தீ வருகிறது "ஓடுங்கள் ஓடுங்கள்"

இன்று அதிகாலையில் நடந்த விடயம் கொஞ்சம் சிரிப்புடன் சிந்திக்க வைத்தது.
என் வேலைத்தளத்தின் அமைக்கும் கட்டடத்தொகுதியில் சிறியதுமல்லாத பெரியதுமல்லாமல் கொஞ்சம் நடுத்தரமான தீப்பிடித்துவிட்டது அவ்வளவுதான்.
அதற்கு எத்தனை வேலைப்பாடுகள், எல்லோரையும் "ஓடுங்கள் ஓடுங்கள்" ,"உள்ளே வராதீர்கள் வெளியே ஓடுங்கள்" என்றவாராக சத்தமிட்டவாறு எல்லோரையும் கலைக்கும் பாதுகாப்பு அணி,
தீப்பிடிக்க ஓடுவதெல்லாம் உண்மைதான். ஓட வேண்டாம் என்ற சிந்தனையில் சொல்லவில்லை நான், நானும் அவர்களோடு ஓடியவனாய் எத்தனையோ கொடூரமான மரணகளும் வலி தோய்ந்த வாழ்க்கைகளும் இருப்பது மட்டுமல்லாமல் குண்டுகளுடன் கலந்த நெருப்பு கலைத்துகொண்டு வரும் சூழலில் வாழும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைவிட இது என்ன எங்கோ வரும் நெரிப்பில் என்ன வரப்போகிறது என்ற சிந்தனை தான்.
இப்படியாக ஒடிய நான் கொஞ்சம் வேகத்தை குறைத்தாலும் என்னோடு கூடி ஓடுவோர் என்னை விடுவதாக இல்லை.பாதுகாப்பு அணி என்னை கலைக்கிறது. அது மட்டுமல்லாமல் வந்த தீயை நோக்கி சிலரது புகைப்பட கருவிகள், அவை தன்னகத்தே சில "டக் டக்" பதிவுசெய்கின்றன,அவை அவர்களுக்கு புது விடயங்களாகத்தான் இருக்கும்,அவற்றுள் சில புகைப்படங்கள் கீழே பாருங்கள் என்ன பெரிய தீ என்றும் அவற்றை பார்ப்போரையும்,
இந்த புகைப்படங்களில் என்னை மட்டும் தேடாதீகள், ஏன்னென்றால் இந்த புகைப்படங்களை எடுத்தவன் நானெல்லோ..........................












No comments: