வெவ்வினைவேரறுத்து வலம் வருவாய்


இன்றைய காலை
ஊரோடு இருந்திருந்தால்
கொடியேறும் விநாயகனின்
கோபுர வாசலில்தான்........


இன்றொடு பத்து நாள்கள்
இன்பமே சூழ்ந்து வர
ஊரெங்கும் கொண்டாட்டம்
சொல்லமுடியாத குதூகலம்
ஊரெங்கும் பக்திமயம்....
வெல்வினை வேரறுக்கும்
வேழமுகம் தாங்கி
பெருச்சாளி மீதேறி
அடியார்கள் புடைசூழ
அல்லல்கள் அறுக்கவென
வலம் வருவான் விநாயகன்....


ஊரின் உன் திருவிழா ஆரம்பம்
விநாயகனே வெவ்வினையை வேரறுப்பானென
பக்திபாடல்களின் ஆரம்பம் பறைசாற்றும்
உன்புகழை பாடியபடி
அடியவர்களின் பக்திபரவசம்
தூரதேசம் சென்றோரும்
உங்கழலை நாடிவந்து பணிந்திடுவர்
இளைஞர்கள் துடி நாட்டமாய்
இங்கும் அங்கும் ஓடி உந்தன்
ஆலயபணி செய்திடுவர்
பல பூக்கள் ஒன்றுசேர்த்து
பக்குவமாய் நங்கையர்கள்
பூமாலை கோர்த்திடுவர்





தாயகத்தின் சூழ் நிலைகள்
உந்திருவிழா ஆரம்பத்தில்
மாறிய வரலாறுகள் எம்மனதில்
இன்றும் உண்டு
மந்திர உச்சாடனங்கள்
பக்தி திருமுறைகள் பாடியபடி

இன்றும் நீ கொடியேறி
எம்மக்கள் அனுபவிக்கும்
துயரமெல்லாம் வேரறுத்து
வெவ்வினையெலாம் நீ களைய
வலம்வருவாய் விநாயகனே

2 comments:

Anonymous said...

arumaiyaaha ullathu ungal inaiyam suppero supper vaalthukal thodarnthum nalla kaathuramana karuthukal varatum

anbudan ganesh director strfm radio srilanka

தாசன் said...

"நீ கொடியேறி
எம்மக்கள் அனுபவிக்கும்
துயரமெல்லாம் வேரறுத்து
வெவ்வினையெலாம் நீ களைய
வலம்வருவாய் விநாயகனே"

உங்கள் பதிவைக் கண்டு மிகவும் மகிழ்தேன்.
மிக்க நன்றி.