தம்பி கெட்டிக்காரன்

எண்ணை வேணுமெண்டால்
எள்ளுப்பொரியாய் நிப்பான் இவன்- பனங்
கள் வேணுமெண்டால்
பிலாவோடை நிப்பான் இவன்
தம்பி கெட்டிக்காரன்

பட்டாசு இல்லாத காலத்திலை
வெட்டியாக திரிஞ்சாலும்
சைக்கிள் கம்பியிலை நூலைக்கட்டி
தீக்குச்சி மருந்திலை வெடி விட்டவன் ஊர்சுத்தி
தம்பி கெட்டிகாரன்

பட்டம் விடுறதுக்கு
வீட்டுகூரையிலை ஏறி
வைரகோயில் வேப்பமரத்திலை
அடிக்கடி தொங்க விட்ட அற்புதமானவன்
தம்பி கெட்டிக்காரன்

புளிச்சல் விளையாட
ரென்னிஸ் பந்தை உச்சிப்போட்டு
மற்றவைக்கு புளிக்க புளிக்க முதுகிலை
இலக்குபார்த்து எறிஞ்சுபோடுவான்
ம்ம் .... தம்பிகெட்டிக்காரன்

சந்தியிலை நிக்கிறதேயில்லையிவன்
கொஞ்சம் விலத்தித்தான் நிப்பான்
ஆசை மாமா வந்தரெண்டால்
பூவரசந்தடி கதை பேசுமெண்டும்
கையாலை காதிலை கதை சொல்வாரெண்டும்

தம்பி உண்ணானை கெட்டிக்காரன்


சைக்கிள் ஓட்டத்திலை
சாகசம் பல காட்டுவான்
முடக்காடு எண்டாலும்
முக்குத்தக்குப்படாமல்
கையிரண்டும் விட்டு விட்டு ஓட்டியவன்
அட......தம்பி நல்ல கெட்டிக்காரன்

அத்துளு அம்மனுக்கு பங்குனித்திங்கள்
தவறாமல் நிப்பான் நல்லபொடியன்
அத்தனை ஆசை நீர்ப்பாளயம்
அலாதிப்பிரியம் இவனுக்கு
சுத்திவளைச்சு அடிபட்டு வாங்கிபோடுவான்
அவனல்லோ கெட்டிக்காரன்,

ஆலமரத்தட்டியிலை அரசியல் அலசுவதில்
அசகாயசூரன் இவன்
சந்திரிக்காவை ரணிலின் காதலியென்று சொல்லி
கந்தசாமியண்ணையை நம்ப வைத்தவன்
தம்பி கெட்டிக்காரன்

இவன் கெட்டித்தனங்கள் எத்தனை சொல்ல
அவன் தில்லுமுல்லுகள் அத்தனையும் அற்புதம்
எவன் கதைக்கும் பலசரக்கதையெண்டாலும்
கவனத்தில் நகையுடன் விடைதரும் பொடியன் இவன்

சொல்லுவிசயம் எல்லாம் அப்படியே செய்யும் இவன்
அம்மா சொன்னதை அப்படியே செய்து
மல்லுக்கட்டி உலக வரலாற்றில் உன்னத இடம் இவனுக்கு

சுவைசுவையாக பண்டங்கள்
வகைவகையாக சுட்டுக்கொடுக்க
பலவகையில் ஒர் வகையாம்
தொதல் கிண்ட இவன் அம்மா ஆயத்தம்

சூட்டோடுகிண்டியபடி அதைவிட்டே விலத்தாமல்
பண்டத்தின் மேற்பாகம் சரியாக அழுத்திடவே
”அட தம்பி வாழையிலை வெட்டிக்கொண்டுவா” எண்டு அம்மா சொல்ல
அம்மா சொல் தட்டாத பிள்ளையிவன்
வாழைப்பொத்திவிட்டு
பூத்துதயாரான வாழைமரம்
வாழையிலையை மடக்கி பெரு
இலை கொண்டே குசினி நோக்கி ஓடுகிறான்


”அடேய் தொதலுக்கு ஒரு துண்டு
மற்றதெல்லாம் யாருக்கு”
”வாழையிலைத்துண்டுக்கு கேட்க
வாழையிலையே முறிச்சுப்போட்டியே”
”அடேய் நல்ல காலம் தென்னோலை கேட்டிருந்தால்
நீ தென்னைக்கு மேல் ஏறியிருப்பாய்”
உன்னாணை நீ கெட்டிக்காரன் தான் என்று புகழ்மாலை

எல்லாம் தெரிஞ்ச இவன் பெரியதொரு கெட்டிக்காரன்
நல்லா சொல்லியிருக்கும் இவன் கெட்டிதனங்கள் பாருங்கோ
கல்லெறிஞ்சு மாங்காய் இல்லை தேங்காயுடன் பலாப்பழமும்
சொல்லி விழுத்திடுவான் எந்த நள்ளிரவிலும்

இப்ப சொல்லுங்கோ பார்ப்பம் தம்பியின் கெட்டித்தனத்தை
அவனெல்லோ கெட்டிக்காரன்
தம்பி கெட்டிக்காரன்

எண்ணை- எண்ணெய் , நிப்பான் - நிற்பான், பிலா- பனங்கள் குடிப்பதற்கு பயன்படும் பனையோலையால் செய்யப்பட்ட ஒரு குவளை போன்றது, புளிச்சல்- பந்தை மற்றவர்களுக்கு படும்படியாய எறிந்து விளையாடும் விளையாட்டை ஈழத்தின் சில பகுதிகளில் இவ்வாறு அழைப்பர், முடக்காடு - ஒரு சின்ன ஊரின் பெயர், முடக்குகள் அடிக்கடிவரும், நீர்ப்பாளயம் - எல்லாவகை மரக்கறிகளையும் பொங்கலுடன் சேர்த்து படைக்கப்படும் படையல்

4 comments:

வடலியூரான் said...

கலக்கிப் போட்டிங்கள் கரவையின் ஓசை.
ஊர் நினைவை அப்பிடியே கண்ணுக்குள்ளே கொண்டு வந்திட்டீங்கள்
//”வாழையிலைத்துண்டுக்கு கேட்க
வாழையிலையே முறிச்சுப்போட்டியே”
அடிக்கடி கேட்பட்து...

கருணையூரான் said...

கரவைக்குரல்....உங்கள் ஊரின் பழைய ஞாபகங்களை கவி வடிவில் அருமையாக தந்துள்ளீர்கள்...உண்மையிலேயே தம்பி கெட்டிக்காரன் தான்...ஆனால் எத்தனை உங்கள் சொந்த அனுபவமோ ......

திவ்யா said...

hi appa parunkoven eppadi nalama???? karaivaiyin oosai oonki erukku pola...
www.mathandj.blogspot.com
appa parunkoven edathaiyum konsam ...... take cara

mathan said...

hi nalam nalamariya avaaal super eppa karaviyin ossai nalla kedkutthu....take care
www.mathandj.blogspot.com
pinna ethayum parunkoven