நரிகளை பார்க்க வேண்டுமா? லண்டனுக்கு போய்ப்பாருங்கள்

என்னடா நரிகள் லண்டனிலா? சீ சீ இது வேறு ஏதோ நரிகள் கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு வந்த உங்களை ஏமாற்ற போவதில்லை.. நிச்சயமாக இது லண்டனில் இருக்கும் இல்லை இல்லை வாழும் நரிகள் பற்றிய பதிவுதான்.

விலங்குகளில் மற்றவர்களை ஏமாற்றும் திறன் வாய்ந்த விலங்காக நரியை பொதுவாக சொல்வார்கள்.தந்திரமான விலங்கு.பாட்டி வடை சுட்ட கதையில் நரி தந்திரமாக காகத்தை ஏமாற்றியது என்றும் ஒருவகை கதை சொல்கிறது.ஆனால் காகமும் தந்திரமாக நரியை ஏமாற்றியது என்றும் ஒரு வகையாக சொல்லபடுகிறது.என்றாலும் நரி,அதன் குணம் நரிக்குணம் என்று மற்றவர்களை தந்திரமாக ஏமாற்றுவதை பொதுவாக குறிப்பிடுவர்

ஊரிலே பொதுவாக நரிகள் காட்டில் அல்லது வயல்வெளிகள் அல்லது பற்றைகளுக்குள் இருக்கும்.அதுவும் நரிகளை பொதுவாக கிட்டவாக காண்பது கடினமும் கூட.எங்காவது தூரத்தில் அல்லது ஊளையிடும் சத்தத்தின் வாயிலாக "இங்கே நரிகள் இருக்கிறது" என்று பேசிக்கொள்வதுண்டு.அதுவும் நகரப்பகுதிகளில் வாழ்ந்தால் நரிகள் பார்க்க காட்டுக்கு அல்லது மிருகக்காட்சி சாலைக்குத்தான் போக வேண்டும்.அதாவது காட்டுக்குள் அல்லது மக்களை விட்டு விலகித்தான் நரிகள் வாழும் என்பது தாயகத்தில்.அப்படி நரிகள் ஊருக்குள் அல்லது வீடுகளுக்குள் நுழைய முயன்றால் என்ன நடக்கும் என்பது சொல்லி விளங்கவேண்டியதுமில்லை.நரிகள் மட்டுமல்ல நரிக்குணங்களுக்கே இடமிருக்காது.பொதுவாக ஒதுக்கபட்டுவிடும் நரிகளும் நரிக்குணங்களும்.

லண்டனில் நரிகள் செய்யும் வேலைகள் தாங்கமுடியாது.நரிகளின் கூத்துக்கள் பல,தந்திரமென்று அவை நினைத்துச் செய்யுமோ தெரியாது.ஆனால் தன் செயற்பாடுகளை கச்சிதமாக செய்கிறது
மற்றவர்களை தேடவைக்கிறது.பொதுவாக எல்லோரையும் ஓடவைக்கிறது.

இப்படித்தான் ஒரு நண்பர் லண்டனுக்கு வந்த புதிதில் இரவில் களைத்து விழுந்து நடந்து வருகிறார்.இரவு 12 30 மணி வேளையில் உடம்பை முறித்து வேலை செய்துவிட்டு நடந்து வருகிறார்.பொதுவாக லண்டனில் வீடுகளுக்கு வெளியில் எல்லைகளில் நிரலுக்காக மரங்களை வளர்த்திருப்பார்கள்.அந்த சிறு மரங்கள் சல சல என்று சத்தமிட்டதாம்.ஏதோ பெரிய மிருகங்கள் அல்லது கள்ளர்கள் நகர்வதுபோல அந்த சத்தம்.
இரவு நேரம் தன்னை யாரும் அல்லது எந்த விலங்கும் தாக்கலாம் என்று நண்பர் பயந்து விரைவாக நடந்தாராம்.விறு விறு என்று நடந்து கொஞ்ச தூரம் சென்று திரும்பிப்பார்த்தாராம்,
"அட நாய் ஒன்று குறுக்காலை போய் என்னை பயப்படுத்திவிட்டது"என்று மனசுக்குள் நினைத்தாராம்.ஒவ்வொருநாளும் அந்த நாய்கள் இரவு வேளையில் நண்பர் வருகின்றபோது அங்குமிங்கும் ஓடுமாம். நாய் கடித்துவிடுமோ என்று பயந்து பயந்து தான் வருவாராம்.
உண்மையில் அது நாயில்லை அது நரி என்று கண்டுபிடிக்க அவருக்கு இரண்டு மாதமாகிவிட்டது.

இன்னுமோர் நண்பர் லண்டனுக்கு வந்த புதிதில் தன்னுடைய பல நண்பர்களோடு ஒன்றாக இருந்திருக்கிறார்.
அதிகாலை வேளையில் இவர் வேலைக்கு போகும்போது அவருடைய செருப்புகள் காணாமல் போய்விடுமாம்.அவரும் "யாரோ தன்னுடன் இருக்கும் பொடியள் எடுத்திருப்பாங்கள்" என்று நினைப்பாராம்.அதற்கு நண்பர்களுக்கு வாய்பேச்சு திட்டும் மனசுக்குள் வேறு.
ஒரு நாள் அவர் பாதையிலே நடந்து போகின்ற போது அவரின் செருப்பு பாதையிலே கிடந்ததாம்.வீட்டிலேயே வந்து நண்பர்களுக்கு ஏச்சு, 
"என்ன மச்சான் இப்படி இப்படி தூக்கி விசுறீங்க" என்று.
நண்பரே இது நரிகளின் வேலை என்று நண்பர்கள் நக்கலடிச்சு விளக்கம் கொடுத்தார்களாம்.
ம்ம்ம்ம்.... நரிகள் இங்கு வீடு வாசல்கள் வரை வந்து செருப்புகளைக்கூட விடுவதில்லை.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால்
தாயகத்தில் நரிகள் காட்டில்,நாய்கள் வீட்டு முற்றத்தில்.
லண்டனில் நரிகள் வீட்டு முற்றத்தில்,நாய்கள் வீட்டு படுக்கைகளில் அல்லது மனிதர்களின் இடுப்பில்
அதாவது லண்டனில் நாய்களும் நரிகளும் மக்களோடு தான் இருக்கும்.



ஆனால் தாயகத்தில் நல்ல நாய்கள் மட்டும் வீட்டு முற்றத்தில்,
மற்ற நாய்கள் ரோட்டில்,நரிகள் எல்லாம் காட்டில்

அது தான் நரிகளை பார்க்கவேண்டுமா லண்டனுக்கு போய் பாருங்கள்.



பிற்குறிப்பு:  இது லண்டனில் இருக்கும் நரிகளை பற்றி மட்டும் தான் 
புகைப்படங்கள் மற்றும் வீடியோ உதவி இணையம்

3 comments:

கோவை நேரம் said...

நம்ம ஊருல நாய் தொல்லை .அங்க நரி தொல்லை ...

KANA VARO said...

நான் கூட வேலை முடிந்து வரும்போது அடிக்கடி பார்ப்பதுண்டு. லண்டனில் இந்த நரிகளைப் போல சில குள்ளநரிக் கூட்டங்களும் உண்டு. அதாவது சொந்தமாக தொழில் தொடங்கி மனித உழைப்புக்களை உறிஞ்சும் சில நம்மவர்கள்.

வேகநரி said...

ஹி ஹி ஹி!!!! ஊழல் மோசடி நரிகளால அப்பாவி நரிகளுக்கும் கெட்டபேருங்க.