மோட்டச்சைக்கிள்






மாலை வேளை
கோடைகால மாலைபொழுது அது,அழகிய சூரிய அஸ்தமனம் காண்கின்ற வேளை
கிராமத்தில் அங்கும் மிங்கும் எல்லா வயதினரும் தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருகின்றனர்.
அதுவும் கிராமங்களில் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்?
தங்களுக்கு பிடித்த இடங்களில் கூடி நின்று தங்களுக்கே உரித்தான கும்மாளம் பகிடி பம்பல்கள்,ஆளுக்காள் கும்மிகளுக்கும் குறைவில்லை. நகைச்சுவைகளோடு அதற்கான சிரிப்புகள் வானைப்பிளக்கும்,தங்களுடைய கிராமம் தானே என்ற உரிமையோடு ஓடியாடித்திரிந்து நகைச்சுவையோடு நகரும் மாலைவேளை கிராமங்களில்.

அந்தகிராமத்தின் ஆலயத்தினருகில் இருக்கும் சனசமூக நிலையத்தடியில்தான் அஙகிருக்கும் இளைஞர்கள் கூடுவார்கள்.பொதுவாக இளைஞர்களோ வயது கூடியவர்களோ கிராமங்களில் அங்குள்ள பொதுவான இடங்களில் கூடுவது வழமை.கோயில்கள்,வாசிகசாலையடி,குளத்தடி,வயற்கரை,ஆலமரம் போன்ற மரங்களின் கீழ் என்று அந்த இடங்களின் பட்டியல் நீண்டு செல்லும்.
இந்த கிராமத்திலும் ஆரம்பத்தில் கிரிக்கெட் மட்டைகளோடும் ஆறு கட்டைகளோடும் இளைஞர்களும் அவர்களின் வால்களும் வந்துவிட்டாலே அந்த இடம் களைகட்டதொடங்கிவிடும்.சூடுபிடிக்கும் வெயில் கூட சூட்டை தணிக்க தொடங்கும் நேரம் அது.
வால்கள் என்றால் இளைஞர் பராயத்தை தொட்டதும் தொடாததுமாயிருக்கும் அந்த பருவத்தினர் இளைஞர்கள் என்பவர்களோடு உலவும் அந்த வட்டங்கள் தான்.அது கிராமங்களில் இளைஞர்கள் மட்டங்களில் சொல்லப்படும் ஒரு வழக்கு.

ஒவ்வொரு பருவத்தினரும் தங்களுக்கேற்ற இடங்களில்.வயது வந்தவர்கள் கிரிக்கெட் பந்து அடித்தாலும் படாத தூரத்திலில் கூட்டமாக இருந்து அலசுவார்கள்
தங்கள் அரசியல் ஆய்வுகள்,சமூகப்பார்வைகள் என்று கதைகள் நகரும்.
அந்த இடத்தில் தான் யோகன் அண்ணா ஒரு ஓரமாக தன் பார்வையை செலுத்துவார்,சிறந்த ஞாபக ஆற்றலும் படிப்பறிந்த விடயங்கள்,படித்த ஆசிரியர்கள் என்று அவர் பேச்சுக்கள் நகரும்.படிக்கும் காலங்களில் அவர்பெற்ற அனுபவமான விடயங்கள் யாருமறியா விடயங்களாக இருந்தது.அவரை பற்றி இங்கே சொல்லியிருக்கிறேன்

எக்கட்டம் விட்டுக்கொண்டே சிரித்தபடி வருகிறார் கந்தசாமி அண்ணன்,
“என்ன இண்டைக்கும் என்ன கதைபோகுது,என்று கேட்டபடி வந்து வாசிகசாலையடியில் உட்கார்ந்துகொள்கிறார்.
அன்றைய மாலை கிரிக்கெட் விளையாட்டைத்தொடர்ந்து வாசிக சாலைக்கு முன்னாலே இளைஞர்களும் அமர்துகொள்வார்கள்,விளையாடில் புரிந்த வீரக்கதைகளோடும் அளாப்பிய சுணாப்பிய கதைகளால் மாலை நேரத்தில் பூட்டிய வாசிகசாலையடி களைகட்டும்.விளையாட்டோடு இணைந்துகொள்ளமுடியாமல் ரியூசனுக்கு எல்லாம் போய்விட்டு சுத்தியடிச்சுவிட்டு வரும் இளைஞர்களும் அந்த இடத்தைற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்கள் ரியூசனுக்கும் போவார்கள்,ரியூசனுக்கு போனவர்களோடும் போய் கவனமாக விட்டுவிட்டும் வருவார்கள்.
பந்து படாத இடத்தில் கூடிக்கதையளந்த வயோதிப இளையவர்களும் மெல்ல மெல்ல நகர்வார்கள் வாசிகசாலை நோக்கி,சிலர் வீட்டுக்கும் சென்றுவிடுவார்கள்.இளைஞர்களோடு கூடி விளையாடிய வால்களை கூட்டிசென்றுவிடுவார்கள் பெற்றோர்.இப்படியாக கூடும் வாசிகசாலை மாலைக்குழு.
அங்கு என்ன விசயம் எப்படி கதைக்க வரும் என்று யாருக்கும் தெரியாது,ஆனால் ஏதோ ஒரு விடயம் கதையளக்க வந்துவிடும்.

”என்ன இது புதுசா ஒரு மோட்டச்சைக்கிள் வந்திருக்காமே,இவன் பெடியன் எடுத்தேயாகவேணும் எண்டு கேட்டு தாயோடை சண்டைபிடிக்கிறான் வீட்டிலை,என்ன அது நல்லா சைக்கிளோ?கந்தசாமி அண்ணையின்கேள்வி,

”அண்ணை இப்ப யாழ்ப்பாணத்துக்காத்தான் புதுசு புதுசா மோட்டச்சைக்கிள் அனுப்புறாங்கள்.ஏனெண்டால் அவங்களுக்கு தெரியும் இங்கை தான் வெளிநாட்டுகாசு நல்லா இருக்கெண்டு.
அதால எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்கோ” நாதண்ணையின் கதை.

”அதுவும் பெடியள் உசார் வாற வயசிலை அப்பிடி இப்பிடி திரிய சுத்தியடிக்கத்தான் மனம் கேட்கும்,” நாதண்ணை தொடர்ந்தார்.

”பெடியளின்ரை அவங்கள் அனுப்பிற வெளி நாட்டுக்காசை,அந்த காசிலை தான் நான் இருக்கிறன் எண்டு இவர் நக்கல் பண்ணுறாரோ,அல்லது உண்மையில் நன்மைக்குத்தான் சொல்கின்றானோ” என்று கடுமையாக யோசிக்கிறார் கந்தசாமியண்ணை.

”எண்டாலும் அவன் சொல்லுறதிலை நியாயம் இருக்கு” மனதை தேற்றுகிறார் கந்தசாமியண்ணை.

”நாதண்ணை உங்கடை வயசிலை நீங்க எத்தினையை செய்திருப்பியள்,ஆனால் எங்கடை வயசிலை எங்களுக்கும் ஆசை இருக்கும் தானே” இது அங்குள்ள ஒரு இளைஞர் வட்டத்திலிருந்து தீபன்,இவன் செல்லத்தம்பி அங்கிருக்கும் எல்லோருக்கும்.

அது என்னவென்றால் அந்த மோட்டார் சைக்கிள் இன்னும் சந்தைக்கே வரவில்லையாம்,
அது வந்துகொண்டிருக்கிறதாம்,பொதிகை தொலைக்காட்சியில் வரும் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டுத்தான் கந்தசாமிஅண்ணையின் மகன் கேட்கிறானாம்.அதுவும் அந்த மோட்டார்சைக்கிளை அந்த விளம்பரத்தில் சச்சின் ரெண்டுல்கர் ஓடிக்காட்டுகின்றாராம்.இவையெல்லாம் கந்தசாமி அண்ணன் சொன்னபடியே இருக்கிறார்.

”அடேய் செல்லத்தம்பி பொடியா கந்தசாமி அவர் மகனுக்கு எடுத்துகுடுக்க நீங்க எல்லாம் ஓடித்திரிய தானே இந்த கதை சொல்லுறீங்க,அந்த விளம்பரத்திலை அவன் ஓடிக்காட்ட அவனுக்கு காசு, நீங்க பார்த்துபோட்டு அதை வாங்க காசு வேணும்” என்று நகைச்சுவையோடு பேசினார் நாதண்ணை.

”இப்படி மோட்டச்சைக்கிளில் ஓடித்தான் அவன் ஒரு கலர் காட்டி தன்னுடைய காதலை மெருகூட்டபோறான் எண்டு இவருக்கும் தெரியாது,ஒருத்தருக்கும் தெரியாது” மனதிலே சிரிப்போடு முணுணுத்தபடி பொடியள்,

சின்ன சின்ன மாற்றங்களோடும் பல்தேவைகருதியும் சந்தைக்கு வந்தபடியே இருந்தது பல ரக மோட்டார்சைக்கிள்கள்.யாழ்ப்பாணத்திற்காக பெற்றோல் பாவனை அதிகரித்தகாலங்களில் இந்த மோட்டார்சைக்கிள்களின் பாவனையும் அதிகரிக்கத்தொடங்கிவிட்டது,அதே காலங்களில் வெளி நாடுகளிலுருந்து புலம்பெயர்ந்த மக்கள் சுற்றுலாவென்று தாங்கள் பிறந்த மண்ணுக்கே வரத்தொடங்கியகாலம்.இளைஞர்கள் என்றால் இப்படியான மோட்டார்சைக்கிள்தான் ஓட வேண்டும் என்ற ஒரு மாயைவலைக்குள் இருந்தகாலங்கள்.
இன்றும் சந்தையில் வரும் மோட்டார் சைக்கிள்கள் நிச்சயம் யாழ்மண்ணிலும் பவனிவந்துகொண்டேதானிருக்கும்.
திரைப்படங்களை மையமாகவைத்து குழுக்கள் உருவாகியும் அவை தமக்கிடையில் சண்டைகள் பிடிப்பதுமாக நகர்ந்தகாலங்களாகின.
அவைகள் எல்லாம் இப்படியான மோட்டார் சைக்கிள்களை எடுத்து சத்தமிட்டவாறும் உறுமியவாறும் கலக்கங்கள் கொடுத்த காலமும் கூட.
இவையெல்லாம் ஒரு பகுதியான குழுக்களில் மட்டும் தான்,
அதைவிட இந்த மோட்டச்சைக்கிளினால் அவந்த விபத்துக்கள் ஏராளம்,எத்தனையோ நண்பர்களையும் பெரியவர்களை இழந்திருக்கிறோம்

ஆனால் கந்தசாமி அண்ணனின் மகன் கேட்டது தன் காதலை மெருகூட்டவாம்,அது அங்கிருந்த இளைஞர்கள் முணுமுணுத்தது.காதலுக்கு மோட்டச்சைக்கிளுக்கும் எவ்வளவு தொடர்பு?

இளையவர்கள்,காதல்கள்,தேவைகள்,வியாபாரிகள்,தூரப்பயணிகள்பெண்களுக்கும் மோட்டச்சைக்கிள் தேவைகள் என்று இனங்கண்டு பல்வேறு வடிவங்களில் இந்த மோட்டச்சைக்கிள்கள் உருப்பெறத்தொடங்கியது.கொழும்பில் காணமுடியாத மோட்டச்சைக்கிள்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் அழகழகாக காணக்கூடியதாக இருந்தது.
ஹீரோ ஹொண்டா என்றும் அந்த நிறுவனத்தின் தயாரிப்போடு இன்னும் பல வடிவங்கள் நிறங்களில் வந்து குவிந்துகொண்டேயிருந்தது.வந்தவுடன் வாங்குவதற்கு நிறங்களோடு புக்கிங்கள் வேறு.இருந்ததை விற்றுவிட்டு புதிதாய் வந்ததை வாங்கவும் போட்டி.ஹீரோ கொண்டா போல இன்னுமொரு நிறுவனம், நினைவிற்கு வரவில்லை,அதை இளைஞர்கள் வாங்க பின்னடித்தார்கள்,தரம்,எடுப்பு குறைவென்று சொல்வார்கள் சிலர்.
அதேபோல போட்டியாக சீன மோட்டச்சைக்கிள்கள் சப்பறங்கள் சிகரங்கள் போல ஒளியூட்டும் நிறங்களாலும் மின்குமிழ்களாலும் அலங்கரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தது,ஆனால் அது விலை குறைவென்றாலும்அதற்கு மௌசு குறைவுதான். லட்சக்கணக்கில் காசைக்கொடுத்து வாங்க எல்லோரும் பணக்காரர்கள்.

வடமராட்சி,தென்மராட்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் சைக்கிளில் போய் வந்தவர்கள் இருக்கிறார்கள்,அதேபோல் அடுத்து வந்த காலங்களில் வீட்டுக்கொரு மோட்டச்சைக்கிள் வந்த காலமும் இருக்கிறது,
பலரின் தேவைகளை அது நிறைவு செய்திருக்கிறது என்பதும் உண்மைதான்.என்றாலும் பெற்றோலின் தன்னிறைவான வருகையோடு மோட்டச்சைக்கிள் பாவனையின் அன்றைய காலங்களின் அதீதமான பாவனை வளர்ச்சி மனதோடு ஒட்டிவிட்டது


சொல் விளக்கம்
மோட்டச்சைக்கிள்-இது பேச்சு வழக்கு,மோட்டார் சைக்கிள் பொதுவான எழுத்து வழக்கு
அளாப்பல் சுணாப்பல்- சிறுவர்கள் விளையாட்டின் போது பொய் என்று தெரிந்து உண்மை போல் சொல்லப்படும் பொய்
பொடியள்-இளைஞர்கள்

அதிர்ந்தது மத்திய லண்டன்,

விடைபெற்றிருக்கிறது 2011.கிழக்கு பசுபிக் பிராந்திய நாடுகள்,மற்றும் ஆசிய நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய மக்களும் 2011ம் ஆண்டுக்கு விடை கொடுத்து
 2012ஆம் ஆண்டை வரவேற்றிருக்கின்றார்கள்.
தொடர்ந்து மேற்கு பசுபிக் பிராந்திய நாடுகள் வரவேற்க 
தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
பல்வேறு மகிழ்ச்சிகள்,தாக்கங்கள், நல்ல அனுபவங்கள்,என்று யாவருக்கும் தந்திருக்கிறது 2011.
எனக்கும் இணையம்,வானொலி,பதிவுலகம் என்று பல நட்புகளை தந்தது, பிரபல்யங்களை அறிமுகம் செய்தது,பல நட்புகளை உறவுகளை அவர்களின் அன்பின் திறத்தை,ஆழத்தை உணரமுடிந்தது,எதிர்பாராத நட்புகள் உறவுகள் தேடி இணைந்தது,புலம்பெயர்ந்த லண்டன் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து தேடி வந்து சந்தித்த உறவுகள்,பிறந்த நாள் சிறப்பான நாளில் அமைந்து (11.11.11)அந்த வாழ்த்துக்களை பல ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்த உறவுகள், இன்னும் மறக்கமுடியாத பல நாள்கள் மற்றும்,தகைமை முன்னேற்றங்கள்,புதிய தேடல்கள்,பல களங்கள்,என்று சிறப்பான அனுபவங்களோடு விடைபெறுகிறது

சிறப்பான அனுபவங்களை தந்த 2011 ஆம் ஆண்டை மகிழ்வோடு விடைகொடுத்து 2012 ஆம் ஆண்டை மனம் மகிழ்ச்சிகொண்டு வரவேற்போம்.
லண்டனில் சரியாக நள்ளிரவு 12 மணியளவில் மத்திய லண்டனின் மணிக்கூட்டுகோபுரத்தின் கடிகாரம் ஒலி எழுப்பத்தொடங்கியதும் அதிர்ந்தது லண்டன்,ஒருபுறம் பல்லொளி தரவல்ல பட்டாசுகள் ஒலி எழுப்ப மறுபுறம் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் ஒலி,வானைப்பிளக்குமளவிற்கு Happy New Year 2012 என்ற உற்சாகமான சத்தத்தோடு(புதுவருட வாழ்த்துக்கள் 2012 என்று தமிழில் சொல்ல இவர்களுக்கு வராதே-இவர்கள் ஆங்கிலேயர்கள்) பல்லொளியோடு நள்ளிரவில் வானம் மகிழ்வுற்று வழமைபோல வரவேற்றிருக்கிறது லண்டன் மாநகரம்,
அந்த அழகை இந்த வருடம் எனக்கும் காணக்கிடைத்தது.
அந்த புகைப்படங்களை பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து இன்முகத்தோடு வரவேற்கும் 2012 எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கட்டும்
யாவருக்கும் மேலான நட்போடும் அன்போடும் வாழ்த்துக்களை இதயத்தின் ஆழத்திலிருந்து பகிர்ந்துகொள்கிறேன்.





இணையத்திலிருந்து சுட்ட புகைப்படம்

பிறந்திருக்கும் இந்த புதிய வருடம் 2012 யாவருக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும் என்று அன்போடு தனது வாழ்த்தை பதிவு செய்கிறது கரவைக்குரல்.

மனுசரை படிக்கவேணும்............தன் நிலை மறந்தாலும்!!!!

அந்த மாலை நேர பொழுதுகளில் கூடும் மாலை நேர வாசிகசாலை  குழுவின்ஓரமாகத்தான் யோகன் அண்ணாவும் உட்கார்ந்தபடியே முணுமுணுத்தபடி இருக்கிறார்.
ஊரில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் மாலை வேளையில் ஒன்றாக கூடி கதையளக்குமிடம்தான் 
அந்த மாலை நேர வாசிகசாலைக்குழு.யோகண்ணாவும் அதில் ஒரு ஒரமாக தன் பாட்டுக்கு இருப்பார்


பொதுவாக அந்த ஊரின் எங்கும் நடந்தபடி திரிவார்,அதைவிட கூடிய நேரங்கள் பேப்பர் படிப்பதுதான்
அவரின் பேச்சுக்களை கிண்டலாக அவ்வூரின் இளையவர்கள் சிரிப்பதுமுண்டு, ஏன் சில வயதானவர்களும் தான்,
ஏனென்றால் ஒரு சித்தசுவாதீனமற்றவராக அவர் வாழ்க்கையின் காலங்கள் சென்றுகொண்டிருந்தமையேதான்.
சித்தசுவாதீனம் என்று பதிய எழுத்துக்கள் மறுக்கிறது,
தன் நிலை மறாந்தாலும் அவரின் பொழுதுபோக்கு பத்திரிகை மற்றும் நூல்களை வாசிப்பது என்றால் அவர் எப்படியிருந்திருப்பார் என்பதை அவரின் நிலையிலிருந்து நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
பத்திரிகைகளில் படித்தவற்றை பற்றி சொல்லியபடியேயிருப்பார், உண்மையில் அவருக்கு நேரமறிந்து எதையும் சொல்ல அவருக்கு தெரியாது.
அதுவும் படிக்கின்ற மாணவர்களை கண்டுவிட்டால் .......ம்ம்ம்ம்ம்ம்
அதுதான் அவ்வூரின் இளைஞர் வட்டங்களை கண்டால், தான் படித்த 
கல்வியைபற்றியும் அதை பயன்படுத்திய முறை பற்றியும் சொல்வார்.கணித பாடத்தை கற்ற அவர் கணிதத்தின் சூத்திரங்களையும் செய்முறைகளையும் நினைவில் உள்ளவற்றை நினைவுபடுத்துவார்.
ஹாட்லிக்கல்லூரியின் காலங்களில் அவர் படித்த காலங்கள் அதிபர் பூரணம்பிள்ளை அவர்கள் இருந்த காலம்.
கல்லூரியில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களுக்கு இருந்த மதிப்பு அதுமட்டுமல்லாமல் அவர் அதிபராக இருந்து பணி செய்தமையை உலகம் பாராட்டியும் இருந்தமை கல்விச்சமூகத்தினர் பாமர சமூகம் என்ற வேறுபடுகளின்றி கூடுதலானவர்கள் அறிந்த ஒரு விடயம்.
ஹாட்லிக்கல்லூரியின் பொற்காலங்களில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களின் காலமும் ஒன்றாகும்.
அவர் காலங்களில் தான் படித்த பெருமையை அடிக்கடி யோகன் அண்ணா நினைவு படுத்துவார்.
அதுவும் அங்குள்ள இளைஞர்களில் யாராவது ஹாட்லியில் படித்துவிட்டால் அதை நினைவுபடுத்தியபடியேயிருப்பார்.இப்படியான விடயங்களை யாராவது வெள்ளைக்கார உடை அணிந்து சொல்லியிருந்தால் யாராவது கைகட்டியிருந்து கேட்டிருப்பார்கள்.ஆனால் யோகன் அண்ணாவின் வாயில் இருந்து வந்ததால் தான் எல்லோருக்கும் சிரிப்பு.ஆனால் தன் நிலை மறந்திருந்து தனது அருமையான பெருமையான நினைவுகளை மீட்டும் கணிதம் சார்ந்த விடயங்களில் தனது நினைவுகளை வைத்திருக்கும் அவர் பெருமை என்பது தனியானது தான்,
என்றாலும் இளைஞர்களுக்கு பகிடி விடாமலும் மற்றவர்களை கும்மி அடிக்காமலும் இருக்கமுடியாதே..
ஒரு நாள் வாசிகசாலை மாலைக்குழுவின் ஓரமாக தன் நிலையில் தன்பாட்டிற்கு முணுமுணுத்தபடி உட்கார்ந்து இருக்கிறார் யோகன் அண்ணாவும்

‘என்னவாம் புதினம் பேப்பரிலை யோகன் அண்ணா?
 பார்த்துமுடிஞ்சுதோ பேப்பர் எல்லாம்” செல்லத்தம்பியின் செல்ல பகிடி போல இருந்தது கேள்வி
”அந்த ஆள் நாலுதரம் பேப்பரெல்லாம் வாசிச்சு முடிஞ்சிருக்கும்” அங்கிருந்து வந்த இன்னுமோர் நக்கல்.

”பேப்பரோ முந்தி எல்லாம் சண்டை இல்லை நாங்கள் எல்லாம் ஹாட்லிக்கு நடந்து போவம்,சீனப்பாவின் தட்டிவானிலும் போவம்,இப்ப பேப்பரில் சண்டை தான் கூடிபோச்சு” யோகன் அண்ணா கொஞ்சம் பொருத்தமாகவும் தன் நினைவுகளை மீட்டி பொருந்தமில்லாமலும் பதிலை சொன்னார்.
”சீனப்பா” அந்தக்காலம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகன சேவை செய்துவந்தவர்,மிகவும் பிரபல்யமாக அவரின் வாகன சேவை இருந்தமையை இங்கு குறிப்பிடலாம்,

”தொடங்கிட்டார் மச்சான்,தான் நடந்த கதை சொல்லுறார்” என்றபடி கண்ணைக்காட்டி நக்கலடித்தபடி பேச தொடங்கினார்கள் இளைஞர்கள்.
ஹாட்லியை பற்றி தொடக்கினால் அல்லது ஏதாவது கணிதத்தை பற்றிக்கேட்டால் அவரை தொடர்ந்து பேசவைக்கலாம் என்று எண்ணினார்கள். வேறு என்ன பேசவைத்து கிண்டல் பண்ணி அந்த மாலை நேரத்தை கழித்துவிடலாம் என்பது தான் அந்த இளஞர்களின் எண்ணம்.

”யோகண்ணா ஹாட்லிக்கு சீனப்பாவின் தட்டிவான் நேரத்து போய்விடுமோ” சீனப்பாவின் தட்டிவானின் வேகம் சீனப்பா ஓட்டும் வேகத்துக்கும் நக்கல்
”பூரணம்பிள்ளையிடம் அடிவாங்கினீங்களா? எத்தனை அடி வாங்கினீங்கள்?”  என்றவாறு இளைஞர்கள் சிரித்தபடியே.
அவர் படித்த அதிபருக்கும் அவருக்குமான இன்னுமோர் நக்கல் 

தன்னைச்சாடி நக்கல்கள் வருவது கண்டு யோகண்ணாவின் மனம் கொதிக்கத்தொடங்கியது, 
தன்னிலை மறந்தவர் என்ற நிலையிலும் நக்கல்களை அடையாளம் காணுகிறார் யோகண்ணா.
மனங்குமுறியபடி

”என்ன நாலுபோட்டுத்தரவோ...........”கோபத்தோடு கேட்கிறார்.
ஒரு கணம் பயந்தனர் இளைஞர்கள்.அதுவும் தன் நிலை மறந்தவர்கள் அடிக்கும் போது அதன் வலியும் நோவும் அதிகமாகத்தான் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.
தொடர்ந்தார் யோகண்ணா
”என்ன பூரணம்பிள்ளை என்பவர் என்ன இலேசாகப்போய்விட்டாரோ,”
”அவர் நடை உனக்கு தெரியுமா? உடை உனக்கு தெரியுமா?
என்ன பின் பக்கமா நாலு போட்டு தரவோ”

”இந்த ஊருலகம் எல்லாம் அவரை தெரியும்”
”எப்படி படிப்பிச்சவர் தெரியுமோ”
ஆஆஆ பின்வளமா நாலு போட்டுத்தரவோ”

 நாலு மனுசரை படியுங்கோ,சரியா படிக்கவேணும் .........ஆஆஆஆஆ
என்று என்று கோபத்தொடு திரும்ப திரும்ப சொன்னார்.






 தன் நிலை மறந்து இந்த ஊரிலும் அந்த வாசிகசாலையிலும் தன் நாள்களை கழித்துக்கொண்டு திரிந்து செல்லும் யோகண்ணா சொன்னவை தான் அவை.
குளிரென்றாலும் சூடென்றாலும் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தன் நித்திரை பொழுதுகளை கழித்து வரும் யோகண்ணா சொன்ன அறிவுரைகள் தான் அவை. 
”நாலு போட்டுத்தரவா நாலு போட்டுத்தரவா” என்று அடிக்கடி கேட்கும்போது இளைஞர்களுக்கோ அல்லது அங்கு கூடி நின்றவர்களுக்கோ அப்படியான பேச்சுகள் அவரை சித்த சுவாதீனம் அற்றவராக தெரிந்திருக்கும்,அதனால் தான் அவர்களுக்கு அவருடைய பேச்சுக்கள் சிரிப்பை கொடுத்திருக்கலாம்,ஆனால் அவர் தன் பாடசாலை அதிபர் ஆசிரியர்களில் வைத்திருந்த உண்மையான மரியாதையையும் அதை எப்போதும் நினைக்கின்ற பண்பும் என்றும் மறக்காதவராய் இருக்கின்றது என்றால் யார் இங்கு தன் நிலை மறைந்தவர்கள்?
என்றோ படித்த கணிதத்தின் சூத்திரங்களை நினைவோடு நினைவாக ஞாபகப்படுத்துவாரென்றால் அவரின் கல்வியறிவின் ஆழம் அன்றையகாலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கவேண்டும்,
”மனுசரை படியுங்கோ” என்பதில் வந்த ஆழமான உட்கருத்து எல்லோராலும்
சித்தசுவாதீனமற்றவரென்று அடையாளப்படுத்தியவரிடம் இருந்துவருகிறதே  அடையாளப்படுத்த முடியாதவர்களாய் வாய்விட்டு சிரிக்கமுடிந்ததே தவிர 
அவரின் வசனங்களில் இருந்த ஆழமான உணர்வுகளை
புரிந்துகொள்ளவில்லை.
உண்மைதான்,கோட்டுசூட்டு வெள்ளைக்கார உடை அணிந்து உள்ளொன்றோடு புறம் ஒன்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் இந்த மனிதம் யோகண்ணையின் உண்மையான உணர்வை அதிலிருக்கும் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது,
மனிதர்களைப்படிக்கவேணும்!!!!!!!! 

பூவரசம் பூவே நலமா

பூவரசம்பூவே நலமா
பூவாக அழகான இதழ் விரித்து
பூவுக்குள் இராஜ்ஜியம் அமைத்து
பூவரசனான கதை மொழியாயோ


தூரத்திலிருந்து ஒரு குரல்
பூவரசம்பூவே நலமா

சூரியவொளிவீச்சின் கதிர்களின் நடுவில்
மஞ்சள் புன்னகையாய் மலர்ந்து
மருதனிலங்களின் காலை நிலவான
தாயகத்தின் அழகிய மலரே நீ நலமா

கவிஞர்களின் கவிப்பொருளாக நீயில்லை
காதலர்களின் அன்பு மலராகவும் நீயில்லை
பூஜைகளில் உனக்கென்று இடம்காணவில்லை
பூத்தபூவிலும் மணம்பரப்பவில்லை
பூவுக்கொரு அரசனான பூராயம் மொழியாயோ
பூவரசம்பூவே நலமா


சொந்தமுகவரிகள் விட்டு
புலத்தில் பலமுகவரிகள் எழுதி
பலமான வாழ்வை தேடி ஓடி நடைபோடும்
சொந்தங்கள் தேடும் உண்மை வாழ்க்கையின் நடுவில்
தாயக நிலமதுவில் காணுமிடமெல்லாம்
தாராளமாய் உன் நிழல்கள்
சுமைகளை இறக்கிவைக்கும்
சுகமான உன் தென்றலை நினைவில் அழைக்கிறது........

தட்டைவடைக்கு உன் இலைகள்
தூக்கித்தரும் அந்தமாதிரி
நாவுக்கு இசைவான ருசியாக...

வாத்தியார் வகுப்பறையில்
மேசைமேலே காத்திருக்கும்,
மாணவனாய் வளரும் காலம்-உன்
சுள்ளித்தடி சுணாய்க்கும்!
நீள்தடி முதுகுக்கு அடையாளம்

பூவரசம் பூவே நலமா

உன் இலைகளால் ”பீப்பி” செய்து ஊதியகாலங்கள்
வேலியில் கதியாலாய் வரிசையாக அழகுபெற்ற நினைவுகள்
வயலுக்கு உரமாக உன் இலைகளின் பயன் தரு சிறப்புக்கள்
வண்ணமான வண்ணாத்துப்பூச்சிகளின் ஆரம்பமே
மசுக்கொட்டிகளின் தங்குமிடமாய் உனிலிருந்தது......
அவையிறங்கும் உன் தண்டிலிருந்து ஓவ்வொன்றாக
நினைக்கும்போதே எங்கோ கடிக்கிறது............
பூவரசம் பூவே நலமா

பூவுக்குள் அரசாளும் பூவரசு
உன் அரசுரிமை உனக்கிருக்கிறது
பெயரோடும் ஒட்டியிருந்து ஒப்புவிக்கிறாய்!
தாயகத்தின் அடையாளத்தில் நிலைபெறு உரிமை உனக்கிருக்கிறது
தறித்தாலும் உன் வேர்களாலும் கதியால்களாலும் நீ வாழ்வாய்
புலமெங்கும் சென்றாலும் திரிந்தாலும்
அழகுறு மலர்களை எங்கெங்கும்
கண்ணாரக்கண்டு மகிழ்ந்தாலும்-உன்
முகமதில் மஞ்சொளிவீசும் அழகினில்
அகமது மகிழ்ந்திடும்-என்றென்றும்

பூவரசம் பூவே நலம் தானே,


படங்கள்- இணையம்

வந்தியண்ணைக்கு பிறந்த நாள்- பரிசுக்கான கேள்வி உள்ளே

உலகப்பிரபலமான நாளாக 11.11.11 என்ற நாளை எதிர்பார்த்து உலகமே தயாராகும் வேளை பதிவுலகப்பிரபலம்,பதிவுலக தங்கம் என்று அண்மையில் வரவேற்கப்பட்டவரும் வந்தியதேவன் என்ற பதிவுத்தளத்துக்கு உரித்தானவரும் வந்தி என்று அன்போடு அழைக்கபடுபவருமாகிய மயூரன் அவர்களின் பிறந்த நாள் இன்று.

தாயகத்தில் தன்னுடைய பிறந்த நாளை 09.11.11 அன்று வெகுசிறப்பாக கொண்டாட தயாராகிவருகிறார்.அண்மையில் ஐக்கிய ராஜ்ஜியம் லண்டனிலிருந்து கொழும்பு சென்ற வேளையில் மிகப்பெருமெடுப்பில் மாலைகள் சகிதம் வரவேற்கப்பட்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் வட்டத்தில் தயாராகின்றார்,


அந்தவகையில் பதிவுலக நண்பராக என்னோடு தாயகத்திலேயே அறிமுகமாக இருந்தாலும் லண்டனில் தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குகிட்டியது.சந்தித்ததில் மகிழ்ச்சியும் கொண்டேன்.வந்தி மாமா என்று என்போன்ற பதிவுலக பிள்ளைகளால் அழைக்கப்படும் மயூரன் அண்ணா அவர்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்,இனி அவர் பவுண்ட்ஸ்களாக அனுப்பினால் பார்ட்டி தான்.மயூரன் அண்ணாவோடு பழகிய நாள்களில் புகைப்படக்கருவி பதிவுசெய்துகொண்டவை கீழே.சீரியஸ் ஆகக்கூடாது,ஆனால் கடைசிக்கேள்விக்கு சீரியஸ் ஆகுங்க.முந்திக்கொண்டு வாருங்கள்.சிம்பிளாக யோசியுங்க,பரிசு ரெடியாக இருக்கிறது










கண்ட முதல் நாள் போட்டோவுக்காக சிரிச்ச போது






போனில் அண்ணை பிசியா அல்லது அப்பதான் அழைப்பு வந்ததா? கேள்விக்கு என்ன விடையாக இருக்கும்?????????????????????????????????







கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்குமே>>எப்பவுமே என்று நினைக்கிறீங்களா?
,இப்பவுமா அப்படித்தானா என்று பாருங்க கேளுங்க !!




மத்திய லண்டனின் பல உல்லாசபயண மையங்களுக்கு சதீஸோடு பயணம் இரவு வேளையில்!!!!!!


சாக்கோட்ட வீரனாக தவண்டடிச்சு ஓடி முதற் பரிசு வாங்க மறுத்த போது???????!!!!!!!!


அண்ணை உடற்பயிற்சி மற்றும் பணக்கார விளையாட்டுக்காக மைதானத்தில் !!!!1


மிகச்சிறந்த பாடகனாக அறியப்பட்டு பஸ்வண்டியில் பாடல் வாயே திறக்காமல் பாடியபோது!!!!!

தாயகத்தில் வழங்கபட்ட அமோக வரவேற்புவிழாவில்!!!!
கையசைத்து ஏற்றுக்கொள்ளும் காட்சி







கல்லூரியின் நிகழ்வு ஒன்றின் போது வந்தவர்களுடன் அன்பாக எடுத்த போட்டோ!!!!!!!



இனி பரிசுப்போட்டிக் கேள்விக்கான புகைப்படம்



இதிலை யார் தள்ளி நின்றது???
சைந்தவியா???வந்தியாரா?மிகப்பெரிய கேள்வி>>>>
அது பரிசுக்கான முதல் கேள்வி
வந்தியத்தேவருக்கு எத்தனையாவது பிறந்த நாள்?
அது அடுத்த கேள்வி
விடை தெரிந்தோருக்கு பிறந்த நாள் பரிசுக்குவியல்,பதிலோடு முந்துங்கள்




மீண்டும் இன்றைய நாளில் பிறந்த நாளை கொண்டாடும் வந்தியண்ணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகிர்ந்துகொள்கிறது கரவைக்குரல்

11/11/11 தயாராகும் உலகம்

ஒவ்வொரு நாளும் விடிந்து அது நிறைவடவதற்குள் எத்தனை விடயங்கள் எத்தனை செயற்பாடுகள் நடக்கிறது முடிகிறது,அவற்றுள் சில உலக வரலாற்றினுள் இடம் பிடித்துவுடுவதுமுண்டு,
இதைவிட வருகின்ற நாள்களே விசேடமாகி அவற்றுள் நாங்களும் இடம்பிடித்துவிட வேண்டுமென்று தயாராகின்றது உலகம்,
அந்த வகையில் இந்த வருடத்தில் அமைந்த நாள்களில் ஒன்று 11.11.11.




அதுவும் அந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தினுள் வரும் 11:11 நேரம் என்பதும் சிறப்பான நேரமாக பார்க்கபடுகிறது.உண்மையில் இதே பதினோராம் திகதி நவம்பர் மாதம் 1111ம் ஆண்டு எல்லாவற்றையும் விட சிறப்பான நாளாக இருந்திருக்கும்,என்றாலும் அந்த நாளில் அமைந்திருந்த தொழிநுட்ப வளர்ச்சியின் தன்மை இப்படியான எதிர்பார்ப்பை அந்த காலங்களில் வாழ்ந்த மக்களிடம் ஏற்படுத்தியிருக்குமா என்பது கேள்வியாகவே இருக்கிறது.அது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் ஏனைய வருடங்களை விட நான்கு நாள்கள் சிறப்பாக பார்க்கபட்டது,ஏனெனில் ஆண்டில் இலக்கங்கள் ஒரே இலக்கத்தில் வருவதனாலாகும்.11/11/11 என்ற நாளைவிட (1/1/11),(11/1/11),(1/11/11)ஆகிய ஏனைய மூன்று நாள்கள் தான் அவை.எதுவாயிருப்பினும்  நூற்றாண்டுகள் கடந்து வருகின்ற நவம்பர் மாதம் 11ம் திகதியை ஒரே இலக்கதொடர் நாளாக பார்க்கிறது உலகம்,அதனை அவரவர் நிலைகள், சிந்தனைகள், செயற்பாடுகளுகமைவாக சிறப்போடு எதிர்கொள்ள தயாராகின்றனர்.
இலக்கம் பதினொன்றிற்கும் சிறப்புகள் பல இருக்கிறது.எண்ணியல் பார்வையில் ஒரே இலக்கமாக அதுவும் ஆரம்ப இலக்கமான ஒன்றாக அமைந்திருப்பது விசேட தன்மையை கொண்டிருப்பதாக சொல்லபடுகிறது,அதற்கான ஏற்பாடுகளில் சோதிட வல்லுனர்களும் தயாராகிவிட்டார்கள்,சொல்லியும் விட்டார்கள்,மிகப்பலமான நாள் 11.11 என்று அடித்துக்கூறி இந்தவருடம் அமைந்திருக்கும் அந்த நாள் மிகச்சிறப்பு என்று அதுவும் வெள்ளிக்கிழமை வந்திருப்பது அதை உணர்த்தி நிற்கிறது என்று சோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இப்படி சோதிட எண்ணியல் வல்லுனர்கள் ஒருபுறம் தயாராகின்றனர்,
அதைவிட திரைப்பட உலகில் சிலம்பரசனின் நடிப்பில் வரும் ஒஸ்தி திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என்றூ கூறி தொடர்ந்து 11.11 அன்று வருவதாக கூறி பின்னர் 18ம் திகதியாகி இப்போது 25ம் திகதியை நோக்கி சென்றுவிட்டது,

இதே போலத்தான் தனுஷின் நடிப்பில் வெளிவர இருந்த மயக்கமென்ன திரைப்படம் 11.11 மட்டுமே வெளிவர வேண்டுமென்று அடம்பிடித்து இப்போது அதுவும் 25ம் திகதிவரை சென்றுவிட்டது.இதுவும் தீபாவளிக்குத்தான் வெளிவருவதாக இருந்தது.என்ன இது நம்மவர்கள் ஆச்சே,இதுதான் நேரம் என்றால் அதே நேரத்துக்கு வந்துவிடுவார்களே.

ஆனால் உலகமெங்கும் எதிர்பார்த்த ஜாக்கிஷானின் 100ஆவது திரைப்படமாகிய 1911 உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் 11/11/11 அன்று மு.ப 11.11 வேளையில் வெளிவர இருக்கிறது. சீனாவில் வரும் கொடுங்கோலாட்சி,அது 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கதை,அதை எதிர்க்கிறான் கதா நாயகன்,அதுவே 1911, ஜாக்கிஷானின் 100ஆவது திரைப்படமாகையால் உலகமே எதிர்பார்க்கிறது.


அதைவிட 11.11.11 என்ற திகதியை குறித்து விறுவிறுப்பான ஆங்கில திரைப்படமும் தயாராகிறது,கடந்த வருடம் 10.10.10 அன்று வெளிவந்த அதே திகதியின் பெயருடையதான திரைப்படம் வெளிவந்திருந்தது,அழகிய வண்ணாத்துபூச்சிகளும் சின்னஞ்சிறிய குட்டிசுட்டி பெண்ணின் நடிப்போடும் பல நடிகனடிகைகளின் சிரிப்போடும் வெளிவந்த அந்த திரைப்படத்தின் முன்னோட்டம் திரைப்படத்தின் சந்தோசமான தன்மையை வெளிப்படுத்தியிருந்தது,ஆனால் 11.11.11 என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் விறுவிறுப்பாகவும் அதேவேகத்தோடும் பல எதிர்பார்ப்புகளுக்கிடமாகவும் அதன் முன்னோட்டம் அமைந்திருகிறது,லண்டனெங்கும் விளம்பரப்பலகைகள் 11.11.11 என்ற முகத்தை காட்டியபடியேயிருக்கிறது.

இப்படியெல்லாம் 11,11,11 என்ற திகதிக்கான எதிர்பார்ப்புகள் அந்த நாளிற்கான விசேட தன்மையை கூறிநிற்கிறது.
அதுமட்டுமா இன்னொருபுறம் உலக அழகி ஐஸ்வர்யா,ஐசு என்று அன்பாக சொல்வார்கள் ரசிகர்கள்,


அவர் இப்போது ஏழு நட்சத்திர மருத்துவமனையில் இருக்கிறார்,ஐஸ்வர்யாவிற்கும் அபிசேக்பச்சனுக்கும் குழந்தை பிறக்கபோகிறது,அதுவும் 11.11.11 அன்று தான் பிறக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் குடும்பத்தினர்.அதற்கான திகதி அந்த நாளுக்குரிய வாரமாக இருந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் 11ம் திகதியே பிறக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனராம்.அபிசேக்பச்சன் படப்பிடிப்பு எல்லாம் அவசர அவசரமாக முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறாராம்.அதைவிட ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறம் அந்த திகதியே குட்டி அபிசேக் பிறக்க வேண்டும் என்று பந்தயம் கட்டுகிறார்களாம்.உலக அழகிக்கு உலகவிசேடதினத்தில் தான் குழந்தை என்றுதான் பந்தயம் கட்டுகிறார்கள்.இப்படி உலகப்பிரசித்தமாக 11.11.11 ஐ கொண்டாட தயாராகின்றது உலகம்.
அதைவிட இந்தியாவில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட கல்யாண கொண்டாட்டங்களுக்கான முன்பதிவு,
பல ஒன்றுகூடல்கள் உலகளவில் ஏற்பாடு என்று அதற்கான எதிர்பாப்பை அதிகரித்திருக்கிறது,ஆனால் இவையெல்லாம் வர்த்தக நோக்குடைய சிந்தனை என்பதையும் மறுப்பதற்கில்லை,என்றாலும் உலகளவில் பல துறை சார்ந்தவர்களையும் கவர்ந்த எதிர்பார்ப்புகள் நிறந்த ஓர் தினமான வருகிறது 11.11.11.பிரபலங்களுக்கு பிரபலம் மற்றும் பிற பலம் சேர்க்கும் நாளாக வருகிறது,

யாரும் பிரபலங்களை மிஸ் பண்ணியிருக்கலாம்,உங்களுக்கு ஞாபகம் வராமலாபோய்விடும். பிரபலங்களுக்கே பிரபலமாகவும் பல பிரபலங்களை நினைவூட்டும் 11.11.11 உலக வரலாற்றில் தனக்கும் ஒரு தனியாய இடத்தை தக்கவைக்கிறது

ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரமா? தாயக உணர்வு சந்திப்பா?


அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தினை தொடர்ந்து லண்டனுக்கும் விஜயம் செய்திருக்கிறார்கள் கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள். கனேடிய மண்ணில் புலத்து மக்களால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வை தொடர்ந்து லண்டனிலும் 06/12/2011 ஞாயிற்றுக்கிழமை நடத்த ஏற்பாடாகியிருக்கிறது,நேற்று சனிக்கிழமை காலை லண்டனுக்கு வருகை தந்திருக்கிறார்கள்,



லண்டனில் ஞாயிற்றுக்கிழமை சிறந்த ஒரு ரெஸ்ரோரண்டில் மக்களை சந்திக்கப்போகிறார்கள்,புலம்பெயர் மக்களுடன் சந்தித்து அவர்களின் கருத்துகளும் அதேபோல் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளுடைய கருத்துக்களை மக்களும் அறிந்து இதனூடாக உலகஅரங்கில் தமிழின இன உணர்வு செயற்பாடுகளை விரிவுபடுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இதை நோக்க முடிகிறது,புலம்பெயர் ஊடகங்களுக்கும் அழைப்பினைவிடுத்து மேற்கொள்ளப்படுதல் அந்த செயற்பாடுகளினுடைய உந்து சக்தியாக இருக்கும்,பொதுவாக தாயக மக்கள் கூடியளவு இருக்கும் கனடா,இங்கிலாந்தில் லண்டன்,அவுஸ்ரேலியா போன்ற இடங்களில் இப்படியான செயற்பாடுகள் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கலாம்,அந்த அடிப்படையில் தெரிவுசெய்யபட்டு சந்திப்பு மேற்கொள்ளப்படும் இடங்கள் வரவேற்கக்கூடியவை,

மக்களோடு கலந்துரையாட கனடாவில் ஏற்பாடு மிகப்பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது,சினிமா நடிக நடிகைகளையும் சின்னத்திரை நடிக நடிகைகளையும் அழைத்து அவர்களை சந்திக்க வைத்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க டிக்கடுக்கு கட்டணம் அறவிட்டு நடாத்தபடும் நிகழ்ச்சி அண்மையில் கனடாவில் நடைபெற்றபுகைப்படங்கள் ஆரம்ப உரை முதல் இராப்போசன விருந்து வரை வெளியாகியிருந்தது,தாயக மக்கள் மிகச்சிறந்த அரசியல் வெற்றியோடு இருப்பதை உணர்த்தும் விதமாக அந்த சந்திப்பு அமைக்கபட்டதா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்திருந்தமை அவதானிகள் மத்தியில் அறிய முடிகிறது,தாயக மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதார அபிவிருத்தி மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக பாராளுமன்றங்களிலும் அரசியல் மேடைகளிலும் முழக்கமிடும் அரசியல் வாதிகள் இப்படியான ஐந்து நட்சத்திர உபசரிப்பை மறுத்திருக்கலாமே என்ற கேள்வி தாயக உதவிக்கரம் நீட்டும் சிந்தனைவாதிகள் மத்தியில் எழுந்திருக்கிறது,இந்திய சினிமா மற்றும் கலை நட்சத்திரங்களோடும் புகைப்படம் எடுப்பதற்கு முந்திக்கொள்வதுபோல் ஈழத்தினுடைய அரசியல்வாதிகளும் அதற்கு வழிசமைக்கிறார்களா என்ற கேள்வி தான் அது,
அதைத்தான் ஈழசிந்தனை மக்களுடைய உணர்வாகியிருக்கும் காலகட்டங்களில் அதனை பிரதிநிதித்துவபடுத்தும் மக்கள் பிரதிநிதிகள்  அவர்களை சந்திப்பதனை ஒரு வாய்ப்பாகக்கொள்ளவைக்கவும் மக்கள் அவர்களை சந்திப்பதானால் அதை ஏங்க வைக்கும் ஒரு செயற்பாடாகவும் கொண்டு வந்து ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வர முனைகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்,அல்லது இல்லை இல்லை இது முற்றுமுழுதான தாயக உணர்வு சந்திப்பேதான் என்று அறுதியும் உறுதியுமாக உரைக்கிறார்களா?
பொதுவாக மக்களிடம் தேர்தல்காலங்களில் ஒவ்வொரு வாக்குகளுக்காகவும் வீடேறி கையேந்திவிட்டு பாராளுமன்றங்களில் நட்சத்திர உணவுகளை மிகக்குறந்த விலைகளில் உண்டு மகிழ்கிறார்கள் என்ற கருத்து ஏலவே மக்கள் மத்தியில் இருக்கிறது,அது எந்த இனத்தை சார்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தலாம்,
அதுஅப்படியிருக்க இப்படியான மிகப்பெறுமதியான டொலர்களையும் பவுண்ட்ஸ்களையும் கொட்டி ஏற்பாடு செய்யும் சந்திப்பு அவசியமா? சாதாரண மக்களும் கூடி மக்கள் பிரதி நிதிகளை சந்திக்ககூடிய ஏற்பாடுகள் அமையாதா என்பது எல்லா மட்டத்தினரும் சிந்திப்பதாக அறியமுடிகிறது.
வந்திருக்கும் பிரதிநிதிகளின் உரையின் பின் உணவு உண்டு அந்த புகைப்படங்களையும் பிரசுரித்து இந்த சந்திப்புகளினூடாக என்ன விடயத்தினை தாயக மக்களுக்கு கொண்டு செல்லபோகிறார்கள் என்ற தெளிவான அறிக்கையினை மக்கள் பிரதிநிதிகள் வெளியிடுவாரா? புலம்பெயர்மக்களின் உணர்வுகளையும் தெளிவான சிந்தனைகளைகளையும் கருத்துகளையும் இந்த சந்திப்புகளினூடு அறிந்துகொள்ளலாமென்றால் சந்திப்பிற்காக கட்டணம் செலுத்த முடியாதவர்களின் கருத்துகளை எப்படி அறிந்துகொள்வது என்ற கேள்வி அவதானிகள் மத்தியில் எழுகிறது,எங்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உபசரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துச் சொன்னால் அது நன்றிக்கடன் தெரியாத தமிழனாகிவிடுவான், ஆனால் நட்சத்திர சந்திப்பு வைப்பதுதான் தாயகம் நோக்கிய சிந்தனைவாதிகளின் கேள்வியாகிட்டது.மிகக்குறந்த செலவோடு ஏராளமான மண்டபங்கள் இருக்க அதுவும் டிக்கட் கட்டண அறவிட்டோடு வரும் போது அந்த கேள்வி எழுவது நியாயமாகிறது,புலத்தில் தமிழர்கள் எத்தனையோ பதவிகளிலும் உயர் நிலைகளிலும் இருப்பதால் மண்டபங்களுக்கான தொகை சிறிய தொகை என்பதால் அது உயர் நிலை தமிழர்களுக்கு மிக இலகு,சரி வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த இப்படியான நிலையை கையாண்டிருக்கலாம் என்றால் சிறிய மண்டபத்திற்கான செலவோடு மிகுதிப்பணத்தை வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்து அந்த பணத்தை தாயக மக்களுக்காக பயன்படுத்த ஆவனசெய்திருக்கலாமே என்று கேட்கிறார்கள் உதவிக்கர சிந்தனைவாதிகள்.மாறாக பல்துறை சார்ந்தவர்களை நிகழ்விற்கு அழைத்து அந்த சந்திப்பில் இணைத்திருக்கலாமே என்ற கருத்தும் நிலவுகிறது.இவையெல்லாம் கவனத்திலெடுக்கபடவேண்டிய விடயங்களாகின்றன,
இன்று நடபெறவுள்ள மண்டபத்தின்
உத்தியோகபூர்வ இணயத்தளம்
இங்கு இணைக்கபட்டிருக்கிறது.

என்றாலும் தாயக மக்களுடைய செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களுடைய சிந்தனைகளும் அவசியமாகிறது என்பதும் அவர்களின் ஒத்துழைப்பு வெற்றியோடுதான் எதுவும் ஆகலாம் என்பதை இந்த சந்திப்புகள் உலகத்திற்கும் உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கும் சொல்லபடுகின்ற செய்தியாகிறது,
தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை நாளில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரமுகர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது,கூட்டமைப்பாக உலக அரங்கில் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை சகல நாடுகளின் பிரமுகர்களுக்கு கொண்டு செல்வது சிறப்பானதே, தனித்துவத்தோடு தகுந்த முடிவுகளை எடுத்து சிறப்பான முன்னேற்பாடான செயற்பாடுகளுக்காக துணிச்சலான இப்படியான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்தபட வேண்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் அதையே சந்தர்ப்பங்களாக்கபடக்கூடாது என்பதும் மக்களுடைய சிந்தனை.புலத்துமக்களின் வாய்களில் உச்சரிக்கப்பட்ட மற்றும் ஊடகங்களின் கருத்துகளின் தொகுப்பாக இந்த பதிவு வருகிறது,உங்கள் கருத்துகள் ஆரோக்கியமாக பதிவு விதிமுறைகளுக்குட்பட்டு நாகரீகமாக இருப்பின் எல்லாமே பிரசுரிக்கபடும்,



என்னங்க ரொம்ப வெயிட்டா இருக்கு, எண்டாலும் இதையும் சாப்பிட்டு பார்ப்பம்


போட்டோவுக்கு சிரிச்சே ஆகவேணும்,வெப்சைட்டிலை வரும் போது நல்லா இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1


ஓஓ டயபிற்றிக் பிறசர் இருக்கிறவர்களுக்காக கொஞ்சம் உப்பு உறைப்பு கொழுப்பு எல்லாம் குறைச்சுத்தான் சமைச்சது, நல்லா இருக்கோ??????????????
ஓஓஓஓஒ திறமா இருக்கு!!!!!!!!!!!!!!


இதென்ன இது அந்த காலம் தந்த ரோசாப்பூ இப்பவும் வச்சிருக்கிறீங்களோ????
வாடாமல் இருக்கு????



எத்தனை மேடை ஏறியாச்சு?அரசியல் பேச்சு எண்டால் கலக்கல் தான்!!!!!!


அது சரி எப்ப சாப்பாடு??


என்ன இருந்தாலும் ஒரு குழம்பு இருக்க வேணும், கண்டு பிடிச்சு தந்திட்டீங்கப்பா!!!!!!!!

புகைப்படங்களுக்கான பின்னூட்டம் சற்று நகைச்சுவைக்காகத்தான்,போட்டொ எடுக்கும் போது என்ன பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று யாருக்கு தெரியும்.