Showing posts with label வாழும்போதே வாழ்த்துவோம். Show all posts
Showing posts with label வாழும்போதே வாழ்த்துவோம். Show all posts

The Mystro இன் வாலிபம்

இசையின் இளைய சாரீரம்


 The Mystro இன் வாலிபம் இசை இறுவெட்டு (CD) வெளியாகியிருக்கிறது.
GJ ARTS கலைக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  இறுவெட்டு சிடி வெளியீட்டு நிகழ்வு Hays Beck Theatre கலை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
Dayan shan, Cismoda, மற்றும் Banu ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்புடன் தொகுத்தளிக்க அரங்கில் அரங்கேறிய ஒவ்வொரு நிகழ்வுகளும் சிறப்பு.
ஆரம்பத்தில் நக்‌ஷத்திரா நாட்டியாலய நடனம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. நிகழ்வில் பங்குபற்றிய நடனப்பெண்கள் மேடையை சரியாகப்பயன்படுத்தி தங்கள் நிகழ்வை வழங்கியிருந்தனர்,அதனைத்தொடர்ந்து ஓவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வோர் சிறப்புடனும் வேவ்வேறு வகையுடனும் நிகழ்வை காண வந்த ரசிகர்களை வேறு பக்கம் திருப்பாது மேடை நோக்கியே வைத்திருந்தது.ஒவ்வொரு நிகழ்வின் இடையில் வந்த கரகோஷங்கள் அதற்கு சான்று.
தாண்டவம் நடனப்பெண்கள் தங்கள் நடனத்தோடு கொடுத்த செய்தி பாராட்டவேண்டியதொன்று.வாகனம் செலுத்தும்போது வரும் கவனக்கலைப்பான்களால் வரும் பேராபத்தையும் அதை தவிர்க்கவேண்டும் என்பதும் அவர்கள் கொடுத்த செய்தி.

இளம் நடனக்குழுவினராகிய தாண்டவம்  அதற்கு பெரு முயற்சியெடுத்து வழங்கியிருந்தமை அரங்க நிகழ்ச்சியை பார்க்கும் போது புரிந்தது.

Crawly pakkam,அடையாளம்,phoenix போன்ற பல்வேறு நடனக்குழுக்கள்
அரங்க நிகழ்ச்சியை ஓயவிடாது தந்த நடனங்கள் அரங்கையே ஆடவைத்தது. தனி நடனம் கொடுத்த Krisshna (Trin3gy) பாடல்களுக்கு தன்னையே வளைத்துப்போட்டு ஆட்டியது எங்களுக்கு கிடைத்த மைக்கல் ஜாக்‌ஷன் போல இருந்தது.அதேபோல பல இளம் (Rap) சொல்லிசை பாடகர்கள் மற்றும் மெல்லிசை  பாடகர்கள் மேடையை சோரவிடவில்லை. அத்தனை நடுவிலும் நிகழ்ச்சியை தொத்தளித்த  விட்ட நகைச்சுவைகளும் கலைச்சு கலைச்சு கடித்தவைகளும் அவ்வப்போது சிரிக்கவைத்துக்கொண்டேயிருந்தது.




புல்லாங்குழல் இசைத்த குருஜி (Kuruji) ஆற்றல் அவரை இன்னோர் காலத்தில் சிறப்புக்கலைஞனான புலம்பெயர் நாட்டில் காணாலாம் என்ற படி அவரின் புல்லாங்குழல் இசைத்த தன்மை. அவரோடு இணைந்து பாடியவர்களும் வயலில் இசைத்தவர்களும்,கீபோர்ட் இசைத்த கலைஞர்கள், கெளதம் (Gowtham) அனைவரும்பாராட்டுக்குரியவர்களே.
எல்லாவற்றையும் தாண்டி The Mystro இன் இறுவெட்டை வெளியீடு செய்தபோது வந்த உணர்வு, உறவு கண்ணீர் மறக்கமுடியாதவையாக ஒட்டிக்கொண்டன. The Mystro இன் அம்மா அப்பா எல்லோரும் உணர்ச்சிமேலீட்டால் பேசிய ஆனந்த கண்ணீருடனான வார்த்தைகள் கலைஞனை பெற்ற பெற்றோரின் மகிழ்ச்சியை உணர்த்தியது.
அதில் The Mystro இன் தழுதழுத்த குரல், ஆனந்த கண்ணீர் வார்த்தைகள் எல்லாம் கலைஞனின் சவால் மிகுந்த பயணத்தையும் அதில் கண்ட உற்சாக இன்பத்தையும் பதிவு செய்தது.


மேடை அமைப்பும் மேடை ஒளி ஒலி அமைப்பும் நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகூட்டியது. தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் யுவனோடு இணைந்து பணியாற்றிய கெளசிகன் சிவலிங்கம் நிகழ்ச்சிக்கு வந்து அதில் தனது முக்கிய பங்கை கொடுத்திருந்தார்.
மொத்தத்தில் The Mystro இன் இசை வெளியீடு நிகழ்வானது மேடையையும் 
அரங்கையும் சோரவிடாது அமைந்திருந்தமையை பாராட்டியே ஆகவேண்டும். 
இருப்பினும் நிகழ்ச்சிக்கு இளைய வட்டமே அதிகம் வந்திருந்தமை கவலை தரக்கூடிய விடயமே. பங்குபற்றிய கலைஞர்களின் உறவுகளைத்தவிர முதலாந்தலைமுறையினரின் வருகை மிகக்குறைவாக இருக்கின்றமை இளங்கலைஞர்களின் வளர்ச்சிக்கு ஆரோகியமான பாதையாக முடியாது என்பது எம் எண்ணம்.இது இளைய தலைமுறையினருக்கும் முதலாந்தலைமுறையினருக்குமான இடைவெளி சமூகத்தில் அதிரிக்கும் போக்கை காட்டுகிறது.இது நல்லதல்ல.
இதை இளந்தலைமுறையினரும் உணர்ந்து நிகழ்வு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற அதேவேளை முதலாந்தலைமுறையினரும் வெறுமனே தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு முண்டியடிக்காமல் இப்படியான நிகழ்வுகளிலும் பங்குபற்ற தயாராகவேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
அத்தோடு நிகழ்வின் இறுதியில் தாயக மக்களை நோக்கிய  சிந்தனையில் கலைக்குழு வழங்கிய நடனம் பாராட்டத்தக்கது.என்றாலும் அந்த நிகழ்ச்சினின் நிறைவில் சொல்லப்பட்ட செய்தியை திரையில் எழுதிக்காட்டிய போது வந்த எழுத்துபிழைகளை நிச்சயம் கவனத்தில் எடுத்திருக்கவேண்டும் என்பது தாழ்மையான கருத்து.இதிலும் முதலாந்தலைமுறையினர் , அல்லது அறிந்தவர்கள் இளந்தலைமுறையினரை வழிப்படுத்தினால் அப்படியான சிறு தவறுகள் கூட இடம்பெறமாட்டாது என்பதை பதிவு செய்யலாம்.

இருப்பினும் தாயகம் நோக்கிய சிந்தனையிலும் நிகழ்ச்சியில் ஏதோவொரு நிகழ்வை இணைக்க வேண்டுமென்ற சிந்தனைக்கு நிச்சயம் பாராட்டியே வேண்டும்.

 
மொத்ததில் The Mystro இன் வாலிபம் நிகழ்வும் இறுவெட்டும் புலம்பெயர் கலைஞனின் ஓர் அடையாளமாக பதிவாகியிருக்கிறது. The Mystro என்ற கலைஞனின் புதிய முதல் படைப்பை அனைவரும் வாங்கி அந்த கலைஞனை தொடர்ச்சினான கலைப்படைப்புகளுக்கு உந்து சக்தியாக புலம்பெயர் உலக மக்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.அது கலைஞனையும் வாழவைக்கும், அவன் படைப்புகளும் வாழ்ந்துகொள்ளும்.இனியும் அவன் படைப்புகள் வரும்.

The Mystro இன் வாலிபத்திற்கு எம் அன்பான வாழ்த்துக்கள்..



வாழும்போதே வாழ்த்துவோம்

                                                                                              நிகழ்வு நோக்கு- யோகா தினேஷ்


பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்

ஈழத்து கலைஞர்களில் தனக்கென்று தனியான தனித்துவத்தை பெற்றவர் திரு.கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள்.
அதுவும் அண்ணை ரைட் என்று யாழ்ப்பாணத்து பேருந்து நடத்துனர்கள் அடிக்கடி வாயிலே உச்சரிக்கும் வட்டார மொழி நடையை உலகமெங்கும் கொண்டு சென்ற பெருமை திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்களையே சாரும்.அதன் மூலம் என்றும் அண்ணை ரைட் பாலச்சந்திரன் என்று உலகளவும் பிரபல்யம் பெற்ற ஈழத்தின் கலைஞரானார் என்பது யாவரும் அறிந்த விடயம்.அது மட்டுமல்லாமல் வட்டார வழக்கிலுள்ள பல சொற்பிரயோகங்களை தனது நாடக நடிப்பு மற்றும் வசன நடைகளை வாயிலே உச்சரிக்கும் முறைமையினூடு உலகமெங்கும் நிலை நிறுத்தியவர்களில் கே எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கும் தனிஇடம் இருக்கிறது.அது அவரால் அவர் பிறந்த மண்ணுக்கும்  ஒரு புகழை அவரால் ஏற்படுத்திக் கொடுத்து.இவரின் ஓரங்க நாடங்கள் ஒருபுறம் எல்லோர் வீடுகளிலும் வானொலியில்  ஒலிக்க  மறுபுறம் இவரின் நாடகங்களின் ஒலிப்பதிவுகளை வாங்கி எப்போதும் மீண்டும் மீண்டும் கேட்டு சிரித்த காலங்கள் அன்றைய காலங்கள். இன்றைய காலங்களிலும் அதை மீண்டும் மீண்டும் கேட்டாலும் என்றும் மாறுபடாத நகைச்சுவை உணர்வையும் கலை ரசனையையும் கொடுக்கும்.அவை இன்றைய இளைஞர்களால் ரசிக்கபடக்கூடியதான ஒரு கலைப்படைப்பை அன்றைய நாள்களில் கொடுத்த பெருமை அண்ணை ரைட் பாலச்சந்திரன் அவர்களையே சாரும்.

அது மட்டுமல்லாமல் நாடகங்கள் வரிசையில் ஓடலி ராசையா,மு மு மு மூத்ததம்பி,வாத்தியார் வீட்டில்,செய்திகளில் நகைச்சுவை ,தூரத்து சொந்தம் என்று ஏராளம்.அவையனைத்தும்   எம்மவர் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டி நாசூக்காக பல கருத்துகளை முன்வைத்திருக்கின்றன என்றால் மிகையாகாது.

கே எஸ் பாலச்சந்திரன் அவர்களிற்கு திரைப்பட வரலாற்றிலும் முக்கிய இடமிருக்கிறது,“வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள்,இவற்றை விட ஒரு ஆங்கிலத்திரைப்படத்தில் கூட அவரின் பங்கு இருந்திருக்கிறது.

இப்படியாகபல பெருமைகளை தன்னகத்தே  கொண்ட கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள் தொலைக்காட்சி மூலம் அசத்திய நிகழ்ழ்சிதான் Wonderful Y.T.Lingham
 ஐரோப்பிய தேசமெங்கும் நீண்ட காலத்திற்குப்பின் கே எஸ் பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை எப்படியிருக்கிறார் என்ற தமிழ் கலை ரசனையாளர்களின் எண்ணங்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி அசத்தினார்.தொடர்ச்சியாக வெற்றியோடு தொலைக்காட்சிகளில் செல்லும் நிகழ்ச்சிகளில் அவரின் நிகழ்ச்சியான Wonderful Y.T.lingham  ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்றும் பல தொலைக்காட்சிகள் அவரின் சிறப்பான இந்த நிகழ்ச்சியை மீள் ஒளிபரப்புகின்றார்கள்.காலம் கடந்து அவரின் நிகழ்ச்சிகள் வெற்றி நடை போடுகின்றமைக்கு அது எடுத்துக்காட்டு.

கலையுலகில் கால் பதித்த கலைஞர் அவர்கள் எழுத்தாளராகவும் தனித்துவ இடத்தை பெறுகின்றார்.கடந்த சில வருடங்களுக்கு முன் அவர்வெளியிட்ட கடலோடிகளின் உள்ளார்ந்த உணர்வைப் படைப்புலகத்திற்கு தனது எழுத்தாற்றல் மூலம் கொண்டு வந்தார்.கடலோடிகளின் கதை சொலும் கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்று  அந்த நாவலை எழுதி அதற்கு அமுதன் அடிகளாரின் விருதையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தனது அனுபவங்களையும் ஈழத்தின் வட்டாரவழக்கு சொற்களின் பயன்பாடுகளையும் அவர் தனது நாவலில் இணைத்திருப்பது நாவலை வாசிக்கும் தருணங்களில் அதனோடு இணைந்து பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கும்.முற்றிலும் கிராமத்து மன்வாசனைப்படைப்பு அது.

”வானொலி,தொலைக்காட்சி,மேடை,திரைபடக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர்,திரைப்படஇயக்குனர்,தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எழுத்தாளர் எனப் பன்முகப் பக்கங்களைக்  கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கு அண்மையில் கனடாவில் அவரின் வரலாற்று நூல் வெளியீடு செய்யபட்டது.
பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை என்று பெயரிடப்பட்ட அந்த அற்புதமான நூல் வெளியீட்டோடு  அவருக்கான பாராட்டு விழாவும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.கனடாவின் ஸ்காபுரோ பகுதியில் இந்த பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு நிகழ்விற்கு எழுத்தாளர் திரு குரு அரவிந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.அங்கு கலைஞர், எழுத்தாளர் திரு கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு உயரிய விருதாக  தலைக்கோல் விருது. வழங்கி கௌரவிக்கப் பட்டிருக்கிறது.
அங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் கூட தமிழர்களின்  தனித்துவக்கலைகளுக்கு கிடைத்த கௌரவங்கள் தான்.சோக்கல்லோ சண்முகம் அவர்கள் குழுவினரின் வில்லடிப்பாட்டு நிகழ்ச்சிக்கான தனித்துவம்.
அதுமட்டுமல்லாமல் பாலாவின் நனைவோடை என்ற விவரணச் சித்திரமும் காண்பிக்கபட்டிருக்கிறது.

உண்மையில் கலைஞர்கள் வாழுங்காலத்தில் வாழ்த்தும்  நடைமுறைகள் சிறப்பு.பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை எமக்கு கிடைத்த பொக்கிஷம்.தான் மட்டுமல்ல தனது கலை ஈடுபாட்டினை பல இளைஞர்களுக்கு விதைத்திருக்கிறார் கே எஸ் பாலச்சந்திரன் அவர்கள்.கனடாவின் பல வளரும் கலைஞர்களோடு இணைந்து பல கலைப்படைப்புகளை தந்திருக்கிறார்.தான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களோடும் பகிர்ந்து அதன் மூலம் இளைஞர்களையும் அதில் ஈடுபடுத்தி தனது கலைப்பணியை செவ்வனே ஆற்றியிருக்கிறார்.
உண்மையில் அவருக்கான இந்த விழா எடுத்தவர்களும் நன்றிக்குரியவர்கள்.கலைஞர்கள் வாழுங் காலத்திலே வாழ்த்தும் விடயம் பாராட்டுக்குரியதும் கூட.எமது தனித்துவங்களை உண்மையான உணர்வோடு உலகிற்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பை உணர்ந்து எமது ஈழ கலை அடையாளமாகிய கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு விழா எடுத்தமை படைப்புக்களம் சார்பில் அனைவருக்கும் நன்றிக்குரியவர்களே.

பாலச்சந்திரன் என்ற கலை ஆளுமையை எம்மவர்காலத்தில் பெற்ற பெருமை எமக்கும் உரியதே.என்றும் பல விருதுகளை தனதாக்கி இன்னும் பல படைப்புகளூடாக சந்திக்கவேண்டும். நீண்ட ஆயுட்பலத்துடன் நிறைந்த வாழ்வுகாண கரவையூரான்  கே எஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு கரவைக்குரல் ஆழமான அன்பிலிருந்து நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.அதில் பெருமையும் கொள்கிறது.

கேஎஸ் பாலச்சந்திரன் அவர்கட்கு தலைக்கோல் விருது வழங்கும் விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு இது......


புகைப்படங்கள் --ஈகுருவி 


நண்பன் இன்னொரு படம் வெளியீடு


நண்பனின் இன்னொரு படம் ...... அது எப்படி இருக்கும்.எப்படி
உருவாகியிருக்கும் என்ன கதையாக இருக்கும் என்ற ஆர்வத்தோடு
வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள்.
நிச்சயமாக இது நண்பனுக்காக எழுதப்படுவது அல்ல.அந்த படைப்பை எனது
பதிவின் மூலமும் ஒரு அறிமுகத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தோடு
மட்டுமே  பதிவுசெய்கிறேன்.நிறைவில் உங்கள் விமர்சப்பார்வையை உங்கள்
கருத்துகளில் பதிவு செய்யுங்கள் அந்த படைப்பை மேலும் ஊக்கபடுத்தும் .
நண்பனின் படம் என்றால் எல்லோரும் ஒரு ஆர்வத்தோடு வருவீர்கள்
அதனால் உங்கள் ஆக்கபூர்வமான கருத்து பதிவு செய்யப்படும் என்ற
எதிர்பாபோடு பதிவு செய்திருக்கிறேன்.
லண்டனில் உள்ள கலைஞர்கள் இவர்கள்.கலைத்தாகம் இளைமை
உற்சாகம்,தேடல்கள் என்று தங்களை ஈடுபடுத்தி இன்னுமோர் படைப்பை
வெளியிட்டிருக்கிறார்கள்.பாடல்களுக்கு  தனது நடிப்பை வெளியிட்டுவந்த
நண்பன் குறும்படம் வாயிலாக சிறப்பான நடிப்பை வெளியிடிருக்கிறார்(ன்)
அதுதான் நண்பனின் இன்னொரு படம்


விரதத்தோடு அரைகுறையாக கேக் சாப்பிடும்போது 


                      பின்னுக்கு லண்டன் பாராளுமன்றம் இருக்கிறது என்றுதான் 
                                           கையை காட்டுகிறோம்.நம்புங்கள் 
                               

நண்பன் ஜே ஜே மற்றும் சிந்துவின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது
கலையும் நீயே காதலும் நீயே 

இல்லற வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு கலைத்தாகம் உள்ள இளைஞனின்
கதையாக இது அமைந்திருக்கிறது.கலை ,காதல் இல்லற வாழ்க்கையில்
எப்படி சந்திக்கிறது? அந்த காதல் கலைத்தாகமுள்ள  இளைஞர்களுக்குள்
எப்படி மனதின் ஆழங்களில் எப்படி புதைந்துபோயிருக்கிறது என்பதை
குறும்படம் சொல்கிறது.
மிகுதியை நீங்கள் குறும்படத்தை பார்த்து ரசித்து தெரிந்துகொள்ளுங்களேன்.

லண்டனில் இருக்கும் பல்வேறு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் குறும்படம் 
தயாரிப்பது என்பது மிகக்கடினமான ஒரு காரியம்.
கதை வசனம்,பாடல், நடிப்பு,படப்பிடிப்பு,பின்னணிக்குரல்,பாடல்
இசை,படத்தொகுப்பு என்று பலவேறு கலைஞர்களும் இணைந்து இந்த
படைப்பை மிகச்சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.குறும்படத்தில்
ஆரம்பத்தில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யபட்டிருக்கின்றது.
அனைவரும் முழு வீச்சோடு தங்கள் கலைப்பணியை ஆற்றிக்
கொண்டிருப்பவர்கள்.நண்பன் ஜே ஜே மற்றும் சிந்து இவர்கள் இருவரையும்
நேரடியாக திரையில் பார்க்கலாம்.





கலைஞர்கள் வாழும்போதே வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு
ஈழத்திற்கான  அடையாளங்களாக கலைப்படைப்புகள் மிளிரவேண்டும்.அந்த
கலைஞர்கள் கலையுலக வாழ்வு சிறக்கவேண்டும் என்ற அன்போடு
கரவைக்குரல் தனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.

வந்தியண்ணைக்கு பிறந்த நாள்- பரிசுக்கான கேள்வி உள்ளே

உலகப்பிரபலமான நாளாக 11.11.11 என்ற நாளை எதிர்பார்த்து உலகமே தயாராகும் வேளை பதிவுலகப்பிரபலம்,பதிவுலக தங்கம் என்று அண்மையில் வரவேற்கப்பட்டவரும் வந்தியதேவன் என்ற பதிவுத்தளத்துக்கு உரித்தானவரும் வந்தி என்று அன்போடு அழைக்கபடுபவருமாகிய மயூரன் அவர்களின் பிறந்த நாள் இன்று.

தாயகத்தில் தன்னுடைய பிறந்த நாளை 09.11.11 அன்று வெகுசிறப்பாக கொண்டாட தயாராகிவருகிறார்.அண்மையில் ஐக்கிய ராஜ்ஜியம் லண்டனிலிருந்து கொழும்பு சென்ற வேளையில் மிகப்பெருமெடுப்பில் மாலைகள் சகிதம் வரவேற்கப்பட்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் வட்டத்தில் தயாராகின்றார்,


அந்தவகையில் பதிவுலக நண்பராக என்னோடு தாயகத்திலேயே அறிமுகமாக இருந்தாலும் லண்டனில் தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குகிட்டியது.சந்தித்ததில் மகிழ்ச்சியும் கொண்டேன்.வந்தி மாமா என்று என்போன்ற பதிவுலக பிள்ளைகளால் அழைக்கப்படும் மயூரன் அண்ணா அவர்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்,இனி அவர் பவுண்ட்ஸ்களாக அனுப்பினால் பார்ட்டி தான்.மயூரன் அண்ணாவோடு பழகிய நாள்களில் புகைப்படக்கருவி பதிவுசெய்துகொண்டவை கீழே.சீரியஸ் ஆகக்கூடாது,ஆனால் கடைசிக்கேள்விக்கு சீரியஸ் ஆகுங்க.முந்திக்கொண்டு வாருங்கள்.சிம்பிளாக யோசியுங்க,பரிசு ரெடியாக இருக்கிறது










கண்ட முதல் நாள் போட்டோவுக்காக சிரிச்ச போது






போனில் அண்ணை பிசியா அல்லது அப்பதான் அழைப்பு வந்ததா? கேள்விக்கு என்ன விடையாக இருக்கும்?????????????????????????????????







கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்குமே>>எப்பவுமே என்று நினைக்கிறீங்களா?
,இப்பவுமா அப்படித்தானா என்று பாருங்க கேளுங்க !!




மத்திய லண்டனின் பல உல்லாசபயண மையங்களுக்கு சதீஸோடு பயணம் இரவு வேளையில்!!!!!!


சாக்கோட்ட வீரனாக தவண்டடிச்சு ஓடி முதற் பரிசு வாங்க மறுத்த போது???????!!!!!!!!


அண்ணை உடற்பயிற்சி மற்றும் பணக்கார விளையாட்டுக்காக மைதானத்தில் !!!!1


மிகச்சிறந்த பாடகனாக அறியப்பட்டு பஸ்வண்டியில் பாடல் வாயே திறக்காமல் பாடியபோது!!!!!

தாயகத்தில் வழங்கபட்ட அமோக வரவேற்புவிழாவில்!!!!
கையசைத்து ஏற்றுக்கொள்ளும் காட்சி







கல்லூரியின் நிகழ்வு ஒன்றின் போது வந்தவர்களுடன் அன்பாக எடுத்த போட்டோ!!!!!!!



இனி பரிசுப்போட்டிக் கேள்விக்கான புகைப்படம்



இதிலை யார் தள்ளி நின்றது???
சைந்தவியா???வந்தியாரா?மிகப்பெரிய கேள்வி>>>>
அது பரிசுக்கான முதல் கேள்வி
வந்தியத்தேவருக்கு எத்தனையாவது பிறந்த நாள்?
அது அடுத்த கேள்வி
விடை தெரிந்தோருக்கு பிறந்த நாள் பரிசுக்குவியல்,பதிலோடு முந்துங்கள்




மீண்டும் இன்றைய நாளில் பிறந்த நாளை கொண்டாடும் வந்தியண்ணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகிர்ந்துகொள்கிறது கரவைக்குரல்

முல்லை மண்ணிலிருந்து வரும் சாதனை மாணவன் - வாழ்த்தும் கரவைக்குரல்

அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரீட்சை முடிவுகளில் முல்லைத்தீவை சேர்ந்த மாணவன் அகில இலங்கைரீதியில் இரண்டாவது இடம்பெற்றமை மகிழ்ச்சியை தருகிறது.எத்தனையோ கஸ்டங்களும் கடினப்பாதைகளும் மாணவர்களுக்கு சூழ்ந்திருக்க அதுவும் விசுவமடுவை சேர்ந்த மாணவன் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவனாக தன் பெயரையும் பொறித்திருப்பது உலகமெங்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகபெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.பாடசாலைக்கல்வியை தொடர்ந்து கொள்ள முடியுமோ அல்லது தன் இருப்பு இந்த உலகத்தில் உறுதியாகுமோ என்று சிந்தித்த மாணவர்களின் இடத்தில் இருந்து மாணவன் வெற்றிபெற்றிருப்பது சிறந்த சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.
முல்லை மண்ணிலிருந்து இந்த சாதனை அரங்கேறியிருப்பது பெருமைக்குரியதாகிறது.யுத்தம் தின்று துப்பிய மண்ணிலிருந்து சாதனை என்று பெருமை கூறுகின்றார்கள் ஆர்வலர்களும் பெரியவர்களும்.
பரீட்சைக்கான அடிப்படை கல்விக்கான காலத்திலும் அதன் நுணுக்கங்களை அறியும் பராயத்தில் அந்த மாணவன் முல்லை மண்ணில் இருந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்பது நினைக்க கூடிய விடயம் அல்ல.அது மட்டுமல்லாமல் தொடரும் காலங்களிலும் சிறப்பான கல்வியை பெறுவதற்க்கு எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்பது நினைக்க சுலபமான விடயமாகாது.

அந்த சாதனைக்குரிய மாணவன் முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகாவித்தியலாய மாணவன் பரமேஷ்வரன் சேதுராகவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்கிறது கரவைகுரல்.
அந்த மாணவனின் வளர்ச்சியோடு பங்கெடுத்த பெற்றோர் ஆசிரியர்கள் யாவருக்கும் நன்றி பாராட்டுகின்றது கரவைக்குரல்.இன்னும் அந்த மாணவனின் தனித்துவக் கெட்டித்தனங்களை சரிவர இனங்கண்டு அதற்கான களங்களை ஏற்படுத்துங்கள்,உளமார்ந்த சிந்தனைகளுக்கும் அவனின் எதிர்பார்ப்பான வெற்றிகளும் தொடர்ந்தும் உறுதுணையோடு பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூக முன்னோடிகள் யாவரும் வழியமைத்துக்கொடுங்கள்.உண்மையில் மாணவனின் எண்ணங்களை அறிந்துகொள்ள நேரடியாக பேச வேண்டும்,ஊடகங்கள் வாயிலாக களம்கொடுக்க
வேண்டுமென்பது அனைவரினதும் எண்ணமாகிறது.தொடர்புகொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படித்தித்தர முடிந்தவர்களை கரவைக்குரல் எதிர்பார்க்கிறது.

முல்லைமண்ணிலிருந்து சாதனைக்குரிய மாணவனாக சிறப்புபெற்றிருக்கும் பரமேஸ்வரன் சேதுராகவனை அன்போடும் உரிமையோடும் வாழ்த்துகிறோம்.
உங்கள் வாழ்த்துக்களையும் மறுமொழி வாயிலாக பதிவுசெய்யுங்கள்

கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் தரும் கே.எஸ்.பாலச்சந்திரன்




ஈழத்திலிருந்து பிரபலமான கலைஞர்களுள் தனக்கென தனியான முத்திரை பதித்து உலகத்தின் மூலை முடுக்கெங்கும் அறியப்பெற்ற கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் இன்னுமொரு படைப்பான ஒரு நாவல் கனேடிய மண்ணில் வெளிவரவிருக்கிறது,
மகிழ்ச்சியான விடயம்,அதற்கு காரணங்கள் பல,

முக்கியமாக குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதாக
ஒன்று என் மண்ணில் பிறந்து ஒரு பிரபல்யமான கலைஞனின் படைப்பைப்பற்றியும் அவரைப்பற்றியும் என் குரலாலும் ஒரு பதிவிடக்கிடைத்த சந்தர்ப்பம்
மற்றது உலகின் பிரபல்யமான ஒரு கலைஞன் வரலாற்றில் இடம்பிடிக்கும்வகையில் ஈழத்தின் நினைவுகளை நூலுருவாக்கி எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் ஒரு காத்திரமான பங்களிப்பு

ஒருகாலத்தில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் குரல் “அண்ணைரைட்” தனி நடிப்பு நகைச்சுவை நாடகத்தின் மூலம் உலகெங்கும் அறியப்பெற்றவர்,நாடகம் வெளிவந்த காலங்களில் எல்லோர் வீடுகளிலும் வானொலிப்பெட்டியில் பென்னம்பெரிய சத்ததுடன் எப்போதும் ஒலிக்கக்கேட்கும் முக்கிய ரசனை நிகழ்ச்சி இது .
அதைக்கேட்டுகேட்டு வயிறு குலுங்கக்குலுங்க சிரித்த அந்த நாடகத்தால் எல்லோர் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துவிட்ட அற்புதமான கலைஞர்,
அதைவிட“ஓடலிராசையா,வாத்தியார் வீட்டில்,மு.மு.மு.மூத்ததம்பி,செய்திகளில் நகைச்சுவைகள் கலந்து வாசித்தபடியே அமையப்பெற்ற ஒரு நடிப்பு”,என்றவாறாக அவரின் தனி நடிப்பில் அவரால் வெளிக்கொணரப்பட்ட நாடகங்கள் பல,
இதைவிட இவர் இயக்கிய நாடகங்கள் ஏராளம்,அண்மையில் இவர் இயக்கிய “தூரத்து சொந்தம்” என்ற நாடகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதில் எம்மவர்களின் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டியதாக நான் உணர்ந்தேன்,


இதே போல ஈழத்தின் திரைப்பட வரலாற்றிலும் முக்கியமான இடம் இவருக்கு உண்டு,“வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள்,இவற்றை விட ஒரு ஆங்கிலத்திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் என்று அறிந்திருந்தேன்,ஆனால் இப்போது அந்த திரைப்படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவுவராததால் குறிப்பிடமுடியவில்லை,

கலையுலக வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுகளை தாண்டப்போகும் கே.எஸ்.அவர்கள் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் ”நாடகத்துறையிலும் கலையுலக வாழ்விலும் என்னாலான பணிகள் நிறையவே சாதித்ததாக உணர்வதாகவும் இவற்றை விட எழுத்துலகலிலும் ஏதாவது படைக்க வேண்டும் என்ற ஆவல்” இருப்பதாக குறிப்பிடுவார்,
தன் நாடகத்தினாலும் கலைத்துறையாலும் கிடைத்த அனுபவங்களையும் அதன் இன்னும் பல விடயங்களையும் நூலுருவாக்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி வெளிப்படுத்துவார்.தன்னோடு தன் கலையம்சங்கள் நின்றவிடாது இளைய தலைமுறைக்கும் அதை வழிகாட்டி அவற்றை வாழவைக்கவேண்டும் என்பதில் கே.எஸ் அவர்கள் மிக ஆர்வமானவர் என்றால் மிகையாகாது.ஆகையால் அனுபவங்களை எழுத்துலகில் பதிந்துவிடுவதன் மூலம் அவை எக்காலத்திலும் அறியக்கூடியதாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் கே.எஸ்.அவர்களின் ஒரு படைப்பான நாவல் வெளிவரத்தயாராக இருக்கிறது,வடலி வெளியீட்டகத்தாரின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலுக்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ”கரையத்தேடும் கட்டுமரங்கள் ”என்று பெயரிட்டிருக்கிறார்,முற்றிலும் ஈழத்து நினைவுகளைச்சுமந்து வரும் இந்த நாவலி்ல் முக்கியமாக கடலோடிகளின் கதை சொல்லும் கதையாக வருகிறது, நாவலில் அங்கங்கு தன் அனுபவங்களை நாவலுக்குரிய பாங்கிலே தனக்குரிய பாணியில் எடுத்து செல்லும் அழகு மிகச்சிறப்பு,

இவரைப்பற்றியும் இந்த நூல் பற்றியும் உலகப்பிரசித்திபெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்
“ ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச்சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச்சித்திரம்” என்று குறிப்பிடுகிறார்

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்

”வானொலி,தொலைக்காட்சி,மேடை,திரைபடக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர்,
திரைப்படஇயக்குனர்,தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன்,மிகச்சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும்
படைத்த எழுத்தாளர்.தன்னெழுத்தால்,பயன்படுத்தும் சொற்களால்,வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச்செல்லகூடிய ஆற்றல் கொண்டவனே எழுத்தாளன் ஆகமுடியும், இவரது எழுத்துக்களுக்கு அவ் ஆற்றல் உண்டு.
இவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது,கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த,கே எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்துகிறார்.

இதைப்பற்றி கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்
”தினமும் வாழ்வுக்காக அலைகளோடு
ஜீவமரணப்போராட்டம் நடத்தி
மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பு,
இரக்கமும் தான் என்னை இந்த நாவலை எழுத்த்தூண்டியிருக்கிறது “

என்று குறிப்பிடுகிறார்,

ஈழத்தில் தம் வாழ்வுக்காய் வாழ்வாதார தொழிலோடு வாழ்வுமுழுவதும் வாழ்ந்து அதனால் அனுபவிக்கும் மகிழ்ச்சிகள்,தோற்றுப்போவதால் கிடைக்கும் சோகங்கள் என்று அந்த சமூகத்தின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நாவல் படைப்பாக கே.எஸ்.அவர்கள் தருகிறார்,முற்றிலும் கிராமத்தின் மண்வாசனைப்படைப்பு,

வடலி வெளியீட்டால் ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த நாவல் வரும் ஐப்பசி மாதம்(October)மூன்றாம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கனேடிய மண்ணில் வெளியிடப்படவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத்தருவதில் கரவைக்குரல் பெருமையடைகிறது,


இடம்:Agincourt Community Centre
31,Glen Watford Drive,
Scarborough,Ontario
Midland & Sheppard(On Sheppard)


தொலைபேசி எண்:647-829-7371
ஈ மெயில் :basu44@gmail.com

அப்படியாக கலைஞர் கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கலை மற்றும் எழுத்துலகின் பயணத்தில் கரையத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் அமையும் என்பதில் சந்தேகத்துக்கேயிடமில்லை,அவரின் கலை மற்றும் எழுத்தின் பணிகள் இன்னும் மேன்மேலும் சிறக்க கரவைகுரல் வாழ்த்துவதில் பெருமையடைகிறது

“பகலும் இரவும் முத்தமிட்டுக்
கொள்ளும் அந்த
மாலைப்பொழுதில்......

மேற்கிலிருந்து அடித்த
வாடைக்கச்சான் காற்று,

கடற்கரையை
பார்த்துக்கொண்டு நின்றிருந்த
அந்தோனியின் பொத்தான்கள்
இல்லாதா சேர்ட்டை பின்னே
தள்ளி நெஞ்சுக்கூட்டை
குளிரினால் சில்லிடவைத்தது.........

இவை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவலிலிருந்து ஒரு சில வரிகள்

ஒரு சிறந்த ஆசிரியர் பற்றி

வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதியில் வடமராட்சியின் புகழ் பூத்த ஆசிரியர் திரு.சின்னையா வல்லிபுரம் அவர்களை வாழ்த்துகின்றது.ஆசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் சிறந்த சிந்தனைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.அதை பார்வையிட எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்ற பகுதியை அழுத்தி அதை பார்வையிடுங்கள்.
தொடர்ந்து ஐந்தாந்தர பரீட்சையில் அகிலஇலங்கைரீதியாக முதலாம் இடம் பெற்ற எம் ஈழத்து மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் அவர் தனது வெற்றிக்குப்பின் கூறிய அவரது எண்ணங்களும் வானம்பாடியில் பகிரப்படுகிறது.
அதனை அழுத்தி பார்வையிடுங்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வாழும்போதே வாழ்த்துவோம்

ஈழத்திருநாட்டில் பல்வேறு திறமைகளோடு பங்கெடுத்து தங்களை ஈடுபடுத்திவரும் அறிஞர்கள்,கலைஞர்கள்,சான்றோர்கள் இன்னும் இன்னோரன்ன துறைகளில் பிரபல்யம் பெற்றோரை வாழ்கின்ற காலங்களிலேயே வாழ்த்த வேண்டும் என்பது கரவைக்குரலின் எண்ணம். அவை அவர்களின் வளச்சிக்கு உத்வேகமாக இருக்கும் அல்லவா? இன்னும் பல விடயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர அது வழிகாட்டும் என்ற எண்ணத்தோடு வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதி ஆரம்பிக்கிறது.
வாழும்போதே வாத்துவோம் என்ற அந்த பகுதி வானம்பாடி என்ற புதிய தளத்தினூடாக வருகிறது.
எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்பதை அழுத்தி அதை நீங்களும் பார்வையிடுங்கள்

ஆம்
நீங்களும் உங்களுக்கு தெரிந்தோரின் தகவல்களோடு உங்கள் பெயர்களையும் குறிப்பிட்டு கீழே வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

karavaikaviyothi@gmail.com