மட்டற்ற மகிழ்ச்ச்சி

இப்பிடித்தான் மங்கம்மா
வெளிநாட்டு பணமெல்லாம்
உடம்பெல்லாம் நகையாக வழிவது போல்
சிங்கபூரோ சுவிஸ்ஸோ
டுபாயோ தென்னாபிரிக்க கட்டிப்பவுணோவென்று
எல்லோரும் நாடியில கைவைக்க -

அதுவும்சரி

போன மாதம் தன்ர மகளை
சுவிஸ்க்கு அனுப்பினவா
போன்(phone) தானே கதைக்கிறது என்டவா
இவ்வளவு நகையோட காசாக அனுப்பினவளோ?..............
மாப்பிள்ளை கொஞ்சம் நல்லவன் போலிருக்கு
மாமிக்காரியில இவ்வளவு பாசமோ?...............
மானுடக்குணத்தோட மாப்பிள்ளை போலிருக்கு
ஆண்டவன் பார்த்து கொடுக்காமல்
கிள்ளி எறிஞ்சு போட்டான் மங்கம்மாவுக்கு
எல்லோரும் இப்பிடி நினைக்க...........

மங்கம்மாவுக்கு தும்மி போட்டுது
"பிள்ளை நினைக்கிறாள் போல
பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேணும் " என்று
வேகமான நடை போட்டு
ஐ பி சி றோட்டால
விசாபிள்ளையாரை தரிசிக்க
போய் கொண்டே இருக்கிறா

கண்ணை மூடி முழிப்பதுக்குள்
தட்டி பறிக்கும் காகம் போல
தந்திரமாய் கள்ளன் ஒருவன்
சங்கிலியை அறுத்துக்கொண்டு
விரைவாக ஒடிப்போட்டான் மறைந்து விட்டான்

" அடேய் யாரடா அவன் என்று
அலறி அடிச்சு மங்கம்மா கத்தி கதற
அக்கம் பக்க சனமெல்லாம்
ஓடி வந்து என்ன என்று கேட்க
"என்ன செய்ய ? யார் நினைச்சது
இந்த பொறுக்கி வருவான் என்று "
மங்கம்ம்மா திட்டித்தீர்த்தாள்

"பிள்ளை நினைச்சு தான் தும்மிச்சோ என்று நினைக்க - இந்த
கள்ளன் நினைப்பான் என்று யார் அறிவார்"
போனது போட்டுது என்று
சமாளிச்சு நடக்கிறா மங்கம்மா

"என்னணை அம்மா" பின்னுக்கு ஒரு குரல் ஓன்று
யார் என்று திரும்பி பார்க்க முதல்
"போடுற நகையை ஒழுங்கா போட தெரியாதே?
எங்கட தொழிலுக்கு பங்கம் வைக்காதே
கவரின் சங்கிலியை போட்டு யாருக்கு
கலர் காட்டுறாய்
கவரின் நகையை போட்டுட்டு
கத்தி கத்தி ஊரை கூட்டுறியோ?
உன்ர நகையும் உன்ர நடையும்"என்றபடியே கள்ளன்
முன்முகத்தில் வீசி
"டக்" எண்டு ஒடிப்போட்டான்

இதைக்கேட்ட சுற்றி நின்ற சனம் எல்லாம்
" அட என்னடா? - இந்த மனுசி
அலறியதைக்கேட்ட போது
தங்க பவுணை அறுத்த மாதிரி இருந்தது" என்று
வந்தவை எல்லோரும் ஒரு மாதிரிப்பார்க்க,
"சி சி சீ என்ன வெட்கமாகப்போச்சு
கௌரவக்குறைவு என்று நடிச்சு போட்டன் பவுண் என்று
எல்லாமே போச்சு " என்று
வேகமாக நடக்கிறாள் வெட்கத்துடன்

கள்ளனுக்கு கூட
செய்யும் தொழில் தெய்வமாம்
தொழிலுக்கு பங்கம் வைச்சால்
சொல்ல முடியா கோவம் வந்துவிடுமாம்
ம்ம் ம்ம் ம்ம் .............

ஏன் இந்த வினையெல்லாம்
பளபளக்க நகை போட்டு......

எல்லோருக்கும் பொதுவாக
புன்னகை ஓன்று இருக்கு
புத்தெழுச்சியான வாழ்க்கைக்கு
மகிழ்ச்சியோடு பயம் விட்டு
மற்றோரும் அனுசரிக்க
புன்னைகையே ஓன்று போதும்

மறக்கவேண்டாம்
கள்வனுக்கு கூட
செய்யும் தொழில் தெய்வமாம்

மற்றோரும் தொழில் செய்ய
புன்னகையோடு வழிவிடுவோம்
ம்ம் ம்ம் ம்ம் ம்

4 comments:

Mathu said...

Really nice!அங்கு கூடுதலானவர்கள் வெளிநாட்டு ஆடம்பரம் தான் இப்போது வாழ்க்கை-முறை என தவறாக புரிந்து கொண்டுள்ளனர்! நல்லா சொல்ல வந்த கருத்தை சொல்லி இருக்கிறிங்க.

குட்டிபிசாசு said...

நல்லா எழுதி இருக்கிங்க! சொல்லவந்த கருத்தை முடிவில் நல்லா சொல்லி இருக்கிங்க!!

தாசன் said...

//நல்லா எழுதி இருக்கிங்க! சொல்லவந்த கருத்தை முடிவில் நல்லா சொல்லி இருக்கிங்க!!//


:) good

Anonymous said...

realy nice.