இங்கிலாந்தில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வு

பல்வேறு காலங்களிலும் அந்த காலங்களின் நிலைமைகளிலும் அந்த நிலைமைகளில் வாழ்ந்த சூழல்களாலும் தாயகத்தை விட்டுப்பிரிந்து பல்வேறு தேசமெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் தாயகமக்கள் இன்றும் தமது நாடு தேசம் சமூகம் என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே. ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த ஊர் மற்றும் தாங்கள் படித்த பாடசாலை என்று அவற்றின் அபிவிருத்திச்செயற்பாடுகளில் தங்களின் சிறிய பங்களிப்புக்களையாவது வழங்கி ஈடுபடுவது மகிழ்வைத்தரும் அம்சமாக இருக்கிறது.
அந்த அடிப்படையில் கரவெட்டி மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக நல முன்னேற்பாடான செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்பாக கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் அமைந்துகாணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் அமைந்து காணப்படும் இந்த அழகிய கிராமத்தின்(கரவெட்டியின் அமைவிடம் சார்ந்த பதிவு இங்கே) முற்றுமுழுதான சமூக தேவைக்கான அபிவிருத்தியில் தன்னை ஈடுபடுத்திவரும் அமைப்பாக இந்த கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் செயற்படுகிறது.
உண்மையான பிரதான குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கல்வி சமூக கலாச்சார நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக சீர்ப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பாக இந்த அமைப்பு உருவாகியிருக்கிறது.இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் சுய நல வேறுபாடுகள் இல்லாமல் கரவெட்டி என்று சொல்லப்படும் பெரியளவிலான, ஊர்மக்கள் யாவரும் பயன்பெறும் திட்டங்களை முன்னெடுப்பதுதான்.அண்மைக்கால ஆரம்பமாக இருக்கும் இந்த அமைப்பு குறுகிய காலத்தில் சீரான மேலான வளர்ச்சி அடைந்திருக்கின்றமை சிறப்பானது.

கரவையூர் மத்தியில் அமைந்திருந்த கரவெட்டி பிரதேச வைத்தியசாலை அங்குள்ள மக்களுக்கு சிறப்பான சேவையாக அமைந்திருந்தது.ஆனால் அங்கு காணப்பட்ட வசதிகளோ அல்லது அதன் அளவோ அங்குள்ள மக்களுக்கான தன்னிறைவாக இருக்கவில்லை என்பதும் உண்மைதான்.அதனை அங்குள்ள மக்களிடம் இருந்த தேவையாக உணரப்பட்டு அதன் விஸ்தரிப்புக்கான நிலத்தை நீண்டகால கொள்வனவு அடிப்படையில் வாங்குவதற்கு கரவெட்டி ஒன்றியம் தன் பங்கை கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இப்போது கரவெட்டி வைத்தியசாலை என்று அழகுபெற்று மக்களிற்கான மருத்துவ சேவையாற்றிக்கொண்டிருக்கிறது.
Karaveddy Divisional Hospital
Karaveddy


இதேபோல் மருத நிலம் சார்ந்த கரவையூரில் காணப்படும் குளங்கள் இன்னுமோர் அழகு ,அத்துளுக்குளம் அதில் விசேடமானது.தாமரை மலர்கள் அந்த குளத்தில் தனித்துவமான அழகு தரும். அதேபோல் அந்த குளத்தில் இருந்து தான் அங்குள்ள மக்களுக்கான நீர்வடிகால் சேவையும் நீர்த்தேவையும் பூர்த்திசெய்யப்பட்டது.அத்தோடு ஒரு ஊரின் தனித்துவமான குளங்கள் சுகாதார வசதி நிறந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மக்கள் அதைத்தகுந்த முறைபடி பயன்படுத்த உத்தேசித்து அதற்க்கான முள்வேலிகள் சுற்றிவர சிறப்பாக அடைத்து பராமரிக்கப்பட்டு வருக்கிறது,
அத்தோடு கரவெட்டியின் நீர்வடிகால் சேவையை விஸ்தரித்தல்,அதற்கான நீர்சுத்திகரிப்பு மேடை மற்றும் இயந்திரம் அமைத்தல்,ஊர் மக்களின் மாயானங்கள் சிறந்த முறையில் பராமரிக்க அதற்கான வசதிகள் செய்தல் என்று கரவெட்டி ஒன்றிய செயற்ப்பாடுகள் விரிந்துகொண்டே செல்கிறது.

அந்த வகையில் கவெட்டி ஒன்றிய மக்களின் இங்கிலாந்து கரவையூர்மக்கள் இணைந்து கரவெட்டி ஒன்றிய செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் இன்னும் அமையவேண்டிய தேவையான திட்டங்களை அறிந்துகொள்ளவும் அதேபோல் ஒன்றியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை அதிகரித்து பலமான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற சிறப்பான எண்ணத்தோடும் சிறப்பான ஒரு நிகழ்வை 29-05-2011 ஞாயிற்றுக்கிழமை இன்று ஒழுங்கு செய்திருக்கிரார்கள்

.சிறப்பான ஒழுங்குமுறைகளோடு நிகழும் இந்த நிகழ்வில் முற்றிலும் கரவெட்டியின் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றிய புலத்து மக்களின் எண்ணங்கள் பதிவு செய்யப்படுகிறது.கரவையூர் மக்களின் சந்திப்போடு நிதிசேகரிப்பு மற்றும் கலந்துகொள்ளும் மக்களுக்கான ஒரு நிகழ்வும் ஒருங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்ததால் நிகழ்ச்சி சார்ந்த விடயங்களை நிகழ்வு நிறைவு பெற்றபின் தரலாம் என்று விளைகிறேன்.

ஆகவே புலம்பெயர்ந்தும் தமது கடமைகளை உணர்ந்து தத்தமது ஊரின் நலன்சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் பங்கெடுக்கும் உறவுகளுக்கு என்றுமே பாராட்டுகுரியவர்கள் நன்றிக்குரியவர்கள்,
அந்த வகையில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வுக்கு கரவைக்குரல் தன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை பகிர்ந்துகொள்கிறது


(அன்பான பதிவுல நண்பர்களே மிக நீண்ட நாள்களுக்குப்பின் சந்திக்கின்றேன்.ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்ற ஆசை எல்லோரைப்போல எனக்கும் இருப்பது உண்மைதான்,ஆனால் இங்குள்ள என்னைப்போன்ற பதிவர்கள் நேரத்தை தேடுகிறோம்,அதனால் தான் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை,என்றாலும் கரவையூர்மக்களின் நிகழ்வு மீண்டும் எழுத அதேபோல் மீண்டும் பதிவர்களை சந்திக்க களம் அமைத்திருக்கிறது.தொடர்ந்தும் சந்திக்க எல்லாம் கூடிவரட்டும் என்று நீங்கள் நம்பும் இறைவனை நானும் நம்புகிறேன்)அவ்வப்போது குசலம் விசாரிக்கும் அனைத்து பதிவர்களும் நன்றி

4 comments:

அன்பு நண்பன் said...

வாழ்த்துக்கள், தாயகத்து மக்கள் மீதான பொறுப்புணர்ந்து செயற்படும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

ம.தி.சுதா said...

தங்கள் நிகழ்வு சிறப்புற என் வாழ்த்துக்கள்...

வடலியூரான் said...

வாழ்த்துக்கள் உங்கள் பணிதொடர