பந்திக்கு முந்தினால் சாப்பாட்டு ராமனா?


கல்யாண வீடுகளில் அல்லது சாப்பாடு சார்ந்த நிகழ்வுகளில் பந்திக்கு முந்த வேண்டும் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்ட ஒன்று. அப்படி என்றால் பந்திக்கு முந்து என்பது சாப்பாட்டு பிரியர்களுக்கானதா என்பது தான் கேள்வி.அது மட்டுமில்லாமல் பந்திக்கு முந்து என்று சொல்லி பின்னர் படைக்கு பிந்து என்று சொல்வது கோழையர்களுக்கு சொல்லபட்டதா என்பது தான் அடுத்த கேள்வியும் கூட வருகிறது.விருந்தோம்பல் என்ற பாரம்பரியத்தை சிறப்போடு பேணிவரும் தமிழ் சமுதாயத்தில் சாப்பாட்டுப் பந்திக்கு முந்திசெல் என்று பழமொழி தமிழர்களை வழிகாட்டியிருக்குமா? எல்லோரையும் சாப்பாட்டு ராமர்கள் ஆக்கும் செயற்பாடு இல்லையா?
எங்கும் எதிர்த்து நின்று போரிட வல்லவர்கள்,வீர மறவர்கள் என்று புகழோங்கும் தமிழ் சமுதாயத்தில் "படைக்கு பிந்திப்போ"என்று வழிகாட்டியிருக்குமா?அது எல்லோரையும் கோழைகள் ஆக்கிவிடும் என்பது முன்னோர்களுக்கு தெரியாத விடயமா?


அப்படி என்றால் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று எப்படி இந்த பழமொழி உருவாகியது? எதற்காக உண்மையில் சொல்லப்பட்டது , அந்த பழமொழியின் உண்மை அர்த்தம் என்ன ? என்ற கேள்விகள் உருவாகிறது

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்னோர்களின் பழமொழிகளையும் மரபுத்தொடர்களையும்
நிகழ்ச்சியின் சுவாரஷ்யத்திற்காகவும்,அதன் உண்மை வடிவங்களை,அர்த்தங்களை நினைவூட்டலாம் என்ற நோக்கோடும் அது ஒழுங்கமைக்கபட்டிருக்கிறது.அதை நிகழ்ச்சித்தயாரிப்பாளர் சிறப்பாகவே ஒழுங்கமைத்திருக்கிறார்.அந்தவகையில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்ற பழமொழியும் ஒருநாள் நேயர்களுக்கு வழங்கபட்டிருந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் நிறைவில் வந்த ஜெகதிஷ்வரன் அவர்களால் ஆரோக்கியமான சிந்தனையும் வழங்கபட்டது.அதை நிறைவில் தருகிறேன்.

அதைவிட பந்திக்கு முந்துவதற்கு இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்ககப்படுகிறது.


பந்திக்கு முந்துவது எதற்காக என்றால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
சாப்பிடத்தான் என்று அடித்து சொல்வீர்கள்.
சரி சாப்பிடவென்றே வைத்துக்கொள்வோம்.சாப்பிட பொதுவாக வலது கை தானே எல்லோருக்கும்.
அதேபோல பண்டைய காலங்களில் வில்லேந்தி வாளேந்தி சென்ற போர்க்களம் சென்ற போர்வீரர்கள் வில்லின் அம்பை இழுப்பதற்கு தனது வலது கையால் நாணில் அம்பை எவ்வளவு தூரம் பின்னுக்கு இழுப்பர்களோ அவ்வளவு வேகமாக மிகக்கூடிய தூரத்திற்கு அம்பு பாய்ந்து செல்லும்.
அப்படியாக வலது கை பந்திக்கு முந்தியும் போர்க்களத்தில் மிகவும் பின்னுக்கு பின்னுக்கு வந்தும் செல்லவும் வேண்டும் என்பதை அந்த பழமொழி குறித்து நிற்குமாம்.
இதை ஒரு விடுகதை என்றும் சொல்கிறார்கள்.இதை ஒரு விடுகதையாக பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் அது என்ன ? என்றும் கேட்பார்களாம். அப்படியென்றால் இடதுகை பாவனையாளர்களுக்கு எப்படி இது பொருந்தும் என்றும் ஒரு கேள்வியை உருவாகின்றது.அப்படியாயின் வலது கை என்று வரும் இடமெல்லாம் இடது கை என்று மாத்தி வாசியுங்களேன்.


அடுத்து இன்னுமொரு விளக்கம்

பந்தித்தலை கட்டுதல் அல்லது கூடுதல் என்று தமிழகராதியிலிருந்து விளக்கம் கொடுக்கபடுகிறது.
கட்டுதலை முன்னோர்களின் சிந்தனையின் வழியில் தாலிகட்டுதல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.கூடுதல் என்பதை மணவாழ்க்கையில் கூடுதல் அல்லது மனதோ மனம் கூடி இல்வாழ்க்கையில் இணைதல் என்றும் அர்த்தம் இருக்கிறது.
அந்த வழியில் திருமணத்தை பின்னுக்கு போடாதே , முந்திக்கொள் என்று சொல்கிறதாம்.
அடுத்து படைக்கு பிந்து என்பதில் படை என்பது படைத்தல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.உயிர்களை படைத்தல் என்கின்ற குழந்தைகள் பெற்றுக்கொள்வதை பிந்திக்கொள் என்று சொல்கிறதாம். அதாவது குழந்தைகளை பெற்றுக்கொள்ள முந்திக்கொண்டால் சனத்தொகை பெருகக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம். இளையவர்கள் தங்கள் இளமைக் காலத்தின் இனிய பொழுதுகளை மகிழ்ந்து நுகர்ந்து கொள்ளவும் இல்லற வாழ்வை முறையாக முறைப்படுத்த பெரியவர்களால் இளையவர்களுக்கு கொடுக்கப்படும் புத்திமதியாக்கவுமே இந்த பழமொழி பந்திக்கு முந்து படைக்கு பிந்து.... பாருங்கள் எப்படியிருக்கு புத்திமதி இளையவர்களுக்கு . இளையவர்களே கேட்டுக்கொள்ளுங்கள். உலக சனத்தொகை பெருக்கம் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த காலகட்டங்களில் சிலவேளைகளில் மனித சனத்தொகை கட்டுப்பாட்டிற்காக செயற்படும் அமைப்புக்கள் இந்த பழமொழியை கையிலெடுத்தாலும் எடுக்கும்.

இதைவிட முற்றிலும் வீரத்தோடு சம்பந்தப்படுத்தி ஒரு விளக்கம் இருக்கிறது.

பந்தி என்பதற்கு வரிசை என்று ஒரு பொருள் இருக்கிறது.போர் என்று வருகின்றபோது அதன் வரிசையிலே முந்தி செல்ல வேண்டும்,படை என்று வந்துவிட்டால் போர்க்களத்திலே போரின் இறுதிவரை போராடி எதிரியை அழித்து நிலைத்து நின்று கடைசி ஆளாக பிந்தி வரவேண்டும்,அதுவேதான் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சொல்கிறது பழமொழி.

இப்படியாக பலவாறு அர்த்தங்கள் கற்பிக்கபடும் இந்த பழமொழிக்கான ஆரோகியமான சிந்தனைகளின் தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட திரு.ஜெகதீஸ்வரன் அவர்களின் ஆரோக்கிய சிந்தனை.

ஆகவே என்றும் பெரியவர்களாக,சமுதாயத்திலே மதிக்கபடுபவகளாக,
வெற்றிபெறும் சமுதாயத்தில் உயர்ந்தவனாக இருக்க வழிகாட்டும் பழமொழிதான் ”பந்திக்கு முந்து படைக்கு பிந்து”.
என்றாலும் கல்யாண சாப்பாடுகளின் ஆரம்பத்தில் பந்திக்கு முந்து என்று சொல்வது ஒரு நடைமுறையாகிவிட்டது என்பதும் அதை மாற்றவே முடியாது என்பதும்தான் உண்மையான விடயம்

1 comment:

Nithy Samy said...

நன்றி தினேஷ் மிகவும் ஆரோக்கியமான விடயங்களை அனைவரோடும் கலந்து கொள்வது வரவேற்கப்படக் கூடிய ஒன்று. நான் கல்வி கற்ற காலங்களில் எனது தமிழ் ஆசிரியர் திரு வேலாயுதம்(கரவை) அவர்கள் "பந்திக்கு முந்து படைக்குப் பிந்து" என்பதற்கு இவ்வாறு விளக்கம் தந்தார்...சாப்பாட்டுப் பந்தியில் இருந்து முதலில் எழும்ப வேண்டும் அதாவது அளவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது, மற்றும் போரில் இறுதி வரை நின்று போராடுவதே வீரனுக்கு அழகு என்றும் கூறியிருந்தார்.