ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரமா? தாயக உணர்வு சந்திப்பா?


அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தினை தொடர்ந்து லண்டனுக்கும் விஜயம் செய்திருக்கிறார்கள் கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள். கனேடிய மண்ணில் புலத்து மக்களால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வை தொடர்ந்து லண்டனிலும் 06/12/2011 ஞாயிற்றுக்கிழமை நடத்த ஏற்பாடாகியிருக்கிறது,நேற்று சனிக்கிழமை காலை லண்டனுக்கு வருகை தந்திருக்கிறார்கள்,



லண்டனில் ஞாயிற்றுக்கிழமை சிறந்த ஒரு ரெஸ்ரோரண்டில் மக்களை சந்திக்கப்போகிறார்கள்,புலம்பெயர் மக்களுடன் சந்தித்து அவர்களின் கருத்துகளும் அதேபோல் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளுடைய கருத்துக்களை மக்களும் அறிந்து இதனூடாக உலகஅரங்கில் தமிழின இன உணர்வு செயற்பாடுகளை விரிவுபடுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இதை நோக்க முடிகிறது,புலம்பெயர் ஊடகங்களுக்கும் அழைப்பினைவிடுத்து மேற்கொள்ளப்படுதல் அந்த செயற்பாடுகளினுடைய உந்து சக்தியாக இருக்கும்,பொதுவாக தாயக மக்கள் கூடியளவு இருக்கும் கனடா,இங்கிலாந்தில் லண்டன்,அவுஸ்ரேலியா போன்ற இடங்களில் இப்படியான செயற்பாடுகள் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கலாம்,அந்த அடிப்படையில் தெரிவுசெய்யபட்டு சந்திப்பு மேற்கொள்ளப்படும் இடங்கள் வரவேற்கக்கூடியவை,

மக்களோடு கலந்துரையாட கனடாவில் ஏற்பாடு மிகப்பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது,சினிமா நடிக நடிகைகளையும் சின்னத்திரை நடிக நடிகைகளையும் அழைத்து அவர்களை சந்திக்க வைத்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க டிக்கடுக்கு கட்டணம் அறவிட்டு நடாத்தபடும் நிகழ்ச்சி அண்மையில் கனடாவில் நடைபெற்றபுகைப்படங்கள் ஆரம்ப உரை முதல் இராப்போசன விருந்து வரை வெளியாகியிருந்தது,தாயக மக்கள் மிகச்சிறந்த அரசியல் வெற்றியோடு இருப்பதை உணர்த்தும் விதமாக அந்த சந்திப்பு அமைக்கபட்டதா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்திருந்தமை அவதானிகள் மத்தியில் அறிய முடிகிறது,தாயக மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதார அபிவிருத்தி மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக பாராளுமன்றங்களிலும் அரசியல் மேடைகளிலும் முழக்கமிடும் அரசியல் வாதிகள் இப்படியான ஐந்து நட்சத்திர உபசரிப்பை மறுத்திருக்கலாமே என்ற கேள்வி தாயக உதவிக்கரம் நீட்டும் சிந்தனைவாதிகள் மத்தியில் எழுந்திருக்கிறது,இந்திய சினிமா மற்றும் கலை நட்சத்திரங்களோடும் புகைப்படம் எடுப்பதற்கு முந்திக்கொள்வதுபோல் ஈழத்தினுடைய அரசியல்வாதிகளும் அதற்கு வழிசமைக்கிறார்களா என்ற கேள்வி தான் அது,
அதைத்தான் ஈழசிந்தனை மக்களுடைய உணர்வாகியிருக்கும் காலகட்டங்களில் அதனை பிரதிநிதித்துவபடுத்தும் மக்கள் பிரதிநிதிகள்  அவர்களை சந்திப்பதனை ஒரு வாய்ப்பாகக்கொள்ளவைக்கவும் மக்கள் அவர்களை சந்திப்பதானால் அதை ஏங்க வைக்கும் ஒரு செயற்பாடாகவும் கொண்டு வந்து ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வர முனைகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்,அல்லது இல்லை இல்லை இது முற்றுமுழுதான தாயக உணர்வு சந்திப்பேதான் என்று அறுதியும் உறுதியுமாக உரைக்கிறார்களா?
பொதுவாக மக்களிடம் தேர்தல்காலங்களில் ஒவ்வொரு வாக்குகளுக்காகவும் வீடேறி கையேந்திவிட்டு பாராளுமன்றங்களில் நட்சத்திர உணவுகளை மிகக்குறந்த விலைகளில் உண்டு மகிழ்கிறார்கள் என்ற கருத்து ஏலவே மக்கள் மத்தியில் இருக்கிறது,அது எந்த இனத்தை சார்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தலாம்,
அதுஅப்படியிருக்க இப்படியான மிகப்பெறுமதியான டொலர்களையும் பவுண்ட்ஸ்களையும் கொட்டி ஏற்பாடு செய்யும் சந்திப்பு அவசியமா? சாதாரண மக்களும் கூடி மக்கள் பிரதி நிதிகளை சந்திக்ககூடிய ஏற்பாடுகள் அமையாதா என்பது எல்லா மட்டத்தினரும் சிந்திப்பதாக அறியமுடிகிறது.
வந்திருக்கும் பிரதிநிதிகளின் உரையின் பின் உணவு உண்டு அந்த புகைப்படங்களையும் பிரசுரித்து இந்த சந்திப்புகளினூடாக என்ன விடயத்தினை தாயக மக்களுக்கு கொண்டு செல்லபோகிறார்கள் என்ற தெளிவான அறிக்கையினை மக்கள் பிரதிநிதிகள் வெளியிடுவாரா? புலம்பெயர்மக்களின் உணர்வுகளையும் தெளிவான சிந்தனைகளைகளையும் கருத்துகளையும் இந்த சந்திப்புகளினூடு அறிந்துகொள்ளலாமென்றால் சந்திப்பிற்காக கட்டணம் செலுத்த முடியாதவர்களின் கருத்துகளை எப்படி அறிந்துகொள்வது என்ற கேள்வி அவதானிகள் மத்தியில் எழுகிறது,எங்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உபசரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துச் சொன்னால் அது நன்றிக்கடன் தெரியாத தமிழனாகிவிடுவான், ஆனால் நட்சத்திர சந்திப்பு வைப்பதுதான் தாயகம் நோக்கிய சிந்தனைவாதிகளின் கேள்வியாகிட்டது.மிகக்குறந்த செலவோடு ஏராளமான மண்டபங்கள் இருக்க அதுவும் டிக்கட் கட்டண அறவிட்டோடு வரும் போது அந்த கேள்வி எழுவது நியாயமாகிறது,புலத்தில் தமிழர்கள் எத்தனையோ பதவிகளிலும் உயர் நிலைகளிலும் இருப்பதால் மண்டபங்களுக்கான தொகை சிறிய தொகை என்பதால் அது உயர் நிலை தமிழர்களுக்கு மிக இலகு,சரி வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த இப்படியான நிலையை கையாண்டிருக்கலாம் என்றால் சிறிய மண்டபத்திற்கான செலவோடு மிகுதிப்பணத்தை வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்து அந்த பணத்தை தாயக மக்களுக்காக பயன்படுத்த ஆவனசெய்திருக்கலாமே என்று கேட்கிறார்கள் உதவிக்கர சிந்தனைவாதிகள்.மாறாக பல்துறை சார்ந்தவர்களை நிகழ்விற்கு அழைத்து அந்த சந்திப்பில் இணைத்திருக்கலாமே என்ற கருத்தும் நிலவுகிறது.இவையெல்லாம் கவனத்திலெடுக்கபடவேண்டிய விடயங்களாகின்றன,
இன்று நடபெறவுள்ள மண்டபத்தின்
உத்தியோகபூர்வ இணயத்தளம்
இங்கு இணைக்கபட்டிருக்கிறது.

