யாழ்தேவியில் நான்


யாழ்தேவியில் நடந்து முடிந்து கொண்டிருக்கும் வாரத்தின் நட்சத்திரப் பதிவராக கரவையின் ஓசையை அறிவித்திருக்கிறார்கள் அதன் நிர்வாகக்குழு. மிகமகிழ்ச்சியைத்தருகிறது.
இப்படியான விடயம் பதிவர்களின் எழுதும் ஆர்வத்தைக்கூட்டும் என்றால் மிகையாகாது.வேலைப்பளு என்றவாறாக நேரத்தில் இடைவெளிகள் தேடி அதில் நிம்மதி தேடும் இங்கிலாந்து மண்ணிற்கு வந்த பின் இந்த சிறப்பளிக்கப்படிருக்கிறது.அதாவது பதிவுகள் இன்னும் வரவேண்டும் என்று கரவைக்குரலுக்கு சிறப்பான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.வேலைகள்,படிப்பு எண்டும் நேரமில்லாமல் போச்சு எண்டும் எல்லோரும் சமாளிப்பதுபோலவே சமாளிக்கும் அந்தஇந்தக் கதையைவிட்டுவிட்டு தொடர்ந்தும் பதிவுகள் வரவேண்டும் என்று பலத்த எச்சரிக்கை கரவைக்குரலுக்கு யாழ்தேவியால் விடப்பட்டிருக்கிறது.
என்ன அப்படித்தானே.

சிரிப்பெல்லோ வருகிறது,ஹிஹிஹிஹிஹிஹிஹி..........

"விடைபெற்ற அமீரகம் வரவேற்ற இங்கிலாந்து" என்ற பதிவில் நான் முதன்முதல் இங்கிலாந்தில் பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள பட்ட கஷ்டத்துக்கு ஊக்கம் தரும் பரிசு பாருங்கோ இது.உண்மையிலை அந்தப்பதிவை பார்த்துவிட்டு எல்லாரும் வந்து கேட்ட கேள்வி " எங்கை இந்த பென்னாம்பெரிய காசை தண்டமாக கட்டினீங்க"எண்டுதான். யாரும் வந்து யாரடா அந்த பெரிய மனுஷனுக்கு பக்கத்திலை இருந்தது எண்டு கேட்கவே இல்லை,சில பேர் தொலைபேசி அழைப்பெடுத்தாலும் இதுதான் கேள்வி. அப்படி ஆரம்பமே சுவாரஸ்ய அன்பவங்கள்,அவற்றை பதிவிட்டவுடன் யாழ்தேவியும் என்னை நட்ச்த்திரிற பதிவராக அறிவித்திருக்கிறார்கள். வலைப்பதிவின் வளர்ச்சிப்பாதையில் அவர்களால் கொடுத்த இந்த மதிப்பு மிக்க கௌரவமாக நான் பார்க்கிறேன்.என்றும் நன்றியுடையவனாவேன்.

இன்னொருவிடயம்.

யாழ்தேவியில் தரம்கொடுக்கப்பட்ட பதிவர் என்ற அடிப்படையில் என்னால் அதற்குள் என் பதிவுக்களை இணைப்பது மற்றும் வேறு சில வரையறைகள் என்பவற்றை தெரிந்துகொள்ள ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.ஏனென்றால் சிலவேளைகளில் மீளவும் என்னை பதிவு செய்யும்படி சிலவேளைகளில் கோரப்படுகிறது.அதனால் என்னைப்போல வேறுசில பதிவர்களுக்கும் அந்த கஷ்டம் உணரப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அதை யாழ்தேவியிடம் அறிய ஆவலாக இருக்கிறேன்.

மிக நன்றி யாழ்தேவி.

3 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணா

சென்ஷி said...

வாழ்த்துக்கள் தினேஷ்..!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;)