ஆலய நிர்வாக தர்மகத்தா சபையின் வழிகாட்டலுடன் பெருமெடுப்புடன் முன்னெடுக்கப்படும் இவ்வறப்பணி குறுகிய காலத்தில் ஆலயத்துக்கு அமைத்துக்கொடுப்பது என்ற சவாலுடன் முன்னெடுக்கப்படுகிறது.
இளையோர்களின் இரவுபகல் பாராத கடும் உழைப்போடும் அவர்களின் அறச்சிந்தனையோடும் முன்னெடுக்கும் பணிக்கு பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடத்திருக்கிறது.

ஆலயத்தின் வடக்கு வீதியில் ஆலயத்துக்கு அருகில் உள்ள வாசிகசாலைக்கு அருகில் இந்த கேணி அமையவிருக்கிறது. வழமையாக விநாயகபெருமான் தீர்த்தமாடும் கிண்றுக்கு அருகிலேயே அந்த கேணி அமைய விநாயகனின் கடாட்சம் கூடியிருப்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.

வேண்டும் அருள் அருளும் வி நாயகனுக்கு கரவெட்டியின் மக்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும்,எங்கிருந்தாலும் அவர்கள் தொடர்பினை ஏற்படுத்தி தங்கள் பங்களிப்பை மேற்கொள்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.அதைவிட இந்த தகவல் எல்லோர் காதுகளுக்கும் எட்ட வேண்டும் என்ற நோக்கோடும் உதவும் கரங்களுக்கு ஊக்கமாகவும் பதிவிடபடுகிறது. அறப்பணியில் பங்கெடுக்க விரும்பும் அன்பான உள்ளங்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
ஒவ்வொருவரினதும் சிறுதுளிகள் பெருதுளிகள் ஆகும் என்பது மட்டுமல்ல ஒவ்வொருவரினதும் ஊக்கமும் முயற்சியும் சிறந்த அறப்பணியைத்தரும் என்றுணர்ந்து தானம் செய்வீர் விநாயகன் அருள்பெற்றிடுவீர்.
தகவல்: ஆலய நிர்வாக தர்மகத்தா சபை
புகைப்படம்: செந்தூரன்
1 comment:
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல யாவரும் ஒன்றிணைந்து இந்த நீண்ட கால அவாவை நிறைவேற்றி வைப்போம்
Post a Comment