என்றாலும் தாயக மக்களுடைய செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களுடைய சிந்தனைகளும் அவசியமாகிறது என்பதும் அவர்களின் ஒத்துழைப்பு வெற்றியோடுதான் எதுவும் ஆகலாம் என்பதை இந்த சந்திப்புகள் உலகத்திற்கும் உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கும் சொல்லபடுகின்ற செய்தியாகிறது,
தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை நாளில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரமுகர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது,கூட்டமைப்பாக உலக அரங்கில் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை சகல நாடுகளின் பிரமுகர்களுக்கு கொண்டு செல்வது சிறப்பானதே, தனித்துவத்தோடு தகுந்த முடிவுகளை எடுத்து சிறப்பான முன்னேற்பாடான செயற்பாடுகளுக்காக துணிச்சலான இப்படியான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்தபட வேண்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் அதையே சந்தர்ப்பங்களாக்கபடக்கூடாது என்பதும் மக்களுடைய சிந்தனை.புலத்துமக்களின் வாய்களில் உச்சரிக்கப்பட்ட மற்றும் ஊடகங்களின் கருத்துகளின் தொகுப்பாக இந்த பதிவு வருகிறது,உங்கள் கருத்துகள் ஆரோக்கியமாக பதிவு விதிமுறைகளுக்குட்பட்டு நாகரீகமாக இருப்பின் எல்லாமே பிரசுரிக்கபடும்,



என்னங்க ரொம்ப வெயிட்டா இருக்கு, எண்டாலும் இதையும் சாப்பிட்டு பார்ப்பம்


போட்டோவுக்கு சிரிச்சே ஆகவேணும்,வெப்சைட்டிலை வரும் போது நல்லா இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1


ஓஓ டயபிற்றிக் பிறசர் இருக்கிறவர்களுக்காக கொஞ்சம் உப்பு உறைப்பு கொழுப்பு எல்லாம் குறைச்சுத்தான் சமைச்சது, நல்லா இருக்கோ??????????????
ஓஓஓஓஒ திறமா இருக்கு!!!!!!!!!!!!!!


இதென்ன இது அந்த காலம் தந்த ரோசாப்பூ இப்பவும் வச்சிருக்கிறீங்களோ????
வாடாமல் இருக்கு????



எத்தனை மேடை ஏறியாச்சு?அரசியல் பேச்சு எண்டால் கலக்கல் தான்!!!!!!


அது சரி எப்ப சாப்பாடு??


என்ன இருந்தாலும் ஒரு குழம்பு இருக்க வேணும், கண்டு பிடிச்சு தந்திட்டீங்கப்பா!!!!!!!!

புகைப்படங்களுக்கான பின்னூட்டம் சற்று நகைச்சுவைக்காகத்தான்,போட்டொ எடுக்கும் போது என்ன பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று யாருக்கு தெரியும்.

No comments: