Showing posts with label பள்ளிபயின்றதொருகாலம். Show all posts
Showing posts with label பள்ளிபயின்றதொருகாலம். Show all posts

உலகம் கொண்டாடும் காதல்!!!

காதலர் தினம்



உலகம் கொண்டாடும் காதல்….
இலக்கியமெங்கும் நேசித்ததும் காதல்…
புராதனத்திலிருந்து பூசித்ததும் காதல்….
உயிருள்ளவரை நிலைபெறப்போவதும் காதல் தான்…..
பள்ளிக்கூடத்திலிருந்து படலை வரை காதல் இயங்கும்...
சில வாழ்வையே இயக்கும்…
பள்ளிக்காதல் சில புஷ்வாணமாகும்..
சில வாழ்ந்து நிலைக்கும்…..
பல என்றும் மனதில் நிலைக்கும்….

காதலில் கலக்ககுவது எப்படி??????
கலைத்து கலைத்து காதலித்துப்பார்
அது என்றும் களைக்காத சுகமாகும்……

நேரகாலம் தெரியாது போகும்!!
இரவு பகலாகும்!
சாப்பாட்டு நேரங்கள் மறந்து போகும்….
குளிக்கும் நேரம் மாறும்..
அப்படி குளித்தாலும் அது மணிக்கணக்காகிவிடும்….

பகலில் நடை நித்திரையாக்குவதும் காதல் தான்….
பகல் கனவும் காதல் கனவாகும்…….

இரவில் காதல் கதையை காதோடு கேட்ட ருசிகள்
தொலைபேசியும் அறியும் காதல் கதை…..
ஒரே கதையை காது திரும்ப திரும்ப கேட்டாலும் 
உற்சாகம் மெருகேறும்….......


வீட்டிலிருந்து சிலரை ஓடவைக்கும்….
காதலின் வெற்றிக்கான பாதை அது என்பர்…..

காதலை கொண்டாட சிலருக்கு
பயம் கொஞ்சம் இருக்கு….
யார் யாரையோ காதலிச்சு போடுமோ என் பிள்ளை என்று தான்….
எவனுக்கு எவளென்று எழுதியிருக்கு – அதை
களவாக்காமால் கெளரவமாக்கின் வாழ்க்கையில் வெற்றி
கருதிவிட்டோர் வாழ்வும் என்றும் சுகமே……

காதல் சில கனவாகும் …..
இன்னும் சில கதையாகும்…
சில மணமேடவரை ஏறும்….
வென்ற காதலை உலகம் பேச மறுக்கும்
அதை மனதில் இருக்கவைத்து மறந்துபோகும்…
பிரிந்தயையும் தோற்றதையும் வாய்க்கு வாய் உச்சரிக்கும் உலகம்


காதலிப்பவர்கள்
காதலை ரசிப்பவர்கள்
காதலை ருசிப்பவர்கள்
காதலில் காத்திருக்கும் சுகம் காணுவோர்....
 நினைவில்
காதல் பட்டியல் நீளுகிறது.............
ஏனெனில் உலகம் கொண்டாடுவதும் காதல் தான்………

கொண்டாடும்  காதலுக்கு ஒரு தினம்.......
அன்பின் பெருமையை சொல்ல அது……
பாசத்தின் வலிமையை சொல்ல அது……
காதலை காதலித்து காதலால் வாழ்வமைத்து
காலமெல்லாம் காதல் நிலைக்கட்டும்…

காதல் தொடரும்
காதல் கவியும் தொடரும்
                                                காதலில் உங்களில் ஒருவன்
                                                               யோகா தினேஷ்





மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை இழந்துவிட்டோம் என்பது மனதுக்கு வேதனையளிக்கிறது,



செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டு "ஆசிரியர்" என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக  வாழ்ந்து காட்டியவர் தான் ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள்.ஆரம்பக்கல்வியே வாழ்க்கையில் அடிப்படைக்கல்வி என்பது யாவரும் அறிந்ததே.அந்த கல்வியை மாணவன் எவ்வாறு பெற்றுக்கொள்கின்றானோ அதுவே அவனை சீரிய பாதையில் வழிகாட்டிச்செல்லும்  என்பது உண்மைதான்.அதை ஆசிரியர் செவ்வனே அறிந்து மாணவர்களை வழிநடத்துவார்.
சிறுபராயம் முதலே மாணவர்கள் பணிவுடனும்,பண்புடனும் அதேவேளை போட்டி மனப்பானமையுடனும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்பிப்பவர் ஆசிரியர் அவர்கள்.ஆசிரியர் ஐந்தாந்தர புலமை பரீட்சையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் பெரும் பணியினை கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
பாடசாலை பரீட்சைகளுக்கு கூடுதலான புள்ளிகளை பெறவேண்டும் என்பதைவிட ஆசிரியர் அவர்களின் பரீட்சையில் மாணவர்கள் கூடுதல் புள்ளிகள் பெற மிகவும் பிராயத்தனதொடு கற்பார்கள் என்றால் ஆசிரியரின் முக்கியத்த்துவம் உங்களுக்கு புரியும்.
ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள் அதிபராக பணிசெய்து வந்திருந்தாலும் ஆசிரியராக இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே தனி என்று சொல்பவர்.
மாணவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ந்திருப்பார். ஆசிரியரின் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் மிகச்சிறந்த பதவிகளில் கடைமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த பெருமை அவருக்கு இறுதிக்காலம் வரை நிலைத்திருந்தது.

நான் அறிந்த வகையில் அதிபராக பணிபுரிந்த காலங்களில் கரணவாய் மணியகாரன் தோட்டம் வித்தியாலயத்தின் காலங்கள் அவரின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.அவ்வூர் மக்களோடு மக்களாக சேர்ந்து பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.
ஆசிரியராக அதிபராக சேவை உள்ளம் கொண்டவராக இருந்து 2008 ம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் தேதி தனது அறுபதாவது வயதில்  தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிற்றுக்கிறார்.ஓய்வு பெற்றாலும் தனது ஆசிரியப்பணியை தொடர்ந்தும் செய்துவந்தார்.கற்பித்து மாணவர்கள் அடையும் வளச்சியில் அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில் தானும் 
மகிழ்வுறுவார்.அன்றய காலங்களில் வடபுலம் யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தபோது ஆசிரியர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அப்போதும் கூட அவர் தன்னை நம்பி வீடு வரும் மாணவர்களை விட்டுவிட்டு தனது சொந்த தேவைக்காக அதுவும் தன்னுடைய மகனுக்கான முக்கியமான ஒரு தருணத்தில் கொழும்புக்கு செல்வதை தவிர்க்க போவதாகக் கூறியிருந்தார். அப்படியாக மாணவர் மீது அக்கறை கொள்ளும் ஆசிரியர் ஒருவரிடம் கல்விகற்றேன் என்ற பெருமை எனக்கு மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் அவரின் சிறப்பான மாணவர்களுக்கும் என்றும் இருக்கும்.
இப்படியான சிறப்புக்கள் பொருந்திய ஆசிரியர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்று சொல்லவே வேதனை தருகிறது,தன் அன்பான புத்திரர்களையும் சீரியபாதையில் வழி நடாத்தி இவ்வுலகை நீத்திருக்கிறார்.ஆசிரியரின் பெருமைகள் அவரின் பெயரும் புகழும் அவரின் மாணவர்களால் என்றும் சிறப்புறும்,ஆசிரியரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு கரவைக்குரல் தன் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறது

அன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்

நீண்ட நாள்களுக்குப்பிறகு அண்மையில் ஒரு நண்பர்கள் வட்டத்தை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது,பாடசாலையில் துள்ளித்திரிந்த காலத்தில் பழகிய நண்பர்கள் அவர்கள்.பாடசாலைக்காலம் என்றால் சொல்லவா வேணும்,சின்ன சின்ன சண்டைகள்,அந்த கால ஆசிரியர்களினுடனான அனுபவங்கள்,அடிகள் சொல்லித்தந்த பாடங்கள்,விட்ட பகிடிகள் என்று நேரம் போனதே தெரியாமல் கலகலப்பாக மகிழ்ந்த மாலை நேரம் அது.

உடனடியாக கிடைத்த அழைப்பு அது, நண்பன் ஜோர்ஜ் அருணின் திருமணப்பதிவுக்கு செல்லகிடைத்த அருமையான சந்தர்ப்பத்தால் 15 வருடங்களுக்கு மேலாக காணாத நண்பர்களையெல்லாம் காணக்கிடைத்தது.
இந்த திருமணப்பதிவு என்ற விடயம் மூலம் நண்பன் ஜோர்ஜ் அருணைத் தெரிந்தவர்கள் அவருக்கு திருமணம் முடிந்தாயிற்று என்றும் தெரிந்து கொள்ளமுடியும் என்ன அப்படித்தானே? ஏனென்றால் அவனுக்கு யாரும் வேற யாரும் "சம்மந்தம் கிம்மந்தம்" பேசினாலும் எண்டு முற்கூட்டியே ஒரு முன்னாயத்தம் தான். நல்ல அக்கறை எண்டு நினைப்பீங்க, நாங்க எல்லா விசயத்திலையும் கவனம் பாருங்கோ.
நண்பர்கள் வட்டத்தில் அவன் நட்பு கிடைத்தது பாடசாலைக்காலத்தின் இடைக்காலத்தின் பிற்பகுதி என்று சொல்லலாம். அவரை நான் பாடசாலைக்குள் பழகிய காலத்தைவிட மைதானத்தில்தான் கூடிய நேரம் பழகியது என்று கூட சொல்லலாம்.ரியூசனில்(ஆங்கிலத்தில் தனியார் கல்வி நிறுவனம் எண்டு பெரிய பெயர் பாருங்கோ,அதாலை எங்கடை ஆக்கள் யாருமே பாவிக்கிறது இல்லை)வந்திருந்த கூடியளவு நண்பர்கள் பழகியிருந்ததார்கள்.எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க இல்லை,மைதானத்தில் பழகியதுடன் அவன் இப்படியே உயர்கல்வியென்று பாடசாலையைவிட்டு வந்துவிட அவனுடனான தொடர்பு குறைந்தே விட்டது,ஆனால அவனுடன் விளாயாடிப்பழகியதால் நட்பு குறுகியகாலத்தில் முற்றித்தான் இருந்தது. அதனால் இங்கிலாந்து வந்தவுடன் வந்த அன்பான நட்பின் அழைப்பு திடீரென்று எப்படியாவது செல்ல வேண்டும் என்று "வடிவாக வெளிக்கிடவும் ஏலாமல் போச்சு பாருங்கோ”
அவரின்ரை அழகுக்கு அவருக்கு வெளிக்கிடவும் வேண்டிக்கிடக்கு எண்டு நினைக்கிறிங்க என்ன?

நவரங்கன் பாருங்கோ நல்லாக் கார்(ஆங்கிலத்தில் மகிழூந்து எண்டு சொல்லுவினம்) ஓடுவன்,ம்ம் அவன் வீ்டு தேடி வந்து ஏத்திக்கொண்டு போனதால சொல்லுறன் எண்டு நினைக்காதீங்கோ, நான் வீட்டு விலாசம் சொல்ல ஒரு அரை மணித்தியாலத்திலை " டக் " எண்டு அவன் வந்து நிண்டான் பாருங்கோ,இதைவிட அவன்ரை கெட்டித்தனத்துக்கு வேற என்ன வேணும்.இதற்கு முதலே நவரங்கனை சந்தித்ததாலை அவனுடன் கூட வந்த இனனுமொரு நண்பன் பிரதீ்ப்,சின்ன வயசிலையிருந்து கொஞ்சம் மீசை முளைக்கிற காலம் எண்டு சொல்லுவாங்களே,அந்த காலத்திலிருந்து பதினொரு வருடங்களுக்குப்பிறகு சந்திச்சதாலை அவனைக்கண்டவுடன் ”வாங்கோ போங்கோ” எண்டு தான் கதைக்க சொல்லிச்சுது,அவனும் "எப்படி இருக்கிறீங்க ”எண்டுதான் கேட்டான்.சரி சுகத்தை சொல்லி “டக்” எண்டு வெளிக்கிட்டது எண்டு முதலே சொன்ன மாதிரி வெளிக்கிட்டு கூடவே வந்த கௌதமனுடனும் அளவளாவிக்கொண்டு நண்பனின் திருமணப்பதிவு கொண்டாடத்துக்கு
போகத்தொடங்கியாச்சு,
பள்ளிக்கூடத்திலை ”நவத்தார்" என்று மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒரு ஆசிரியர் நவரட்ணம் அவர்களின் கதையுடன் தான் கதைகள் ஆரம்பமானது, த்தாருக்கு எங்கடை நவரங்கன் விட்ட பகிடிகளும் அதற்கு அவர் விட்ட பகிட்களும் எண்டு கௌதமன் சொல்ல அதுக்கு நவரங்கன் அவர் கதைப்பது போல கதைச்சு நடிச்சுக்காட்டினான், நவத்தார் சமய பாடத்திலை கேட்ட கேள்விகளும் திரு நீறும்சந்தனமும் வைக்ததற்கு தந்து விட்ட அடிகளும் அந்த அடியின் போது எல்லாம் செப்படி வித்தை” என்று சொல்லி அடிப்பதும் எண்டு கதை ஒரு பக்கமாக சென்று கொண்டே இருந்தது, நவரங்கனின் காரும் ஓடுது.

அதற்கிடையிலை இன்னுமொரு வாத்தியார் இருந்தவர் கந்தசாமி வாத்தியார்,இரண்டு கந்தசாமி ஆசிரியர்கள் இருந்தாலும் தமிழ் படிப்பிக்கிற கந்தசாமி வாத்தியார் அடிச்சுவிட்ட அடிகளைப்பற்றித்தான் முக்கிய கதை. அந்த மனுசன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை எண்டால் அடிக்கும் ஒரு அடி,அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பள்ளிகூடம் வந்திடுவம்,போதாக்குறைக்கு நவரங்கன் அந்தக்காலம் வகுப்பு மாணவத்தலைவன் எண்டதாலை கட்டாயம் வந்திடுவன் எண்டு கொஞ்சம் நக்கலாக கதை போய்க்கொண்டே இருந்தது,
வகுப்பிலை பாருங்கோ அந்தக்காலம் ஆசிரியர்கள் இல்லாத சந்தர்பங்களில் யாரும் யாருடனும் கதைக்ககூடாது,கதைச்சால் மொனிட்டர்(அதைத்தான் முதலில் வகுப்பு மாணவத்தலைவர் என்று ஆங்கிலத்தில்) எழுப்பிவிட்டுவிடுவார்.அல்லது கரும்பலகையிலை எங்கடை பேர் இருக்கும்,பெயர் கரும்பலகையிலை இருக்கிற நேரத்திலை வாத்தி யாரும் வந்தால் அதோகதிதான்.அதுவும் இந்த கந்தசாமி ஆசிரியர் வந்தால் ஏன் வீணாக்கதைச்சன் எண்டு இருக்கும்,இப்போது கந்தசாமி ஆசிரியர் மாலிசந்தி பிள்ளையார் ஆலயத்தின் தர்மகத்தா சபைத்தலைவராக இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்,கோயில் பிரார்த்தனை நேரங்களில் யாரும் கதைச்சால் என்ன நிலைமை என்று கேட்க மறந்துவிட்டேன்.

அப்படியே ரியூசனில் விட்ட சேட்டைகள்,அடிகள்,ஓட்டங்கள்,விளையாட்டுக்கள் என்று கதைத்தபடியே இருக்க கொண்டாட்ட நேரமும் வர மண்டபத்துக்குள் போய் சந்திப்பில் ஒரு கைகுலுக்கல் எல்லோரும்.
பொதுவா ஒரு வகுப்பு எண்டால் ஒரே பெயருடை பலர் இருக்கலாம் தானே,அப்ப சில வேளைகளில் அவர்களை கூப்பிடுவதற்கு பட்டங்கள் வைத்தோ அல்லது அவர்களின் முதலெழுத்தை சொல்லியோ கூப்பிடுறது தானே,சுதாகரன் எண்டு சொல்லுற ரி.எஸ். தான் வாசலிலை நிக்கிறார்.சாப்பாடு தானே ,பின்னை வேளைக்கே வந்திட்டான் எங்களைப்போல.காலமையிலை இருந்து சாப்பிட இல்லை எண்டு கவலைப்பட்டான்.சரி அப்படியே இங்கிலாந்துக்கு வந்ததைப்பற்றி கதைச்சு ஒரு மூலையாக எல்லாரையும் பார்க்கவேணும் எல்லே,அப்படி ஒரு லொக்கேஷன்(அமைவிடம் எண்டும் ஒரு ஆங்கிலம்) எடுத்துிருந்தாச்சு.


கடிகள் குதறல்கள் ஆரம்பம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் குறவாக இருந்தகடிகள் யோகேந்திரா,சுதர்ஷன் மற்றும் திருக்குமரன் வருகையோடு கொஞ்சம் களைகட்டியது.யோகேந்திரா சுதர்ஷன் அவங்கள் வரணி தான் சொந்த இடம், பக்கத்து வீடுமோ தெரியாது.இரண்டு பேரும் மாறி மாறி கடிச்சுக்குதறிக்கொண்டே இருந்தாங்கள்,அவங்கள் படிக்கேக்குள்ளேயும் சி வகுப்பிலைதான் படிச்சவங்கள்,அந்தக்காலம் சும்மா சும்மா அறுக்கிற மாதிரியே அண்டைக்கும் அறுத்துக்கொண்டே இருந்தாங்கள்,ஹாட்லியிலை கன்ரீனிலை(சிற்றுண்டி சாலை எண்டு ஆங்கிலம்- இவ்வளவும் சொல்ல கஷ்டம் தானே அதாலை டக் எண்டு தமிழிலிலை சொல்லுறது கன்ரீன் எண்டு) வினாசி அண்ணையின்ரை தேத்தண்ணிக்கதையும் அந்த ஒரு ரூபாக்கு தாற அந்த போண்டாவைபற்றியும் நினைவு படுத்தினாங்கள். அதுக்கு ஒரு தகடு வெட்டித்தருவினம் வினாசி அண்ணையிட்டை குடுத்தால் தான் தேத்தண்ணி கிடைக்கும்.
அதுக்காக வீட்டிலையிருந்தே வெட்டிக்கொண்டு வந்த குமணன்,குபேரன் எண்ட இரட்டை உறவுகள்,அதை போதாக்குறைக்கு கனகாலம் பாவிச்சமாதிரி அந்த தகட்டை பழுதாக்கிகொண்டு வாறதாம்.அந்த தகட்டையே குடுக்காமல் தேத்தண்ணி குடிச்சவங்களும் இருக்கிறாங்களாம்.
அப்படி அந்தக்கதை போக


ஜோர்ஜ்க்கு வாழ்த்து அட்டை கொடுக்க சுதர்ஷன் எழுத வெளிக்கிடுறான்,என்ன எழுதிறது எண்டு சிக்கல்,அப்ப சுதர்சனுக்கு எல்லாரும் சொல்லுகினம்,”””தங்கச்சங்கிலி அறுந்தாலும் எம் அன்புச்சங்கிலி அறாது”முத்திரை வீட்டில் நித்திரை, முத்திரை சித்திரையில் வரும்,” எண்டு எழுதச்சொல்லி அட்வைஸ்(புத்திமதி),சுதர்சனும் எழுத தொடங்கிவிட்டான்,அப்ப யோகேந்திராக்கு மனமில்லை,அதை ஆங்கிலத்திலை எழுதவேணும் எண்டு சொல்ல அப்ப அதை ஆங்கிலத்திலை சொல்லு பார்ப்பம் எண்டு சுதர்சன் யோகேந்திராவுக்கு சவால் விடுறான், ”எங்கை சொல்லு பார்ப்பம்” யோகேந்திராவைக்கேட்க நம்ம நவரங்கன் மொழிபெயர்க்கிறார் பாருங்கள்,"GOLD CHAIN BREAK OUR LOVE CHAIN NO BREAK"."STAMP HOME SLEEPPING" எண்டு நவரங்கன் தொடர்ந்துகொண்டே போக ”இங்கிலிஷ் தெரியும் எண்டா சொல்லு அதை எழுதுவம்” எண்டு யோகேந்திராவை விட்ட பாடில்லை சுதர்சன்.இப்படித்தான் கடித்துக்கொண்டே இருப்பாங்கள் அந்தக்காலதிலையும்,
அது அப்படியெ போக
அந்த கால அங்கிரி விளையாட்டுக்களையும் சொல்லிச்சிரிச்சாங்கள்,ரிஎஸ் உடன் எஸ்.எஸ் கோவம்,எஸ்.எஸ் உடன் சுந்தரேஸ்(சக்களாவத்தை) கோவம்,சுந்தரேஷ் உடன் ரிஎஸ் கோவம்,என்ன ஒரு முக்கோண நட்புகோவம்,அதிலை என்ன பகிடி எண்டால் அவங்களுக்குள்ளை யாரிலையும் யாரும் தொட மாட்டாங்க,யாரிலையும் தொட்டு மற்றவையிலை முட்டினால் ஒரு ஊது ஊதுவாங்க அதிலை நெருப்பு பத்தினாலும் நூர்ந்துபோய்விடும் எண்டு அதையும் சொல்லிசிரித்தபடியே கலக்குது கொண்டாட்டம்.

வீடியோகாரன் எடுக்க வந்து ஒரு பக்கமாக வீடியோ எடுத்துக்கொண்டு எங்களையும் அது எடுக்க வருமெண்டு யோகேந்திராவிட்ட பெருங்கடி,ஆனால் வீடியோக்காரன் அவனை வீடியோ பிடிக்கேக்குள்ளை அந்த முகத்தையும் ஷேட்டையும் போட்டு படுத்தின பாடு.

இப்படியாக நீண்ட நாள்களுக்குப்பிறகு அருமையான துள்ளித்திரிந்த காலத்து பள்ளினினைவுகளுடன் கலகலப்பாக இருந்து ஒரு சில மணிகளில் பிரிந்துவிட்டோம்.கலப்புக்களும் வயிறு நிறைய சாப்பாடும் முடித்துக்கொண்டு அந்த இனிய நினைவுகளோடு நவங்கனின் காரேறி வீட்டுக்கு வந்தாச்சு.அன்றைய பள்ளியின் நினைவுகளை திரும்பவும் மீட்கவும் அன்பு பாடசாலை நண்பனை வாழ்த்தவும் முடிந்தது மிகவும் மகிழ்ச்சி.பள்ளிப்பயின்றதொரு காலத்தின் தொடரில் இதுவும் அமையபோகிறது.
என்றும் நலமுடன் வாழ எம் அன்பான வாழ்த்துக்கள் நண்பா.ஜோர்ஜ் அருணைத்தெரிந்தவர்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.தெரியாதவர்கள் பள்ளிப்பயின்ற காலத்தின் அருமை நினைவுகள் பற்றி கருத்துப்பகிர்ந்துகொள்ளுங்கோவன்,

பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்

பள்ளிப்பயின்றதொரு காலம் தொடர்விளையாட்டு

தோழி சினேகிதியின் ஆரம்பத்துடன் அற்புதமாக வீசிய பந்தை வந்தியத்தேவரால் எனக்கு சுழற்றி எறியப்பட்ட சுழல் பந்து போன்றதான ஒரு அழைப்பு,பள்ளியில் களித்த பசுமையான அற்புதமான விடயங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தான் அந்த அழைப்பு,எனக்கு எதை எழுதுவது எப்படி எழுதுவது என்ற சின்ன சிக்கல்,பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் எத்தனை சுவாஷ்ய நிகழ்வுகள்,அதே போல அவ்வப்போது பாதித்த விடயங்கள் என்று சொல்லி அடுக்கிக்கொண்டே போகக்கூடிய பல விடயங்களை எப்படி ஒரு சில நிமிடங்களில் அடக்கிவிடலாமென்று தான் அந்த சிக்கல்,

ஆனால் வந்தியத்தேவரின் அழைப்பை இவ்வளவு நாளும் ஏற்றுகொள்ளவில்லையே என்று சின்ன கோவம் போட்டுவிடுவாரோ என்ற பயம் இன்னொரு புறம்,முடிந்தவரை நினைவுகளுக்கு எட்டியவரை பள்ளிக்காலத்தின் அற்புதமான நினைவுகளை பதியலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்,இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு காணலாம் என்ற எண்ணம்,
அதேவேளை இன்னும் மூன்று பேருக்கு “இந்த பதிவால் பெற்ற இன்பம் துன்பம் எல்லாம் பெறுக இந்த வையகம்” என்றவாறாக அழைப்புவிடலாம் என்றும் எண்ணம்,அழைப்புவிடவேணும் எண்டதுதான் சட்டமும் பாருங்கோ.

என் வரலாற்றில் இருவேறு பாடசாலைகள்,
ஒன்று கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,
மற்றது ஹாட்லிக்கலூரி,அடிப்படைக்கல்வியின் ஆரம்பம் மாணிக்க வாசகர்,அதைத்தொடர்ந்து தக்கவாறு செப்பனிட்டு ஒப்பேற்றிவிட்டது ஹாட்லிக்கலூரி,பெற்ற படிப்பினைகள் ஏராளம்,வாங்கிய அடிகள் தாராளம்,இன்றும் இனிக்கும் நினைவுகள் அவை,


ஆரம்பக்கல்விக்காய் கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்தில் இணைந்தேன்,அதிபர் பாலச்சந்திரன் அவர்கள் அப்போது இருந்தார்கள்,நான் ஆறாம் ஆண்டுக்காய் ஹாட்லியில் இணையும் வரை அவர்தான் அதிபர்,கோபத்திற்கும் அவருக்கும் வெகுதூரம்,ஆனால் ஒரு பிரம்பு கையில் சிலவேளைகளில் இருக்கும்,காலை நேர இறைவணக்கத்தின் பின் மேடையில் தோன்றி ஏதாவது அறிவுரைகள் கூறிடுவார்,அதேபோல மாணவர்களின் திறமைகளையும் அந்த மேடையில் எடுத்துக்கூறி அவர்களுக்கு தெம்புகொடுப்பார்.

ஆச்சி ரீச்சரின் ஆரம்பத்துடன் ஆரம்பக்கல்வி,மிகவும் வயதானவர்,சின்னஞ்சிறு பாலகர்களுக்கு ஏற்ற ஆசிரியர்,இன்றும் சொல்வேன் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் சின்னஞ்சிறு பாலகர்கள் ஆரம்பக்கல்வி கற்க வேணுமென்று,அப்படி அன்பான அரவணைப்பால் ”அ ஆ” ஊட்டியவர்,இன்று அவர் எம்மோடு இல்லை என்று அறிந்தேன்,”குடைபிடித்துச்செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு” என்று ஆரம்பத்தில் பாடிய பாடல் இன்றும் நினைவிருக்கிறது என்றால் அது ஆச்சி ரீச்சரையும் வள்ளிப்பிள்ளை ஆசிரியையும் சாரும்,

தொடர்ந்து கதைகள் பல கூறி சிறு பராயத்திலேயே எங்களை சிரிக்க வைக்கும் படியான கதைகளை கூறி வகுப்பெடுத்தவர் இரத்தினம் ஆசிரியர்,அவரோடு அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,மிகவும் சந்தோசமான முகமலச்சியோடு சுகம் விசாரித்தார்.என்னிலும் என் இன்னோரன்ன திறமைகள் வளரவேண்டும் என்று மிக ஆவலாக இருந்த ஆசிரியர்களுள் இரத்தினம் ஆசிரியரும் ஒருவர்,அவரிடம் கல்வி கற்கும் காலத்தில் ஆசிரியர் அவர்கள் என்னோடு யாழ்ப்பாணம் வரை வந்து எனக்கு சுப்பிரமணிய பாரதியார் வேசம் போடுவதற்காக தலையில் தலப்பாகை,பாரதிபோல் வேட்டி தாறுபாய்ச்சி(குருக்கள்,மற்றும் கோயில் பூசகர் வேட்டி உடுக்கும் முறை) மேடையேற்றி அழகுபார்த்தவர்,அவரின் ஆசியோ என்னவோ எனக்கும் அங்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது,

அதைத்தொடர்ந்து இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர்,அங்கு இருவேறு கணபதிப்பிள்ளை ஆசிரியர்கள் இருந்ததால் இவர் இடதுகை வளம் இருந்த ஆசிரியர் ஆகையால் இவரை எல்லோரும் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் என்று சொல்வது வழமை.எப்போதும் பின்வாங்கில் கூட்டமான நான் அவருடைய வகுப்பில் தான் முதன் முதலில் பின் வாங்கிலில் இருக்கச்சென்றேன் என்ற நினைவு,வகுப்பறையில் பகிடி விடுவதும் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லோருடனும்(ஆண் பெண் வேறுபாடு இல்லைப்பாருங்கோ) நகைச்சுவைகள் விடத்தொடங்கியது இந்தக்காலத்தில் தான் என்ற நினைவு.
இவர்களைவிட மாகாலிங்கசிவம் ஆசிரியர் இங்கு கற்பித்தாலும் அவரிடம் படிக்கும் வாய்ப்பு மாணிக்கவாசகரில் கிட்டவில்லை,தனியார் கல்வி நிறுவகத்தில் கிடைத்தது,அதுவும் ஹாட்லிக்கல்லூரியில் இருந்தபோதுதான் கிடைத்தது,அழகுதமிழில் அவரது கற்பிக்கும் முரை இருக்கும்,நான் என் இன்னோர் பதிவில் குறிப்பிட்டதுபோல ஆசிரியர் அவர்கள் மாணவர்களில் தனிப்பட்ட ரீதியில் கூட கவனஞ்செலுத்தியவர்,ஆலய மணி ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று ஆலயத்தின் இறைவனை நினைக்கவேண்டும் என்று நடைமுறையில் கொண்டுவந்தவர்,ஆசிரியர் அவர்கள் அண்மையில் இவ்வுலகை நீத்தது கேட்டு துயரமடைந்தேன்,

பிரம்படி,நைஸ் அடி,கரும்பலைகையை பார்க்க விட்டு அடித்தல் போன்ற பல்வேறு ரகமான அடிகள் அறிமுகமான காலம் இந்த மாணிக்க வாசகர் வித்தியாலயத்தின் காலம், நைஸ் அடிக்கு பிரபலமானவர் இரத்தினம் ஆசிரியர்,அதாவது பிரம்பை அதிகளவு தூரம் தூக்காமல் மெல்லவாக கொண்டுவந்து ஊண்டி அடிப்பதுதான் அந்த அடி,அதைவிட மகாலிங்க சிவம் ஆசிரியர் மற்றும் இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் கையிலுள்ள மணிக்கூட்டை கழற்றுகின்றார்கள் என்றால் பிரம்படி தொடங்கப்போகிறது என்று அர்த்தம்,

அதைவிட நாங்கள் படிக்கும் காலத்தில் தான் சின்ன வகுப்பிலை படிக்கும் அனைவருக்கும் தையல் கலையும் ஒரு பாடமாக வந்தது,அதைவிட அந்த தையல்கலைக்கும் தமிழ்த்தினப்போட்டி மற்றும் ஆங்கில தினப்போட்டிகள் போலவே ஒரு போட்டி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது,எனக்கெண்டால் அந்த சின்ன வயசிலேயே அந்த பாடத்தை
”கட்” அடிச்சு எங்கையாவது ஒளிச்சு ஓடலாமோ என்று எப்பவும் நினைப்பேன்,ஆனால் தங்கம்மா ரீச்சர் எங்கட வீட்டுக்கு கிட்ட எண்டதாலை வீட்டுக்கு கதை வந்திடும் எண்டதாலை சுட்டுவிரலிலை தையலூசி குத்தி குத்தி காயம் வந்தாலும் அந்த பாடத்துக்கு போய் “பெரு நூலோடி,சிறு நூலோடி,சங்கிலி தையல்” எண்டு படிச்சு துணி எல்லாம் கிழிச்சது என்று இப்பவும் நினைத்துச் சிரிப்பேன்.

இதைவிட அந்த சின்னஞ்சிறு வயசிலை விளையாடும் விளையாட்டுக்கள் இனி எப்போதும் விளையாடவே கிடைக்காதா என்ற உணர்வும் கூட,ஒளிச்சுத்தொட்டு,அடிச்சுத்தொட்டு, நாயும் இறைச்சித்துண்டும்,பேணியும் பந்தும்,என்று வகுப்பறக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகள்,கணிதப்பாடத்துக்கும் ஆசிரியர் விளையாடவிடமாட்டாரோ என்றுதன் எப்போதும் எண்ணம் இருக்கும்,அதேபோல இருக்கும் மேசையிலேயே இருந்தபடி எல்லோரையும் ரசிக்க வைக்கும் விளையாட்டு பேனைச்சண்டை,பொதுவாக ஆசிரியர்களுக்கு மறைவாக அவர்கள் இல்லாத நேரங்களில் கலக்கும் விளையாட்டு அந்த விளையாட்டு,ஒரு குறிப்பிட்ட எல்லையை வைத்த படி அந்த பெட்டிக்குள் இருந்தவாறாக பேனைகளை மோதவிடுவதும் அதை வெளியே அடித்துத்தள்ளாதபடி தடுப்பதுமாக அந்த விளையாட்டு இருக்கும்,அந்த விளையாட்டில் வரும் உத்வேகமும் ஈடுபாடும் எதிலும் வந்ததில்லை,விளையாட்டுகளும் அந்த இனிய காலங்களும் ஆரம்பித்ததும் இங்குதான்.

இதைவிட கல்வியுடன் ஆரம்பகலைகளைக்கூட ஆரம்பத்தில் எனக்கு அள்ளித்தந்தது இங்குதான்,எனது ஏழாவது வயதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்வு ஒன்றை மேடையேற வைத்ததும் இந்த வித்தியாலயம் தான்,அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேதான் எனக்கு கலை தெரியும் என்று ஏற்றுக்கொண்டவனானவன் நான்.இவையெல்லாம் இங்கு கூறலாமோ என்ற பயம் கூட எனக்கு,சுயபுராணத்திற்கு ஏன் இடம் இங்கு கொடுக்கவேண்டும் என்றும் நான் சிந்திக்கிறேன்,ஆனால் பள்ளியில் கிடைத்த அற்புதமான நினைவுகளில் இதுவும் ஒன்று என்பதால் சொல்லிவிட்டேன்,

இப்படியாக பள்ளிக்காலத்தின் நினைவுகளை மீட்டுக்கொண்டே போகலாம்,இன்னும் நான் என் அடுத்த கட்ட பள்ளிக்காலம் ஹாட்லிக்கு செல்லவில்லை,ஆனால் இந்த பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகளின் பயணத்தின் பாதையில் ஹாட்லிக்கு வெகுவிரைவில் செல்லும்.
மீண்டும் தொடர்ந்து பயணிக்கும் போது என்னோடு இன்னும் மூவரை அழைத்துக்கொண்டே போகலாம் என்ற எண்ணம்,அப்பொழுதுதான் யார் பிழைவிட்டாலும் தெரியாது பாருங்கோ,உங்களுக்கு நல்ல நினைவு இருக்கும் பள்ளிகூடத்தில காலை இறைவணக்கத்தின் போது இறைவனை போற்றிப்பாடுவது வழமை,அப்போது எல்லோரும் சேர்ந்து பாடினால் பிழை பிடிபடாது தானே,ஆகவே என்னோடு நீங்களும் வாருங்கள்

வாருங்கள் காலப்பெருங்களத்துக்கு சொந்தக்காரர் ஆதித்தன்
வாருங்கள் பூபதிக்கு சொந்தக்காரர் சௌந்தரி
வாருங்கள் அறிந்ததும் அனுபவமும் தரும் டயானா சதாசக்திநாதன்
”யான் பெற்ற மற்றும் பெறும் இன்பங்களையும் எல்லாவற்றையும் நீங்களும் பெற்று உங்கள் இனிய நினைவுகளையும் பொறித்துவிடுங்களேன்

மீண்டும் சந்திப்போம்