நண்பன் இன்னொரு படம் வெளியீடு


நண்பனின் இன்னொரு படம் ...... அது எப்படி இருக்கும்.எப்படி
உருவாகியிருக்கும் என்ன கதையாக இருக்கும் என்ற ஆர்வத்தோடு
வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள்.
நிச்சயமாக இது நண்பனுக்காக எழுதப்படுவது அல்ல.அந்த படைப்பை எனது
பதிவின் மூலமும் ஒரு அறிமுகத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தோடு
மட்டுமே  பதிவுசெய்கிறேன்.நிறைவில் உங்கள் விமர்சப்பார்வையை உங்கள்
கருத்துகளில் பதிவு செய்யுங்கள் அந்த படைப்பை மேலும் ஊக்கபடுத்தும் .
நண்பனின் படம் என்றால் எல்லோரும் ஒரு ஆர்வத்தோடு வருவீர்கள்
அதனால் உங்கள் ஆக்கபூர்வமான கருத்து பதிவு செய்யப்படும் என்ற
எதிர்பாபோடு பதிவு செய்திருக்கிறேன்.
லண்டனில் உள்ள கலைஞர்கள் இவர்கள்.கலைத்தாகம் இளைமை
உற்சாகம்,தேடல்கள் என்று தங்களை ஈடுபடுத்தி இன்னுமோர் படைப்பை
வெளியிட்டிருக்கிறார்கள்.பாடல்களுக்கு  தனது நடிப்பை வெளியிட்டுவந்த
நண்பன் குறும்படம் வாயிலாக சிறப்பான நடிப்பை வெளியிடிருக்கிறார்(ன்)
அதுதான் நண்பனின் இன்னொரு படம்


விரதத்தோடு அரைகுறையாக கேக் சாப்பிடும்போது 


                      பின்னுக்கு லண்டன் பாராளுமன்றம் இருக்கிறது என்றுதான் 
                                           கையை காட்டுகிறோம்.நம்புங்கள் 
                               

நண்பன் ஜே ஜே மற்றும் சிந்துவின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது
கலையும் நீயே காதலும் நீயே 

இல்லற வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு கலைத்தாகம் உள்ள இளைஞனின்
கதையாக இது அமைந்திருக்கிறது.கலை ,காதல் இல்லற வாழ்க்கையில்
எப்படி சந்திக்கிறது? அந்த காதல் கலைத்தாகமுள்ள  இளைஞர்களுக்குள்
எப்படி மனதின் ஆழங்களில் எப்படி புதைந்துபோயிருக்கிறது என்பதை
குறும்படம் சொல்கிறது.
மிகுதியை நீங்கள் குறும்படத்தை பார்த்து ரசித்து தெரிந்துகொள்ளுங்களேன்.

லண்டனில் இருக்கும் பல்வேறு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் குறும்படம் 
தயாரிப்பது என்பது மிகக்கடினமான ஒரு காரியம்.
கதை வசனம்,பாடல், நடிப்பு,படப்பிடிப்பு,பின்னணிக்குரல்,பாடல்
இசை,படத்தொகுப்பு என்று பலவேறு கலைஞர்களும் இணைந்து இந்த
படைப்பை மிகச்சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.குறும்படத்தில்
ஆரம்பத்தில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யபட்டிருக்கின்றது.
அனைவரும் முழு வீச்சோடு தங்கள் கலைப்பணியை ஆற்றிக்
கொண்டிருப்பவர்கள்.நண்பன் ஜே ஜே மற்றும் சிந்து இவர்கள் இருவரையும்
நேரடியாக திரையில் பார்க்கலாம்.





கலைஞர்கள் வாழும்போதே வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு
ஈழத்திற்கான  அடையாளங்களாக கலைப்படைப்புகள் மிளிரவேண்டும்.அந்த
கலைஞர்கள் கலையுலக வாழ்வு சிறக்கவேண்டும் என்ற அன்போடு
கரவைக்குரல் தனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.

3 comments:

Anonymous said...

எமது வாழ்த்துக்களையும் எம் ஈழத்து கலைஞர்களுக்கு தெரிவிப்பதில் பெரு மகிழ்வடைகிறோம்.
வாழ்க தமிழ் .

- பிரியா -

Anonymous said...

its like a indian short film. there is no srilankan tamil identity.

Logini said...

It's really nice short film and I appreciate you guy done a good job. I really love this film and thanks for producing this film.